Quantcast
Channel: செங்கோவி
Viewing all 271 articles
Browse latest View live

ஹிட்ச்காக்கின் Secret Agent (1935) - திரை விமர்சனம்

$
0
0

டிஸ்கி:நிறுத்தி வைக்கப்பட்ட சீக்ரெட் ஏஜெண்ட். இப்போ ரிலீஸ்! 

18படங்கள் எடுத்து ஒரு திறமையான த்ரில்லர் பட இயக்குநராக ஹிட்ச்காக் தன்னை நிலைநாட்டியபின் எடுத்த படம், Secret Agent.  படம் பெரும் தோல்வியை அடைந்தது. வெற்றியை விட தோல்வியே நல்ல ஆசான் என்பதால், ஹிட்ச்காக் பல பாடங்களை இந்தப் படம் மூலம் கற்றுக்கொண்டார். படத்தையும் பாடத்தையும் பார்ப்போம், வாருங்கள்.
முதல் உலகப்போரின் பிண்ணனியில் நடக்கும் கதை. பிரிட்டிஷ் உளவுத்துறை ஹீரோ(John Gielgud)வை ஒரு மிஷனுக்காக ஸ்விட்ச்சர்லாந்துக்கு அனுப்புகிறது. ஒரு ஜெர்மன் உளவாளியைக் கொல்ல வேண்டும் என்பதே அந்த மிஷன். அங்கே அவருக்கு உதவ, ஹீரோவின் மனைவியாக நடிக்க ஹீரோயின்(Madeleine Carroll) வருகிறார். கூடவே ஜெனரல் என்பவரும் இதில் சேர்ந்துகொள்ள, மூவரும் சேர்ந்து அந்த உளவாளியை கொன்றார்களா என்பதே கதை.

வெறும் ஆக்சன் கதை போல் தோன்றினாலும், இந்தப் படம் ஸ்பைகளின் இருண்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது. அவர்கள் போலி முகத்துடன் தான் நடமாடுகிறார்கள். அவர்கள் சந்திக்கும் நபர்களும் போலிகளாகவே இருக்கிறார்கள். எது உண்மை என்று பிரித்தறிவதிலேயே  அவர்களின் வாழ்க்கை கழிகின்றது. தேசத்திற்காக, உலக அமைதிக்காக எனும்பெயரில் கொலை செய்யும் நிலைக்கும் ஆளாகிறார்கள். ஆனாலும் அவர்களின் மனசாட்சி அவர்களை உறுத்தவே செய்கிறது. Secret Agent படம், அந்த மன உறுத்தலை மையமாகக் கொண்டே நகர்கிறது. இது ஒரு டார்க் சப்ஜெக்ட், ஒரு கமர்சியல் த்ரில்லருக்கான டாபிக்கே இல்லை இது. படத்தின் முதல் சறுக்கல் அங்கே தான் ஆரம்பிக்கிறது.

முந்தைய படத்தைப் போல் அல்லாமல் ஹீரொ கேரக்டர் மிகவும் சீரியசான ஆளாக வலம்வருகிறது. யாரோ ஒரு மனிதனைக் கொல்வது மட்டுமே ஹிரோவின் குறிக்கோள் என்பதும் நம்மை படத்துடன் ஒன்றவிடாமல் அன்னியப்படுத்திவிடுகிறது. நகைச்சுவை உணர்வற்ற, குறிக்கோள் மீது பெர்சனலாக ஆர்வமற்ற ஹீரோ என்பது படத்தின் மிகப்பெரும் குறை. 
அடுத்து, குறிக்கோள் என்பது ஒரு மனிதனைக் கொல்வது எனும் நெகடிவ் விஷயம். அந்த மனிதனை ஏன் கொல்ல வேண்டும் என்பதற்கான நியாயங்கள் எதுவும் விவரிக்கப்படவில்லை. எதிரி நாட்டு ஆள், எனவே கொல்லப்பட வேண்டும் எனும் சிம்பிளன Maccuffin உத்தி, இந்தப் படத்திற்கு ஆப்பு வைத்தது.

படத்தில் வரும் ஜெனரல் எனும் கேரக்டர், காமெடியனா அல்லது வில்லனா என்பதில் பெரும்குழப்பமே நிலவுகிறது. ஹீரோயினுடன் இருக்கும்போது காமெடியனாகவும்(லூசாகவும்), டார்கெட்டை நெருங்கும்போது கொலைகாரனாகவும் மாறும் அந்த கேரக்டரை நம்மால் ரசிக்க முடிவதில்லை.

முதலில் ஹீரோ ஒரு தவறான ஆளைக் கொல்ல முயற்சிக்கிறான். படத்தில் கொல்லப்படும் அந்த ஜெர்மானியருக்கும் அவரது நாய்க்குட்டிக்குமான உறவு நன்றாகச் சொல்லப்பட்டிருக்கும். அவர் வேறொரு இடத்தில் கொல்லப்படுவதை உள்ளுணர்வால் அறிந்து நாய் துடிக்கும் காட்சி நன்றாக இருக்கும். அதில் ஒரே பிரச்சினை, அந்தக் கொலையைச் செய்வது ஹீரோ குரூப் என்பதால் நம்மால் முழுமையாக அந்தக் காட்சியில் ஒன்ற முடியாது. ஆரம்பத்தில் ஜெர்மன் உளவாளியைக் கொல்ல ஆவலாக இருக்கும் ஹீரோயின், அந்த உயிரிழப்பு ஒரு குடும்பத்தில் ஏற்படுத்தும் வேதனையைப் புரிந்துகொள்கிறாள். ஹீரோவின் மனதையும் மாற்றப் போராடுகிறாள். ஆனாலும் உடன் இருக்கும் ஜெனரலாலும் ஹீரோவாலும் அவள் விருப்பம் முழுக்க நிறைவேறுவதில்லை. எனவே ஹீரோயினுக்கு இருந்த பாசிடிவ் குறிக்கோளும் நிறைவேறவில்லை.

ஹிட்ச்காக் எந்த ஊரில் படத்தை எடுக்கிறாரோ, அந்த ஊரில் உள்ள புகழ்பெற்ற இடங்களை கதையுடன் இணைப்பது வழக்கம். இதிலும் ஆல்ப்ஸ் மலையை ஒரு கொலை நடக்கும் இடமாகவும், அங்குள்ள சாக்லேட் ஃபேக்டரியை வில்லன்களின் கூடாரமாகவும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியிருப்பார். The 39 Steps-ல் ஆரம்பித்த ஸ்டைல் அது. இதிலும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கும். அதே போன்றே ஹீரோவின் பயணத்தில் இணையும் ஹீரோயின் எனும் உத்தியும் இங்கே உண்டு.

ஹீரோ, அவனுக்கு மனைவியாக நடிக்க வரும் ஹீரோயின் என்பதை வைத்து காமெடியாக சில காட்சிகளை வைத்திருக்கலாம். The 39 Steps-ல் பத்து நிமிடத்திற்கே ரகளை செய்திருப்பார் ஹிட்ச்காக். ஆனால் இங்கே படம் முழுக்க அப்படி ஹீரோ-ஹீரோயின் நடித்தாலும், படம் சீரியசாகவே நகர்கிறது. ஹீரோவை சவசவ கேரக்டராக படைத்தது தான் பிரச்சினை.
தவறான குறிக்கோள் மற்றும் தவறான ஹீரோ பாத்திரப்படைப்பு தான் இந்தப் படத்தின் குறை என்று ஹிட்ச்காக் உணர்ந்துகொண்டார். ஒரு படத்தின் வெற்றி என்பது பார்வையாளர்கள் படத்துடன் ஒன்றுவதில் இருக்கிறது. அவர்கள் ஹீரோ கேரக்டருடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, ஹீரோவின் குறிக்கோளுடன் பயணிக்க வேண்டும். அது இங்கே மிஸ்ஸிங் என்று ஹிட்ச்காக் பின்னர் உணர்ந்தார். இருப்பினும் தொடர்ந்து ஹிட் கொடுத்த இயக்குநர் என்பதால், இந்தப் படமும் வணிகரீதியாக வெற்றி பெற்றது. ஆனால் படைப்புரீதியில் தான் தோற்றுவிட்டதை ஹிட்ச்காக் உணர்ந்திருந்தார். யானைக்கும் அடி சறுக்கும், இல்லையா?

Download Link: http://kickass.to/secret-agent-1936-internal-dvdrip-xvid-qim-t6109014.html

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-14)

$
0
0
14. கதை சொல்லும் முறை

ஒரு ஹீரோ. அவனுக்கு ஒரு குறிக்கோள். அதற்கு தடை பண்ண ஒரு வில்லன். இந்த மூன்றையும் வைத்து, ஒரு கதை இப்படி ஆரம்பித்து இப்படி முடிகிறது என்று ஒரு ரஃப் ஐடியாவுக்கு வந்துவிடலாம். அதை வைத்து ஒரு பக்கம் முதல் நான்கு பக்கங்களுக்குள் ஒரு கதையை எழுதிவிடலாம்.

கதை எழுத ரெடியா? அதற்கு முன் சில முக்கியமான விஷயங்களை ஓஷோ மற்றும் ஹிட்ச்காக் மூலம் கற்போம். ஓஷோவா? சாமியார்க்கும் திரைக்கதைக்கும் என்னய்யா சம்பந்தம்ன்னு யோசிக்கிறீங்களா? சொல்றேன். சிக்கலான ஆன்மீக விஷயங்களை நகைச்சுவையாகச் சொல்வதில் வல்லவர் ஓஷோ ரஜனீஷ். அவருடைய ஜோக்குகள் உலகப் புகழ்பெற்றவை.

அப்படி ஒருமுறை ஜோக் பற்றிப் பேசும்போது, ஒரு ஜோக் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கியிருந்தார். அது எந்த புத்தகத்தில் வந்தது என்பதுகூட மறந்துவிட்டது. அவர் சொன்னதின் சாராம்சம் இது தான்: மக்களுக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை சொல்ல ஆரம்பிக்கிறோம். (தெரியாத விஷயம் என்றால் அதை ஓரிரு வரியில் விளக்குகிறோம்.) முதலில் அது சாதாரணமானதாகவே தோன்றும். கடைசிவரியில் ஒரு ட்விஸ்ட் வைக்கிறோம். இது இப்படித்தான் முடியும் என்றோ அல்லது அசுவாரஸ்யமாகவோ கேட்டுக்கொண்டிருந்தவருக்கு, அந்த ட்விஸ்ட் ஒரு சர்ப்ரைஸைக் கொடுக்கும்.
ஜோக் என்ற பெயரில் வரும் ஒருவரி கவுண்டர் பஞ்ச்களையோ அல்லது வார்த்தை விளையாட்டையோ அவர் சொல்லவில்லை. ஒரு சிறுகதை போல், சிறுகுறிப்பு போல் வரும் ஜோக்குகளுக்கு அதைச் சொன்னார். நீங்க கொஞ்சம் பொறுத்துக்கிட்டீங்கன்னா, ஒரு சுயதம்பட்டத்தோட இதை விளக்கிடலாம்.
எனது நானா யோசிச்சேன் பதிவில் வந்த எனது நகைச்சுவை அனுபவம் ஒன்று கீழே தர்றேன். படிங்க:

போலீஸ் ஸ்டோரி-1:

எங்க ஏரியால சீன் படத்தையும் ‘இங்கிலீஸ் படம்-A படம்’ன்னு சொல்வாங்க. ஒருநாள் ஸ்கூலை கட் அடிச்சிட்டு, ஜாக்கிசான் படம் பார்க்கப் போயிருந்தேன். நம்ம ஊரு ஆளு ஒருத்தரு பார்த்துட்டு வீட்ல போய்ச் சொல்லிட்டாரு. சொன்னவன் கரெக்டாச் சொல்ல வேண்டாமா? அதை விட்டுட்டு ‘சின்னைய்யா, உம்ம மகன் படிக்கப்போகாம இங்கிலீஸ் படம் பார்த்துட்டுத் திரியறான்.,கண்டுச்சு வைய்யும்’ன்னு சொல்லிட்டாரு. 

வீட்டுக்குப் போறேன், நைனா பஞ்சாயத்துக்கு ரெடியா இருக்காரு. ’என்னய்யா..படிக்க அனுப்புனா, படம் பார்த்துட்டுத் திரியறீகளாமே’ன்னு ஆரம்பிச்சாரு. ‘ஆமாப்பா..எங்க கிளாஸ்க்கு மட்டும்(!) லீவு விட்டாங்க..பசங்கள்லாம் கூப்பிட்டாங்க’ன்னு இழுக்கும்போதே ‘அதுக்கு?..இங்கிலீஸ் படத்துக்குப் போவீகளோ?’ன்னாரு. எனக்கும் முதல்ல மேட்டர் உறைக்காம’ ஆமாப்பா..சண்டை சூப்பரா இருக்கும்..பார்க்க காமெடியாவும் இருக்கும்ப்பா’ன்னு சொல்லவும் அப்பன்கிட்டயே டபுள் மீனிங்கான்னு காண்டாகிட்டாரு.

அப்புறம் தான் அவரு வேற இங்கிலீஸ் படத்தைப் பத்தி பேசறாருன்னு புரிஞ்சிக்கிட்டு ‘இல்லைப்பா..இது நல்ல படம் தான்..கராத்தே சண்டைப்படம்’ன்னேன். கொஞ்சம் டவுட் குறைஞ்சு ‘அப்படியா..என்ன படம்ப்பா அது? படத்துப் பேர் என்ன?’ன்னாரு. எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு. ‘என்னய்யா முழிக்கிறே? பேரைச் சொல்லு’ன்னாரு. வேற வழியே இல்லாம, பேரைச் சொன்னேன் “புராஜக்ட் A".

அப்புறம் நடந்ததைச் சொல்லணுமா!


படிச்சிட்டீங்களா? அதே சம்பவத்தை கீழே சின்ன மாற்றத்தோட எழுதியிருக்கேன். வேற வழியில்லை, படிங்க:


போலீஸ்ஸ்டோரி:

ஒருநாள்ஸ்கூலைகட்அடிச்சிட்டு, ஜாக்கிசான்படம்பார்க்கப்போயிருந்தேன். நம்மஊருஆளுஒருத்தருபார்த்துட்டுவீட்லபோய் சின்னைய்யா, உம்மமகன்படிக்கப்போகாமஇங்கிலீஸ்படம்பார்த்துட்டுத்திரியறான்.,கண்டுச்சுவைய்யும்ன்னுசொல்லிட்டாரு

வீட்டுக்குப்போறேன், நைனாபஞ்சாயத்துக்குரெடியாஇருக்காரு. ’என்னய்யா..படிக்கஅனுப்புனா, படம்பார்த்துட்டுத்திரியறீகளாமேன்னுஆரம்பிச்சாரு. ‘ஆமாப்பா..எங்ககிளாஸ்க்குமட்டும்(!) லீவுவிட்டாங்க..பசங்கள்லாம்கூப்பிட்டாங்கன்னுஇழுக்கும்போதேஅதுக்கு?..இங்கிலீஸ்படத்துக்குப்போவீகளோ?’ன்னாரு. எனக்கும்முதல்லமேட்டர்உறைக்காமஆமாப்பா..சண்டைசூப்பராஇருக்கும்..பார்க்ககாமெடியாவும்இருக்கும்ப்பான்னுசொல்லவும் காண்டாகிட்டாரு.

இல்லைப்பா..இதுநல்லபடம்..கராத்தேசண்டைப்படம்ன்னேன்

அப்படியா..என்னபடம்ப்பாஅது? படத்துப்பேர்என்ன?’ன்னாரு

எனக்குபக்குன்னுஆகிடுச்சு

என்னய்யாமுழிக்கிறே? பேரைச்சொல்லுன்னாரு

வேறவழியேஇல்லாம, பேரைச்சொன்னேன்புராஜக்ட்A".

ஏன்னா எங்கஏரியாலசீன்படத்தையும்இங்கிலீஸ்படம்-A படம்ன்னுசொல்வாங்க. அதனால தான் அவர் கடுப்பாகிட்டாரு. அப்புறம்நடந்ததைச்சொல்லணுமா!

இரண்டிற்கும் வித்தியாசம் பெரிதாக ஒன்றும் இல்லை. மேலே சிவப்புக் கலரில் இருக்கும் விஷயத்தை முதலில் இருந்து கடைசிக்கு நகர்த்தியிருக்கிறேன். ஆனால் இரண்டும் கொடுக்கும் எஃபக்ட் வெவ்வேறானவை.
முதல் ஜோக்கை படிக்கும்போது, ‘எங்க ஏரியாவில் இங்கிலீஸ் படம் - ஏ படம்ன்னு சொல்வாங்க’ எனும் தகவல் உங்களுக்கு முதலிலேயே தரப்படுகிறது. அடுத்து ‘இங்கிலீஸ் படம் பார்த்துட்டு திரியறான்’ என்பது சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. முடிவில் புராஜக்ட் ஏ என்று சொன்னதும், ஒரு சர்ப்ரைஸும் ‘மாட்டுனான்’ எனும் சந்தோசமும் உங்களுக்கு கிடைக்கிறது. இரண்டாவது உதாரணத்தில் நைனா கடுப்பாவது ஸ்கூல் கட் அடித்ததற்கு மட்டும் தான் என்ற தோற்றம் வருகிறது. எனவே புராஜக்ட் ஏ என்று சொல்லும்போது, பெரிய சிரிப்பு வருவதில்லை. பின்னர் சிவப்புக் கலரில் விளக்கம் வரும்போது, ஒரு புன்னகை வேண்டுமானால் வரலாம்.

ஜாக்கிசான் நடித்த படம். அது இங்கிலீஸ் படம். எங்க ஏரியாவில் சீன் படத்தை இங்கிலீஸ் படம் என்று சொல்வார்கள். ஏ படம் என்றும் சொல்வார்கள், புராஜக்ட் ஏ. – இந்த ஐந்து இன்ஃபர்மேசனும் சேர்ந்து கொடுக்கும் எஃபக்ட் தான் அந்த நகைச்சுவை. எதை படிப்பவர்க்கு முதலில் தருவது, எதை பின்னர் தருவது என்பதில் தான் இருக்கிறது விஷயமே. முதல் ஜோக்கில் முதல்வரியிலேயே புராஜக்ட் ஏ படத்திற்குப் போனோம் என்று சொல்லாமல், படத்தின் பெயர் ஏன் தவிர்க்கப்பட்டுள்ளது என்று யோசியுங்கள்.

இதே சம்பவத்தை ‘குழந்தைகள் மீதான வன்முறை’ எனும் தலைப்பில் பேசும் முற்போக்கு அறிவுஜீவி சொன்னால், எப்படிச் சொல்வார் என்று கற்பனை செய்துபாருங்கள். செய்யாத தவறுக்காக குழந்தையின்மீது ஏவப்பட்ட கொடூர தாக்குதல் எனும் ரேஞ்சில் பில்டப் ஏறிவிடும். இதில் இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால், என் அப்பா என்னை ஒருமுறைகூட அடித்தது கிடையாது. ‘அப்புறம் நடந்ததைச் சொல்லணுமா!’ என்பதில் உறங்குகிறது அந்த உண்மை! அதைச் சொல்லியிருந்தால், ஜோக் என்ன ஆகியிருக்கும் என்று பாருங்கள். (இன்னொரு உதாரணம்: பாம்பு மாசமா இருப்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?)

இது தான் ஒரு கதை சொல்லும்போதும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது. சிலர் ஆரம்பிப்பார்கள். ‘மச்சான்..இன்னிக்கு என்ன ஆச்சு தெரியுமா? செம காமெடிடா’ என்று ஒரு சம்பவத்தை பயங்கர சிரிப்புடன் விவரிப்பார்கள். நமக்குத்தான் சிரிப்பே வராது. உண்மையில் அது காமெடியான விஷயமாகவே இருக்கும். ஆனால் சொல்லும் ஆர்டரில் அது வெறும் சம்பவமாக வெளிப்பட்டு விடும்.

காரணம், எதை முதலில் சொல்வது, எதை சொல்லாமல் விடுவது என்பதில் கவனம் எடுக்காமல் சொல்வதால்தான். உங்களிடமும் ஒரு நல்ல கதை இருக்கலாம். ஆனால் அதை சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லவில்லை என்றால் சொதப்பிவிடும்.

இந்த ஓஷோவின் அறிவுரையை மனதில் நிறுத்துங்கள். அத்துடன் ஹிட்ச்காக்கின் அறிவுரையையும் சேர்த்தால்……….

(தொடரும்)

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-15)

$
0
0
15. பாம் தியரி
டிஸ்கி:இந்தப் பதிவில் வரும் விஷயம் ஏற்கனவே இந்த பதிவில் (http://sengovi.blogspot.com/2014/02/blog-post.html) பார்த்தது தான். இருப்பினும் அதை இந்த தொடரில் மீண்டும் சொல்வது அவசியம் என்பதால்..

ஓஷோவின் அறிவுரையை குறித்துக்கொண்டீர்கள் அல்லவா? இப்போது சஸ்பென்ஸ் திரைக்கதை மன்னன் ஹிட்ச்காக் சொன்ன முக்கியமான விஷயத்தைப் பார்ப்போம்.
சஸ்பென்ஸ் எனும் வார்த்தையை நாம் பொதுவாக தவறான அர்த்தத்திலேயே பயன்படுத்தி வருகிறோம். ஒரு விஷயம் நமக்கு சொல்லப்படாமல் மறைக்கப்பட்டால், ‘ரொம்ப   சஸ்பென்சா கொண்டுபோயிருக்கான்யா’ என்று சொல்கிறோம். ஆனல் அது சஸ்பென்ஸ் அல்ல, சர்ப்ரைஸ். நாம்பொதுவாகஇரண்டையும்ஒரேபொருளிலோஅல்லதுமாற்றிமாற்றியோதான்உபயோகிக்கிறோம்.

தமிழில் Suspense என்பதைஆவலுடன்கூடியதவிப்புஎன்றுமொழிபெயர்க்கலாம். Surprise என்பதுஆச்சரியம்அல்லதுஅதிர்ச்சியைக்குறிக்கும். ஹிட்ச்காக் கொடுத்த பேட்டியில் இதை அழகாக விளக்கி இருப்பார். அவர் சொன்ன விளக்கம் ’பாம் தியரி’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

இரு நபர்கள் டேபிளின் அருகே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் டேபிளுக்குக்கீழேஒருபாம்வைக்கப்பட்டிருப்பதாகக்கொள்வோம். அதுஅவர்களுக்கும்ஆடியன்சுக்கும்தெரியாது. திடீரெனபாம்வெடிக்கின்றது. ஆடியன்ஸ்சர்ப்ரைஸ்ஆகிவிடுவார்கள். ஆனால்பாம் வெடிக்கும்வரை, இதுஒருவழக்கமானசாதாரணசீன்தான். ஆடியன்ஸ்மனதில்எந்தஎதிர்பார்ப்பையும்விளைவுகளையும்உண்டாக்காதசாதாரணசீன்அது

இப்போதுஇப்படிவைத்துக்கொள்வோம். ஆடியன்ஸுக்குபாம்வைக்கப்பட்டிருப்பதுஏற்கனவேதெரியும். வில்லன்வந்துபாம்வைக்கும்சீனைஇதற்குமுன்அவர்கள்பார்த்திருக்கிறார்கள். ஆனால்பேசிக்கொண்டிருக்கும்இருவருக்கும்அதுதெரியாது. இன்னும்கால்மணிநேரத்தில்பாம்வெடிக்கும்என்பதையும்ஆடியன்ஸ்அறிவார்கள். ஆனால்அதைஅறியாமல்அந்தஇருவரும்கேசுவலாகபேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது ஆடியன்ஸ் மனநிலையை யோசித்துப்பாருங்கள். ’அடவெண்ணைவெட்டிகளா, கீழேபாம்இருக்குடா. எந்திரிங்கடாஎன்றுபதறுவார்கள். அதேசீன்தான். அதேவழக்கமானஉரையாடல்தான். ஆனால்ஆடியன்ஸும்இந்தசீனில்பங்குபெறுகிறார்கள். இதுதான்சஸ்பென்ஸ். என்ன ஆகப்போகிறதோ எனும் ஆவலுடன் கூடிய தவிப்பில் ஆடியன்ஸ் சிக்கிக்கொள்கிறார்கள்.

முதல்உதாரணத்தில்ஆடியன்ஸுக்குநாம்பாம்வெடிக்கும் 15 செகண்ட்ஸ்சர்ப்ரைஸ்மட்டுமே கிடைக்கிறது.இரண்டாவதுஉதாரணத்தில் 15 நிமிடசஸ்பென்ஸ்ஆடியன்ஸுக்குகிடைக்கிறது.
இது தான் பாம் தியரி. இதை நாம் இன்னும் டெவலப் பண்ணுவோம். முதல் உதாரணத்தில் பாம் இருப்பது அவர்களுக்கும் தெரியாது, படம் பார்க்கும் நமக்கும் தெரியாது. இரண்டாவது உதாரணத்தில் நமக்கு மட்டும் பாம் இருப்பது தெரியும். இப்போது மூன்றாவது கேஸை எடுத்துக்கொள்வோம்.

ஹீரோ வீட்டில் பாம் வைக்க, நண்பனாக நடிக்கும் வில்லனின் அடியாள் வருகிறான். டேபிளின் கீழே பாம் வைக்கிறான். அப்போது ஹீரோ வந்துவிட, கேஷுவலாக பேச ஆரம்பிக்கிறார்கள். ஹீரோ நண்பனையும் உட்காரச் சொல்லி பேசிக்கொண்டே போகிறான். இப்போது பாருங்கள், நம்முடன் சேர்ந்து அந்த நண்பன்(?) கேரக்டரும் பதறிக்கொண்டிருக்கும். இண்ட்ரஸ்ட்டிங்?

நான்காவது கேஸ். வில்லனின் இடத்தில் ஹீரோவும் நண்பனும் வைக்கிறார்கள். வில்லன் வரும் நேரம். 15 நிமிடத்தில் வெடிக்குமாறு செட் செய்யப்பட்ட பாம் அது. அவர்கள் வெளியேற நினைக்கும்போது, வில்லன் ஒரு போலீஸ் ஜீப்பில் வந்திறங்குகிறான். போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கைகுலுக்கு நன்றி சொன்னபடியே ‘வாங்க சார்..டீ சாப்பிட்டுட்டுப் போகலாம்’ என்று வில்லன் அழைக்கிறான்.

இங்கே பாம் டிக்..டிக்..டிக். இன்ஸ்பெக்டர் மறுக்க, வில்லன் வற்புறுத்த, உள்ளே இருக்கும் இருவருக்கும் பீதியாகிறது. வெளியே ஓடினால் போலீஸ், உள்ளே இருந்தால் பாம்! இந்த கேஸில் உள்ளே இருக்கும் இருவருக்குமே பாம் இருப்பது தெரிகிறது. நமக்கும் தெரிகிறது. இது சீரியஸ் படத்தில் மட்டுமின்றி, காமெடி படத்திலும் வரலாம்.

இங்கே பாம் என்பது தான் முக்கியமான தகவல். அந்த தகவலை யாருக்கும் சொல்லாமல் கதாசிரியர் மட்டுமே வைத்திருந்தால், ஒருவிதமான அனுபவம் பார்ப்போருக்கு கிடைக்கிறது. அந்த தகவலை கேரக்டர்களுக்கும் தெரியப்படுத்தும்போது, வேறுவிதமான அனுபவம் கிடைக்கிறது. ஒரு கதையை எழுதும்போது, உங்கள் கையில் இருப்பது தகவல்கள். அதில் எதையெல்லாம் ஆடியன்ஸ்க்கு முதலிலேயே சொல்லப்போகிறோம், எந்த ஆர்டரில் சொல்லப்போகிறோம் என்பது தான் முக்கியம்.

சர்ப்ரைஸ்க்கு உதாரணமாகமுதல்வனில்வரும்பாம்வெடிக்கும்சீனைஎடுத்துக்கொள்ளலாம். அம்மா-அப்பாவுடன்ஹீரோஇருக்கும்போதுஹீரோக்குஃபோன்வருகிறது. சிக்னல்கிடைக்கவில்லைஎன்றுவெளியேவருகிறார். நாமும்வழக்கமானசீன்தான்என்றுஅசுவராஸ்யமாகஉட்கார்திருக்கையில்பூம்’!. அதுதான்ஹீரோவையும்அரசியல்வாதியாகஆக்கும்நிகழ்வு. ஹீரோஅந்தஅதிர்ச்சியைஉணரும்அதேநேரத்தில்ஆடியன்ஸும்உணரவேண்டும்என்றுஷங்கர்முடிவுசெய்துள்ளார். எனவேஅதுசர்ப்ரைஸாகவருகிறது

சமீபத்தில்வந்தஇவன்வேறமாதிரியில்ஜவுளிக்கடைபொம்மைமாதிரிஇருக்கும்ஹீரோயினைவில்லன், திருஷ்டிபொம்மைஆக்கி 20 மாடிபில்டிங்கில்உயரத்தில்கட்டிவிடுகிறான். அங்கேவந்துஹீரோதேடும்போது, நமக்குஹீரோயின்இருக்கும்இடம்தெரிகிறது. ‘டேய்..அங்கதாண்டாஇருக்கா..நல்லாபாருடாஎன்றுமனதுக்குள்நாம்கதறுகிறோம்அல்லவா? அதுதான்சஸ்பென்ஸ்காட்சியின்ஸ்பெஷாலிட்டி.

நீங்க தூங்கிடக்கூடாதுன்னு...இந்த குண்டு
தனுஷ் நடித்த நய்யாண்டி படத்தில் ஒரு சீன் வரும். ஹீரோவின் அண்ணன் சுமனுக்கு முதலில் ஒரு பெண் பார்த்து வேண்டாம் என்று சொல்லி இருப்பார்கள். பின்னர் சில வருடங்கள் கழித்து, சுமன் அந்தப் பெண்ணையே மணப்பது என்று முடிவு செய்து, அந்தப் பெண்ணின் வீட்டிற்கு ஃபோன் செய்வார். அந்தப் பெண்ணே கைக்குழந்தையுடன் வந்து எடுப்பார்அவருக்கு கல்யாணம் ஆகி, குழந்தையும் பிறந்துவிட்டது என்று நாம் புரிந்துகொள்கிறோம்.

ஆனால் சுமன் அதை அறியாமல் பேசிக்கொண்டே செல்கிறார். இது ஒரு நல்ல நகைச்சுவையாக வந்திருக்க வேண்டிய சீன். கைக்குழந்தையை முதலில் காட்டாமல் சுமன் வழிந்து முடியும்போது குழந்தையைக் காட்டலாம். அல்லது சுமன் பேசும் டயலாக்கிற்கு ஈடுகொடுத்து அப்பாவியாக அந்தப் பெண் பேசிக்கொண்டே செல்வது போல் காட்டலாம். ஆனால் சவசவ என்று எடுத்திருப்பார்கள். அந்த சீனை மீண்டும் பாருங்கள். எப்படி மாற்றலாம் என்று யோசியுங்கள்.

ஒரு கொலை நடக்கிறது. ஹீரோ அதை துப்பறிகிறார் என்பது உங்கள் கதையாக இருக்கலாம். கொலையாளி யார் என்பதை ஆடியன்ஸுக்குச் சொல்வதா வேண்டாமா? சொன்னால் சுவாரஸ்யம் கூடுமா? கதையில் வரும் வேறு யாருக்கெல்லாம் இது தெரியலாம்? அப்படி மற்ற கேரக்டர்களுக்குத் தெரிவது சுவாரஸ்யத்தைக் கூட்டுமா, குறைக்குமா? (உதாரணம், காமெடியனுக்குத் தெரியும், ஆனால் பயத்தால் சொல்ல முடியாமல் தவிக்கிறான்.)

ஹீரோ ஹீரோயினைக் காதலிக்கிறான். ஆனால் அவள் ஹீரோ குடும்பம் வெறுக்கும் வில்லன் குடும்பத்தைச் சேர்ந்தவள். இந்த தகவலை ஆடியன்ஸ்க்கு ஹீரோயின் அறிமுகம் ஆகும்போதே சொல்லலாமா? ஹீரோவின் காதலை ஏற்றுக்கொண்டவுடன் சொல்லலாமா? முன்னது சஸ்பென்ஸ், பின்னது சர்ப்ரைஸ்.

ஓஷோவின் அறிவுரையும் ஹிட்ச்காக்கின் பாம் தியரியும் கதை-ஒரு சீன் – திரைக்கதை ஆகிய மூன்றுக்குமே அப்ளை ஆகக்கூடியவை. நம் கையில் இருக்கும் தகவல்களையும் கேரக்டர்களையும் வைத்துக்கொண்டு , நாம் ஆடும் சதுரங்க விளையாட்டே திரைக்கதை எழுதுதல்!

(தொடரும்)

ஹிட்ச்காக்கின் Sabotage (1936) - விமர்சனம்

$
0
0
1939ஆம் ஆண்டு வரை ஹிட்ச்காக் பிரிட்டிஷ் சினிமாவில் தான் இருந்தார். ஹாலிவுட்டில் நுழையும் முன், த்ரில்லர் படங்களை விதவிதமாக எடுத்து தன்னை மெருகேற்றிக்கொண்டிருந்தார். The 39 steps படத்தின் வெற்றி ஹிட்ச்காக் பெயரை ஹாலிவுட்வரை கொண்டுசென்றது. அடுத்து வந்த Secret Agent படம் சொதப்பிவிட, ஒரு வித்தியாசமான த்ரில்லராக Sabotage-ஐ எடுத்தார் ஹிட்ச்காக். Secret Agent போன்று ஓவர் டோஸ் ஆகி கதையைப் பாதிக்காத வண்ணம், இந்தப் படமும் சில அடிப்படை மனித இயல்புகளைப் பற்றி அலசியது. ஹிட்ச்காக்கின் பிரிட்டிஷ் படங்களில் முக்கியமான படங்களில் ஒன்றாக இது ஆனது.

Sabotage என்பதன் பொருள் சமூக ஒழுங்கை/அரசாங்கத்தை குலைக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் அட்டாக் என்று பொருள்படும். அதன் நேரடி அர்த்தம், மெசினரி அல்லது பில்டிங்குகளை விருப்பப்பட்டே இடிப்பது. டிக்சனரியில் அந்த அர்த்தத்தினைக் காட்டியபடியே படம் ஆரம்பம் ஆகிறது. 

டிடெக்டிவ் ஸ்பென்சர் (John Loder) ஒரு பழக்கடையில் பணிபுரிவராக நடித்து வருகிறார். அந்தக் கடை ஒரு தியேட்டருக்கு அருகே அமைந்துள்ளது. அந்த தியேட்டர் அதிபர் வெர்லாக்(Oscar Homolka)கிற்கு ஒரு தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக ஸ்பென்சர் சந்தேகிக்கிறார், அது உண்மையும்கூட. வெர்லாக்கின் மனைவி (Sylvia Sidney)க்கு கணவனின் நடவடிக்கை பற்றி எதுவும் தெரிவதில்லை. 

சில்வியா சிறுவனான தன் தம்பியும் உடனிருக்க, க்வெர்லாக்குடன் அந்த தியேட்டருக்கு மேலே இருக்கும் வீட்டிலேயே வசித்து வருகிறாள். டிடெக்டிவ் தன்னை நெருங்கிவிட்டதை அறியும் வெர்லாக், தனது திட்டத்தை நிறைவேற்ற சில்வியாவின் தம்பியிடம் பாமைக் கொடுத்து குறிப்பிட்ட இடத்தில் டெலிவரி செய்யும்படி அனுப்பி வைக்கிறான். அதில் அந்த சிறுவனும் பலியாக, அதன் பின் டிடெக்டிவ்-சில்வியா-வெர்லாக் இடையே நடக்கும் பரபரப்பான சம்பவங்களே படம்.
ஒரு கமர்சியல் த்ரில்லர் கதையை குவாலிட்டி ஆனதாக ஆக்க, ஹிட்ச்காக் எடுத்துக்கொள்ளும் அக்கறை தான் அவரை மதிப்பிற்குரிய திரைப்பட மேதையாக ஆக்கியது. இந்தப் படம் Joseph Conrad என்பவர் எழுதிய The Secret Agent எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானது. ஏற்கனவே Secret Agent என்ற பெயரை முந்தைய படத்திற்கு வைத்துவிட்டதால், ஹிட்ச்காக் Sabotage என்று பெயர் மாற்றினார். நாவலில் வெர்லாக் ஒரு கடை வைத்திருப்பதாகவே வரும். ஹிட்ச்காக் அதை தியேட்டர் என்று மாற்றினார். அதன்மூலம் கதைக்குச் சம்பந்தமான அல்லது முற்றிலும் எதிரான காட்சிகள் திரையில் ஓடுவதாக காட்சிகளை அமைத்து சுவாரஸ்யத்தைக் கூட்டினார். அந்த தீவிரவாதக் கும்பல் யார், அவர்களின் நோக்கம் என்ன போன்ற விஷயங்களையெல்லாம் Maccuffin என்று ஒதுக்கித் தள்ளினார். படம் பார்ப்போர் சிம்பிளாகப் புரிந்துகொள்ள என்ன தேவையோ, அதை மட்டும் வைப்பது ஹிட்ச்காக் ஸ்டைல்.

இந்தப் படத்தில் வரும் எல்லாக் கேரக்டர்களின் செயலுக்கும் அவர்களின் இயல்புக்கும் முரண் இருக்கும்படி அமைத்தார் ஹிட்ச்காக். பணத்தேவைக்காக தீவிரவாதக் கும்பலுடன் சேரும் வெர்லாக், உயிர்பலியை விரும்புவதில்லை. கடமையை நிறைவேற்ற வரும் டிடெக்டிவ், சில்வியாவின் மேல் காதல்கொண்டு கடமை தவறுகிறான். பாம் வைக்கும் சிறுவன், நடப்பதே தெரியாத அப்பாவி. கணவன் மேல் மதிப்புள்ள சில்வியாவும் நேரெதிர் காரியங்களையே இறுதியில் செய்கிறாள். இப்படித்தான் இருக்க வேண்டும் எனும் நியாய விதிகள் எல்லாம், விரும்பியோ விரும்பாமலோ கேரக்டர்களால் மீறப்படுகின்றன. வாழ்க்கையில் அபத்தத்தை போகிற போக்கில் சொல்கிறார் ஹிட்ச்காக்.

படத்தின் முக்கியக் குறை, ஹீரோ John Loder தான். ஒரு மாஸ் ஹீரோவுக்குரிய அடையாளமோ, நடிப்போ இல்லாமல் சாதாரணமாகச் செய்திருப்பார். கதையே அந்த டிடெக்டிவ் கேரக்டரின் பாயிண்ட் ஆஃப் வியூவில் தான் நடக்கிறது. ஆனால் அந்தப் படத்தைத் தோள்களில் தாங்கும் வலிமை அவருக்கு இல்லை. The 39 Steps பட ஹீரோவான Robert Donat-ஐத் தான் நடிக்க வைக்க விரும்பினார் ஹிட்ச்காக். அது முடியாமல் போனதால் ஜான் நடித்தார். ஒரு மாஸ் ஹீரோ இல்லாமல் படம் பண்ணும்போதெல்லாம், படம் நொண்டியடிக்கிறது என்று பலவருடங்கள் கழித்துச் சொன்னார் ஹிட்ச்காக். அதன் அர்த்தம், இந்தப் படம் பார்க்கும்போது தெரிகின்றது.

டிடெக்டிவ்வை விட வெர்லாக் கேரக்டரில் நடித்த Oscar Homolka-ன் நடிப்பு பிரமாதம். எனவே அவர் தான் ஹீரோவோ என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு, நம் கவனம் எல்லாவற்றையும் திருடிக்கொள்கிறார் Homolka. அவர் கொல்லப்படும் காட்சியில், அவர் காட்டிய சின்ன சின்ன எக்ஸ்பிரசன்கள், அவர் ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபித்தன. உயிர்பலியை விரும்பாத வில்லன் என்று இந்த கேரக்டர் சொல்லப்பட்டுவிட்டதால், இறுதியில் நடப்பது கொலையா அல்லது தற்கொலையா என்பதை நம் முடிவுக்கே விட்டிருப்பார் ஹிட்ச்காக்.
ஹீரோ சில்வியா மேல் காதல் கொள்வதையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஏறக்குறைய Vertigo-ல் இதே போன்ற சூழ்நிலை வரும். ஆனால் அதை நாம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சொல்லியிருப்பார் ஹிட்ச்காக். இது ஒன்றே கால் மணி நேரம் மட்டுமே ஓடும் சின்னப் படம் என்பதால், அந்த காதலுக்கு(!) வலு சேர்க்கும் காட்சிகள் இல்லை. இதில் கற்ற பாடம் தான், vertigo-ல் ஹிட்ச்காக்கிற்கு கை கொடுத்திருக்க வேண்டும்.

பார்சலில் பாம் இருப்பது தெரியாமல் சிறுவன், அதைக் கையில் எடுத்துக்கொண்டு நகரத்தை வலம் வரும் சீன் சஸ்பென்ஸ் வகைக்கு எடுத்துக்காட்டு. சஸ்பென்ஸ் காட்சிகளில் எப்படி டென்சனை ஏற்றுவது என்பதில் ஹிட்ச்காக் கை தேர்ந்தவர். அந்த பாம் 1.45க்கு வெடிக்கும் எனும் தகவலை நமக்குச் சொல்லிவிட்டு, கால் மணி நேரத்திற்கு புகுந்து விளையாடி இருப்பார். படத்தின் முதல்பாதியில், அந்த சிறுவனை நாம் விரும்பும்வகையில் காட்சிகளை அமைத்திருப்பார். எப்படியாவது தப்பித்துவிட மாட்டானா என நம்மை பதைபதைக்க வைத்திருப்பார் ஹிட்ச்காக். படத்தின் நடுவே வரும் அந்த பாம் சீனில் இருந்து தான், படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது.

தியேட்டர் பேக்ரவுண்டில் கதை நடப்பதால், படத்தில் சோகமான சீன் போகும்போது தியேட்டரில் காமெடி சீன் ஓடிக்கொண்டிருக்கும்; ஆடியன்ஸ் சிரித்துக்கொண்டிருப்பார்கள். இறுதியில் என்ன செய்வது என்று சில்வியா தியேட்டரில் ஓடும் வால்ட் டிஸ்னியின் ஒரு கார்டூன் சீனைப் பார்த்துத் தான் முடிவு செய்வாள். தியேட்டரை ஒரு ட்ராமடிக் விஷயமாக பயன்படுத்தியிருப்பார் ஹிட்ச்காக். அதே மாதிரியே பறவைகளை குறியீடாகப் பயன்படுத்துவது ஹிட்ச்காக்கிற்குப் பிடிக்கும். பெரும்பாலும் அழிவு என்பதைக் குறிக்க, பறவைகளை அவர் பயன்படுத்துவார். (பின்னாளில் இந்த கான்செப்ட்டில் அவரது மாஸ்டர்பீசான The Birds படத்தையே எடுத்தார்).

இந்தப் படத்திலும் பறவைகள் வருகின்றன. சனிக்கிழமை பாம் வெடிக்கும் என்பதை "the birds that will sing on Saturday" எனும் கோட் வேர்டினால் சொல்கிறார்கள். வெர்லாக் தன் மனைவியிடம் மன்னிப்புக் கேட்கும் சீனில், சில்வியா கோபத்துடன் வெளியேறிவிடுவார். அப்போது கேமிரா கொஞ்சம் ஜூம் அவுட் ஆகி, பறவைகளையும் கவர் செய்யும். இப்போது பார்த்தால், அந்தப் பறவைகளின் முன் மண்டியிட்டு வெர்லாக் அமர்ந்திருப்பது போல் காட்சிப்படுத்தியிருப்பார். பாம் வைக்க சிறுவனை அனுப்பும் காட்சியிலும் பறவைகளுடன் அவன் அமர்ந்திருப்பான். அந்த பறவைகள் சிறுவனையும் குறிக்கும்.
1936ல் படம் வெளியாகியிருந்தாலும், இந்தப் படத்தில் வந்த வெர்லாக் கொல்லப்படும் சீன் இன்றளவும் போற்றப்படுகிறது. பெரும்பாலான திரைப்படக்கல்லூரிகளில் பாடமாகப் படிக்கப்படுகிறது அந்த சீன். அதில் உள்ள விஷேசம், வசனங்கள் இல்லாமல் அந்த கேரக்டர்களின் மனதில் இருப்பதை ஹிட்ச்காக் நமக்கு உணர்த்தியது தான். சினிமா என்பதே அது தானே. எனவே ஹிட்ச்காக்கின் இந்த சீன், நுணுக்கமாக ஆராயப்படுகிறது. அந்தக் காட்சியில் பேசப்படும் சில வசனங்களும் அவர்களின் மனதில் உள்ளதை உணர்த்தாது. உணர்ச்சிகரமான டயலாக்குகளால் சொல்ல வேண்டியதை, ஹிட்ச்காக் கேமிரா மற்றும் எடிட்டிங் மூலமே செய்து காட்டினார். நடிப்பும் மிகையாக இல்லாமல் அளவாக இருக்கும்.

அப்பாவித்தனத்தையும் குற்றத்தையும் ஒன்றாக இணைத்து கேரக்டர்களைப் படைத்ததன் காரணமாக, இந்தப் படம் அப்போது பெரும் பாராட்டைப் பெற்றது. ஹிட்ச்க்காக்
 ஹாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டியபின், ’அப்படிச் செய்யாமல் சிம்பிளாகவே த்ரில்லரைக் கொடுத்திருக்கலாம். குழப்பமான படமாக இப்போது தெரிகிறது’ என்று புலம்பினார். ஆனால் அவரையும் மீறி, அந்தப் படம் இன்றும் கொண்டாடப்படுவகிறது!

----------------------------- SPOILER ALERT------------------------------------------------

தம்பி சாவுக்குக் காரணமான கணவன் Homolka டைனிங் டேபிளில் உட்கார்ந்திருக்கிறார். டின்னர் பரிமாற ரெடியாகிறார் Sylvia. அப்போது Homolka கொல்லப்படும் சீனை ஷாட் பை ஷாட் இமேஜ்களாக, கற்பனை வசனங்களுடன் உருவாக்கி இருக்கிறேன். அது இங்கே: 

ஹிட்ச்காக்கின் ஒரிஜினல் சீன் இங்கே:



படத்தினை தரவிறக்க: http://kickass.to/sabotage-1936-b-w-480p-x264-t8774424.html

Youtube Link: http://www.youtube.com/watch?v=QGjKlSTbKLA

வேலையில்லா பட்டதாரி - திரை விமர்சனம்

$
0
0
அதாகப்பட்டது... :
நடிகர் தனுஷின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் அனிருத்தின் அட்டகாசமான பாடல்களுடன் இன்று வெளியாகியிருக்கும் படம், வேலை இல்லாப் பட்டதாரி. படம் எப்பூடின்னு….
ஒருஊர்ல..:
எஞ்சினியருக்குப் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் தனுஷிற்கு, ஒரு பெரும் போராட்டத்திற்குப் பின் ஒரு வேலை கிடைக்கிறது. அதையும் கெடுக்க ஒரு வில்லன் குறுக்கே வர, தனுஷ் எப்படி வெல்கிறார் என்பதே கதைன்னு வச்சுக்கலாம்!

உரிச்சா....:
வீட்டில் தண்டச்சோறு என திட்டும் அப்பா, எப்போதும் ஆதரவளிக்கும் அம்மா, வேலைக்குப் போய் கார் வாங்கி வெறுப்பேற்றும் தம்பி, அடுத்த வீட்டு ஃபிகர் அமலா பால் என ரகளையான சூழலில் வாழ்கிறார் வி.ஐ.பி. தனுஷ். உண்மையில் இண்டர்வெல்வரை செம ரகளை.

இமேஜ், பஞ்ச் டயலாக் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சாதாரண இளைஞனாக, வீட்டில் இருக்கும் நாய்க்குச் சமமாக நடத்தப்பட்டாலும் அசராத டேக் இட் ஈஸி பார்ட்டியாக பட்டையைக் கிளப்புகிறார் தனுஷ். பட்டாசாக வெடிக்கும் வசனங்களும் சேர்ந்துகொள்ள, இடைவேளைவரை காமெடியில் பின்னிவிட்டார்கள்.
முதல் பத்து நிமிடத்தில் என்ன கதை நடந்ததோ, அதே தான் இடைவேளை வரை. கதை அங்கேயே டெக்ட் அடித்து உட்கார்ந்து கொண்டாலும், அப்பாவிடம் திட்டு வாங்குவது, ஓட்டை மோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டே அமலா பாலை ரூட் விடுவது, இருவருக்கும் நடக்கும் ரகளையான முதல் சந்திப்பு என ரசிக்க வைக்கும் காட்சிகள்.

1980களில் வந்த படங்களில் வேலை இல்லாத் திண்டாட்டம் பற்றிய புலம்பல்கள் அதிகம் இருக்கும். மாணவர் சக்தி, புரட்சி போன்ற உட்டாலக்கடி விஷயங்களும் படம் முழுக்க தூவப்பட்டிருக்கும். தற்பொழுது டாஸ்மாக் ரேஞ்சிற்கு இஞ்சினியரிங் காலேஜையும் திறந்து, பி.ஈ டிகிரிக்கு உள்ள மதிப்பையே காலி செய்துவிட்டார்கள்.

இடைவேளைக்குப் பின் படம் அந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறது. தனுஷின் அம்மா இறந்துவிட, அதன் காரணமாக தனுஷ்க்கு வேலை கிடைக்கிறது. ஒரு கவர்மெண்ட் புராஜக்ட்டுக்கு தலைமை இஞ்சினியராக தனுஷ் போக, அதை வில்லன் குரூப் கெடுக்கப் பார்க்கிறார்கள். அதை தனுஷ் மாணவர் சக்தி(VIPs) மற்றும் மக்கள் சக்தி துணையுடன் எப்படி வெல்கிறார் என்று யூகிக்க முடியும் திருப்பங்களுடன் இரண்டாம்பாதியில் காட்டுகிறார்கள்.

முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பும் குறும்பும் மிஸ்ஸிங் என்பதால், சீக்கிரம் கட்டடத்தை கட்டி முடிங்கப்பா எனும் மனநிலைக்கு நாம் வந்துவிடுவது தான் சிக்கல்!
தனுஷ்:
ரொம்ப நாளைக்கு அப்புறம் பழைய, ரகளையான தனுஷைப் பார்க்க முடிகிறது. திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் செய்த அதே ஜாலியான ‘டோண்ட் கேர்’ கேரக்டர். இரண்டு மூன்று இடங்களில் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு ஸ்லோமோசனில் நடந்தாலும், தனுஷை ரசிக்க முடிகிறது. முதல்பாதியில் எவ்வளவு கேவலத்தையும் தாங்கும் காட்சிகளிலும், இரண்டாம்பாதியில் வில்லனுடன் பேசும் காட்சிகளிலும் கைதட்டல்களை அள்ளுகிறார்.

திருமதி.அமலா பால்:
கடைசிப்படம்(?) என்பதாலோ என்னவோ, டீசண்டாகவே காட்டியிருக்கிறார்கள். தனுஷ் கேரக்டரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக லவ் ஆவது அழகு. தனுஷ்க்குப் பொருத்தமான(!) ஜோடியாகத் தெரிகிறார். டூ லேட் தனுஷ்!

சொந்த பந்தங்கள்:
அப்பாவாக வரும் சமுத்திரக்கனி முதிர்ச்சியான நடிப்பு. ஒரு பாசமிக்க கண்டிப்பான தந்தையை கண்முன் கொண்டுவருகிறார். அம்மாவாக சரண்யா. அவங்க நடிப்பைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இடைவேளைக்குப் பின் விவேக் வந்தாலும், பெரிதாக காமெடி ஏதும் இல்லை. அவரும் இல்லையென்றால், பின்பாதியில் படம் ரொம்ப டல் ஆகியிருக்கும் என்பதும் உண்மை. வில்லனாக அறிமுகமாகியிருக்கும் அமிதாஷ், நிறைய எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுகிறார். ’இவன் வேற மாதிரி’ஹீரோயின் சுரபி, இதில் சும்மா வந்துபோகிறார். 
நெகடிவ்பாயிண்ட்ஸ் :
- பெரிய திருப்பங்கள் இல்லாத இரண்டாம்பாதி
- தனுஷ்க்கும் அமலா பால்க்கும் இடையே லவ் வந்தபின், என்ன செய்வது என தெரியாமல் திரைக்கதை டீம் முழித்திருக்கிறார்கள். இடைவேளைக்குப் பின் சும்மா வந்துபோகிறார்.
- கட்டடம் கட்டுவது தான் குறிக்கோள் என்பது டிராமடிக்காக இல்லை
- அதில் ஏற்படும் பிரச்சினைகளும் தீர்வுகளும் குழந்தைகூட யூகித்துவிடும் பாஸ்.
- தனுஷின் கேரக்டரைசேசன் பிரமாதம். ஆனால் அதுமட்டுமே போதும் என்று நம்பியது தான் பலவீனம்!

 பாஸிடிவ்பாயிண்ட்ஸ்:
 தனுஷ்
செம காமெடியான முதல்பாதியும், வசனங்களும்
- இயக்குநர் வேல்ராஜின் ஒளிப்பதிவு
- அனிருத்தின் இசையில் துள்ளாட்டம் போட வைக்கும் பாடல்கள்

பார்க்கலாமா? :

முதல்பாதிக்காக...பார்க்கலாம்.

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-16)

$
0
0

16. ஃப்ளாஷ்பேக் எனும் ஆயுதம்
கதை என்றால் என்ன என்று ஆய்வு நோக்கில் அணுகினால், அது சில தகவல்களின் தொகுப்பு தான் என்பது புலப்படும். உதாரணமாக, ஒரு கதையை உடைத்தால் இப்படி வரும்:
ஒரு ஊரில் ஒருவன் அமைதியாக வாழ்ந்து வந்தான்.
அவனுக்கு திடீரென இப்படி நடந்தது. அதனால் அவன் கோபம் கொண்டான்.
அதற்குக் காரணமானவர்களை பழி வாங்க ஆரம்பித்தான்.
பழிவாங்கிவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினான் அல்லது ஜெயிலுக்குப் போனான்.

நீங்கள் உருவாக்கியிருக்கும் கதையும் இப்படிப்பட்ட தகவல்களின் தொகுப்பாகவே இருக்கும். திரைக்கதை என்பது அந்த தகவல்களை எந்த ஆர்டரில், எப்படி சுவார்ஸ்யமாகச் சொல்கிறோம் என்பது தான். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் சட்டம் ஒரு இருட்டறை, சட்டம் ஒரு விளையாட்டு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்கள் மேலே சொன்ன மூலக்கதையைக் கொண்டிருக்கும். மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் அவை. அந்த படங்களின் சாயலில் எத்தனையோ படங்கள் அதன்பின் தமிழில் வந்தன. வெற்றிகரமான திரைக்கதை ஃபார்மேட்டாக 1980களில் அது விளங்கியது.

பின்னர் 1990களில் எஸ்.ஏ.சந்திரசேகரின் சிஷ்யர் ஷங்கர், அதே மூலக்கதையுடன் திரும்பி வந்தார். கதையில் ஒரு சின்ன மாற்றத்தைச் செய்தார். ஷங்கரின் ஹீரோக்கள், ‘காரணமானவர்களை’ மட்டும் பழிவாங்குவதில்லை. அந்த காரணத்தையே அழிக்க முயல்பவர்கள். காலேஜில் சீட் கொடுக்காத வில்லனை ஜெண்டில்மேன் அழிப்பதில்லை. இடஒதுக்கீட்டை அழிக்க முற்படுகிறான். லஞ்சம் வாங்கிய அதிகாரியை மட்டும் இந்தியன் அழிப்பதில்லை, லஞ்சத்தையே அழிக்க போராடுகிறான். வெறுமனே ‘பழிக்குப் பழி’ கதையாக இருந்ததை, இந்த மாற்றங்களின்மூலம் ‘சமூக மாற்றம்’ கோரும் கதையாக ஆக்கினார் ஷங்கர்.

அடுத்து திரைக்கதையில் அவர் செய்த துணிச்சலான ஒரு மாற்றம். ஆக்ட்-1/செட்டப் என்று சொல்லப்படும் முன்கதையை, எல்லோரையும் போல் படத்தின் முதலில் வைக்காமல் இடைவேளைக்குப் பின், ஃப்ளாஷ்பேக்காக ஆக்ட்-2 முடியும்போது வைத்தார். படம் ஆரம்பிக்கும்போதே, ஹீரோ பழி வாங்கலில் இறங்கியிருப்பார். போலீஸ் தேட ஆரம்பித்திருக்கும்.
முந்தைய பதிவுகளில் நாம் பார்த்த ஓஷோ, ஹிட்ச்காக் தியரிகளை நினைவில் கொண்டுவாருங்கள். ஷங்கர் செய்த மாற்றம், எவ்வளவு சுவாரஸ்யத்தைக் கூட்டியது என்று புரிகிறதா? ஹீரோவை போலீஸ் பிடிக்குமா எனும் சஸ்பென்ஸ் ஒரு பக்கமும், ஹீரோ ஏன் அப்படிச் செய்கிறான் எனும் சர்ப்ரைஸ் மறுபக்கமும் இணைய, நமக்கு அதுவரை இல்லாத ஒரு புதிய அனுபவத்தை, அந்த திரைக்கதை ஃபார்மேட் நமக்குக் கொடுத்தது. இந்தியன், அந்நியன், ரமணா, சாமுராய், ஆரம்பம் என பல படங்களில் பயன்படுத்தப்பட்ட, இன்றளவும் வெற்றிகரமான திரைக்கதை ஃபார்மேட்டாக ஷங்கர் உருவாக்கிய ’ஜெண்டில்மேன்,திரைக்கதை வடிவம்’ இருக்கிறது. அதனால்தான் அவர் தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக போற்றப்படுகிறார்.

ஜெண்டில்மேன் போன்றே தமிழில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இன்னொரு வெற்றிகரமான திரைக்கதை ஃபார்மேட், பாட்ஷா. ஒரு சாமானியனாக வாழும் ஒரு ஹீரோ(செட்டப்-1)-அவனை துரத்தும் வில்லன்கள்(ஆக்ட்-2)-ஒரு முன்கதை(செட்டப்-2)-முடிவு(ஆக்ட்-3) என்று அமைந்திருக்கும் பாட்ஷா ஃபார்மேட். இரண்டு செட்டப் என்பதை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அது ஜெண்டில்மேன் ஃபார்மேட்டுடன் ஒத்திருக்கும். அதாவது ஜெண்டில்மேன் ஃபார்மேட் என்பது, எஸ்.ஏ.சி ஃபார்மேட்டுடன் பாட்ஷா ஃபார்மேட் இணைந்த ஒரு வடிவம் என்று சொல்லலாம்.

ஒரே கதை, எப்படி வெவ்வேறு வடிவம் எடுக்கிறது என்று புரிகிறதல்லவா? (கூடவே இந்த காப்பிக்கூச்சல் ஆட்களை ஏன் கண்டுகொள்ளக்கூடாது என்றும்..!)

சமீபகாலப் படங்களில் ஃப்ளாஷ்பேக் உத்தி இல்லாமலேயே முன்கதையைச் சொன்னபடம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும். இதே கதைக்கருவுடன் முன்பு சிவாஜி நடித்த நீதி படமும் வந்திருக்கிறது. அது நேர்க்கோட்டில் எழுதப்பட்ட திரைக்கதை. அதையே முன்கதை நீக்கிச் சொல்லும்போது, சுவார்ஸ்யமான த்ரில்லர் கிடைத்தது. அந்த முன்கதையை காட்சிகளாகச் சொல்லியிருந்தால், அது ஜெண்டில்மேன் ஃபார்மேட் ஆகியிருக்கும். மிஷ்கின் புதுமையாக, ஒரு கதை சொல்லும் காட்சி மூலம் முன்கதையைச் சொல்லியிருப்பார்.
ஒரு கதையை தகவல்களாகப் பிரித்து, வெவ்வேறு ஆர்டரில் அந்தக் கதையை அடுக்கும்போது, எப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான திரைக்கதையாக உருவெடுக்கிறது என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நேர்க்கோட்டில் கதை சொல்லாமல், ஆர்டரை உடைத்து ஃப்ளாஷ்பேக் உத்தியை பயன்படுத்தும்போது, புதுவகையான அனுபவத்தை நாம் உருவாக்க முடியும். அப்படி ஆர்டர் கலைத்து விளையாட, ஓஷோ மற்றும் ஹிட்ச்காக் தியரி உதவும்.


இத்தகைய புரிதல்கள் இல்லாமல் நேரடியாக ஆக்ட்-1 என்று நுழைந்தால், 1980களில் வந்த திரைக்கதை அளவிற்குக்கூட உங்களால் எழுத முடியாது என்பதாலேயே, நாம் சில அடிப்படை விஷயங்களை இந்ததொடரின் முதல் பாகத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இன்னும் பார்ப்போம்.

(தொடரும்)

ரத்தக்கண்ணீர் (1954) : சினிமா அலசல்

$
0
0

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.-

என்று பாட்டன் வள்ளுவன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டான். இன்னும் பல கதைகளும் காவியங்களும் அடக்கம் பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் மனிதனுக்கு அது உறைப்பதில்லை. கொஞ்சம் காசு, பணம் சேர்ந்ததும் ‘தான் செய்வதெல்லாம் சரியே..என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்’ என்று ஆடித் தீர்த்து அழிந்து போகிறான். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் கதையே ரத்தக்கண்ணீர்
அந்தக் காலத்திலேயே வெளிநாட்டில் சென்று படிக்கும் வசதியுள்ள லட்சாதிபதி மோகன். வெளிநாட்டு நாகரீகமே உயர்ந்தது, வாழ்க்கையை எஞ்சாய் பண்ணும் அவர்களின் வாழ்க்கை முறையே சரியானது எனும் மனநிலைக்கு வருகிறான் மோகன். இந்தியா திரும்பியபின்னும் அதே எண்ணத்துடன் வாழ்கிறான். கலைக்கூடம் என்ற பெயரில் பெண்களுடன் கூத்தடிக்க காமக்கூடத்தைக் கட்டி, காந்தா எனும் நாட்டியக்காரியுடன் வாழ்க்கையைக் கொண்டாடுகிறான். அம்மாவின் வற்புறுத்தலால் திருமணமும் ஆகிறது. கட்டறுந்து காமத்தைக் கொண்டாடியவனுக்கு கட்டுப்பெட்டியான மனைவியைப் பிடிப்பதில்லை. 

மோகனின் நண்பன் பாலுவின் அறிவுரைகளையும் அவன் மதிப்பதில்லை. மோகனின் போக்கால் மனம் உடைந்த அவன் தாயும் இறந்துவிட, காந்தாவின் வீட்டிலேயே செட்டில் ஆகிவிடுகிறான் மோகன். அதன்பின் சொத்துக்கள் ஒவ்வொன்றாகப் பறிபோக, குஷ்டரோக நோய் கொஞ்சம் கொஞ்சமாக கூடிக்கொண்டே போகிறது. காந்தா அவனை வீட்டை விட்டு விரட்டி விடுகிறாள். ஆளே உருமாறி தெருவில் பிச்சைக்காரனாய் அலையும் மோகன், இறுதியில் நண்பன் பாலுவை தன் மனைவியுடன் சேர்த்து வைத்துவிட்டு இறக்கிறான்.

ஒரு ஆண்டி ஹீரோ சப்ஜெக்ட்டை எப்படி சுவாரஸ்யமாகச் சொல்ல வேண்டும் என்பதற்கு உதாரணம், இந்தப் படம். ஏற்கனவே நாடகமாக வெற்றிபெற்ற கதை தான் இது. அதையே படமாக எடுத்து, மாபெரும் வெற்றி பெற்றார்கள். அதற்கு எம்.ஆர்.ராதா அவர்களின் நகைச்சுவை உணர்வே முக்கியக் காரணம். தொழிலாளர் கூட்டம் என்றாலும், அம்மா இறக்கும் சீன் என்றாலும், பிச்சையெடுக்கும் சீன் என்றாலும் அவரின் வசனங்களில் ஓடும் எள்ளல்தான், படத்தை ரசிக்க வைக்கிறது. ஒரு சோகமான அழுகாச்சி படமாக ஆகியிருக்க வேண்டிய கதை. எம்.ஆர்.ராதாவின் நடிப்பால், இன்றளவும் போற்றப்படும் படமாக ஆகிவிட்டது. ஃபாரின் ரிட்டர்னாக ஆரம்பத்தில் தோன்றுவதற்கும், இறுதிக்காட்சியில் அவர் தோன்றுவதற்கும் இடையே பாடி லாங்குவேஜில் எவ்வளவு மாற்றம். நோய் கூடிக்கொண்டே போவதை, ஒவ்வொரு சீனிலும் தன் உடல்மொழியால் அற்புதமாகக் காட்டியிருப்பார். எஸ்.எஸ்.ஆர் உடன் வாக்குவாதம் செய்தபடியே சொறிவது ஒரு உதாரணம்.
காந்தாவாக வரும் எம்.என்.ராஜம், ஒரு தாசியை அப்படியே கண் முன் கொண்டுவருகிறார். ஆரம்பத்தில் மோகன் மேல் பிரியமாக இருப்பதும், அவருக்கு நோய் வந்தாலும் விட்டுவிடாமல் போராடுவதும், பின்னர் மனித இயல்புப்படி கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறி எம்.ஆர்.ராதாவை விரட்டி விடுவதும் நுணுக்கமான சித்தரிப்பு. பொதுவாக இம்மாதிரிக் கதைகளில் அந்த கேரக்டரை கெட்டவள் என்று மட்டுமே காட்டுவார்கள். ஆனால் இங்கே மனதின் மாற்றம் படிப்படியாக விவரிக்கப்படுகிறது. இது அந்தக் காலத்துப் படங்களில் (இக்காலத்திலும்!) ஒரு அரிய விஷயம். ஏறக்குறைய சிலப்பதிகார மாதவி கேரக்டராக ஆரம்பித்து, சராசரி பெண்ணாக அவர் வாழ்க்கை முடிகிறது.

நடிகர் திலகத்திற்கு அடுத்தபடியாக, தமிழை இனிமையாகப் பேசுவதில் வல்லவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இதிலும் ஒரு நியாயமான மனிதனாக,  எம்.ஆர். ராதாவை திருத்த முயலும் நண்பனாக அருமையாக நடித்திருப்பார். எம்.ஆர்.ராதாவின் மனைவியாக வரும் ஸ்ரீரஞ்சனிக்கு இயல்பிலேயே அப்பாவியான முகம் என்பதால், அந்த கேரக்டர்க்கு சரியாக செட் ஆகிறார்.

படத்திற்கு கதை-வசனம் எழுதிய திருவாரூர் தங்கராசு அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். லட்சாதிபதியான ஒருவன், தன் தவறான நடத்தையால் எப்படி தெருவுக்கு வருகிறான் என்று காட்ட, தெளிவாக காட்சிகளை நகர்த்தியிருப்பார். எம்.ஆர்.ராதா பேசும் ஒவ்வொரு வசனங்களும் சிரிக்க வைப்பவை. ’கல்யாணம் எதுக்கு பண்றதுன்னே இந்தியால இன்னும் சரியாத் தெரியாது-தொழிலாளர் கட்சி, முதலாளி கட்சி, சாமியார் கட்சி இதே வேலை. இந்தியால க்ரோர்ஸ் கணக்கா வச்சுட்டு இருக்கான் கட்சிய! எல்லா கட்சியும் பிசினெஸ்ல பூந்துட்டான்… பெக்கர்ஸ்…. வேற ஒண்ணுக்கும் லாயக்கில்ல…  - திங்கிறதுக்குக்கூட கட்சியாடா,எப்பா!-சந்திரனையும் குருவையும் நாளைக்கு வரச்சொல்லு’ என்று படம் முழுக்க பட்டாசாக வெடிக்கின்றன ஒவ்வொரு வசனங்களும். படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆகியும், அந்த வசனங்கள் இன்னும் ஃப்ரெஷாக இருக்கின்றன, இன்றைய சூழலுக்கும் பொருந்திப்போகின்றன.

சிலப்பதிகாரம் சொல்லும் செய்தியும் இந்தப் படத்தின் செய்தியும் ஒன்று தான்.வித்தியாசம், கேரக்டர்களின் குணாதிசயம். கண்ணகி அடக்கமானவள் என்றாலும் போராளி. இங்கே மனைவி கேரக்டர் ஒரு அப்பாவி மட்டுமே. கோவலன் சந்தர்ப்ப சூழ்நிலையால் மதிமயக்கத்தில் வீழ்ந்தவன். இங்கே மோகன் இயல்பிலேயே கெட்டவன், விரும்பி சகதியில் இறங்குபவன். மாதவி தாசிகுலத்தில் பிறந்தாலும், வேறு ஒருவனை ஏறெடுத்துப்பார்க்காதவள். இங்கே காந்தா சினிமா வாய்ப்பு வந்தவுடன், மனம் மாறிவிடுகிறாள். நேரெதிரான கேரக்டர்கள் சிலப்பதிகாரச் சூழ்நிலையில் உலா வருகின்றன.

பொதுவாக அந்தக் காலத்துப் பாடல்களை நாம் ரசிப்பது கஷ்டம். ஆனால் இந்தப் படத்தில் சிதம்பரம் ஜெயராமனின் இசையில் பெரும்பாலான பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ‘ஆளை ஆளைப் பார்க்கிறான், காசு இல்லாதவன் கடவுளே ஆனாலும் கதவைச் சாத்தடி’ போன்ற பாடல்கள் அருமை. குறிப்பாக ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் என்றுமே நிம்மதி கொள்வதேது?’ எனும் பாடல்வரிகள் ஒரு பழமொழி போன்றே தமிழர் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்டன. அந்தப் பாடலில் சிதம்பரம் ஜெயராமனின் குரலும் எம்.ஆர்.ராதாவின் வசனங்களும் இணைந்து, ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.

நல்ல குடும்ப வாழ்க்கை வாழும் சிலர்கூட,  சபலத்தால் இன்னொரு பெண்ணிடம் சிக்கும்போது ஒட்டுமொத்த வாழ்க்கையே நாசமாவதை நாம் இப்போதும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு. அதையறியாமல் முறையில்லாக் காமத்தில் இறங்கும் மனிதர்கள் கொடுக்கும் விலை, பணம் மட்டுமல்ல குடும்ப சந்தோசமும் தான். காந்தா மாதிரிப் பெண்களின் தொடர்பு உடும்புப் பிடி போன்றது. அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, அவர்கள் மட்டுமே தனக்கு நல்லது செய்வதாகவும் மனைவி-மக்கள் எல்லாம் தனக்கு எதிராளிகள் என்றும்கூட சிலருக்கு தோன்றிவிடுவதைப் பார்க்கிறோம். அதனால் தான் பெரும் ஞானிகள்கூட காமம் என்றால் பதறி ஓடுகிறார்கள்.

சிலப்பதிகாரக் கண்ணகி முதல் தற்கால அபலைகள்வரை இதே அவலத்தை சந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள். காவியமாகவும், கதையாகவும் படமாகவும் புலனடக்கம் பற்றிப் பேசப்பட்டு வந்தாலும், மோகன் போன்ற ஆட்கள் காமத்தின் பின்னே சென்று தானும் அழிந்து, குடும்பத்தின் நிம்மதியையும் சீரழிக்கிறார்கள். அதை இந்தப் படம் நகைச்சுவை முலாம் பூசிச் சொல்கிறது.

படம் சொல்லும் செய்தி, படத்தின் வசனங்கள், எம்.ஆர்.ராதாவின் நடிப்பு என எல்லாமே காலத்தைக் கடந்து நிற்கும் விஷயங்கள் என்பதால், தமிழில் வந்த முக்கியமான படங்களில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது ரத்தக்கண்ணீர்.

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-17)

$
0
0
17.கதையை ஓவர் டோஸ் ஆக்காதீர்கள்
கதை எழுத மேட்டர் கிடைக்காமல் திண்டாடுபவர்கள் ஒரு பக்கம் என்றால், புதிதாக எழுதத் தொடங்கும் பலருக்கு ஐடியாக்கள் ஓவராகப் பொங்கும் அதிசயமும் நடப்பதுண்டு. நீங்களும் அந்த மாதிரி ஒரு ஐடியாமணியா என்று சரிபார்த்துக்கொள்ள, இந்த ஓவர் டோஸ் பிரச்சினையை உதாரணங்களுடன் பார்ப்போம். 
இயக்குநர் சசிக்குமார் நடிப்பில் வந்த படம், பிரம்மன். சாக்ரடீஸ் எனும் அறிமுக இயக்குநரின் திரைக்கதையில் உருவான படம். அதன் கதை இப்படி வரும்:

சினிமாத் தியேட்டர் மேல் மிகுந்த பிரியம் வைத்திருக்கும் ஹீரோ, அதை லீசுக்கு எடுத்து நஷ்டத்துடன் ஓட்டிக்கொண்டிருக்கிறான். சொந்தங்கள் எல்லாரும் வேண்டாம் என்று சொல்லியும், தியேட்டரைக் காக்க போராடிக்கொண்டிருக்கிறான் ஹீரோ.

ஹீரோவுக்கு ஹீரோயின் மேல் (பின்னே, பாட்டி மேலயா?) காதல் வருகிறது. தியேட்டர் வருமானம் குடும்பம் நடத்த போதாது என்பதால், தியேட்டரை விட்டுவிடும்படி ஹீரோயின் வீட்டார் சொல்கிறார்கள். காதலா? தியேட்டரா? (இதுவே போதுமானது. ஆனால்…)

தனது பால்ய சிநேகிதன் சினிமாத்துறையில் இருப்பதை அறிந்து, தியேட்டரை மீட்க அவன் நட்பை நாடிச் செல்கிறான். அங்கே ஹீரோவுக்கே இயக்குநர் ஆகும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன்மூலம் தியேட்டரை மீட்கலாம் என்று நினைக்கும்போது, நண்பனுக்காக அந்த இயக்குநர் வாய்ப்பை விட்டுவிடும் சூழ்நிலை வருகிறது. நட்பா? தியேட்டரா?

அந்த நண்பனுக்கு பெண் பார்க்கிறார்கள். அட, அது நம்ம ஹீரோயின். ஹீரோவுக்கு இது தெரிய வர….நட்பா? காதலா?

தியேட்டருக்காக காதலியை விடவா? அல்லது நட்புக்காக தியேட்டரை விடவா? அல்லது காதலிக்காக நட்பை விடவா? அல்லது நட்புக்காக தியேட்டரை விடவா? அல்லது தியேட்டர், காதல் இரண்டையும் விட்டுடலாமா? அல்லது தியேட்டர், காதல், நட்பு மூன்றையும் விட்டுவிடலாமா? சினிமா வாய்ப்பையும் விட்டுட்டமே!..........ரிசல்ட் என்னன்னா, ஆளை விடுடா சாமீ தான்!

சினிமாவிலும் ஜெயித்துவிட்டார், அரசியலில்கூட இறங்கிவிட்டார், சிஎம் போஸ்ட் வேற வெயிட்டிங்..பதவியா, நட்பா, காதலா என்றெல்லாம் கதை போய்விடுமோ என்று தியேட்டரில் பதறித்துடித்தோம். நல்லவேளையாக இரண்டரை மணி நேரத்தில் ஆபரேட்டர், புரஜக்டரை ஆஃப் செய்துவிட்டார்.
ஒரு தியேட்டருக்கும் ஹீரோவுக்குமான நெருக்கம், இந்தப் படத்தில் அற்புதமாக சொல்லப்பட்டிருக்கும். இதன் இயக்குநர் சாக்ரடீஸ் திறமையானவர் என்பதற்கு அந்தப் பகுதி நல்ல உதாரணம். ஆனால் ஐடியாக்கள் இருக்கிறது என்பதற்காக, எல்லாவற்றையும் ஒரே படத்தில் கொட்டியது தான் தவறு.

காதலா, தியேட்டரா எனும் தளத்திலேயே படத்தின் கதையை முடித்திருக்கலாம். அதைச் செய்யாதது பெரும் தவறாகப் போனது.அதே போன்ற இன்னொரு உதாரணம், மாற்றான் திரைப்படம். 
குழந்தைகளுக்கான பால் பவுடரில் ஆபத்தான விஷயங்களை கலந்து விற்பனை செய்கிறார் ஹீரோவின் தந்தை. ஹீரோ எப்படி அதை தடுக்கிறான் என்பதே படத்தின் ஒன்லைன். ஹீரோ-குறிக்கோள்-வில்லன் என மூன்றும் இணைந்த சிம்பிளான ஒன்லைன் தான் இது. ஆனால் அதை கதையாக டெவலப் செய்த விதம் தான் நம்மை திக்குமுக்காடச் செய்தது.
ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தான் ஹீரோ. அவர்களில் ஒருவனுக்குக் காதல் அது இருவருக்கும் இடையே தரும் பிரிவு எனும் பாசமா, காதலா கதையுடன் படம் ஆரம்பிக்கிறது.

ஒரு ஃபாரின் லேடி சூர்யாவிடம் பழகி துப்பறிகிறாள். அதன்மூலம், சூர்யாவின் அப்பா, விளையாட்டு வீரர்களுக்கு சோதனையில் கண்டுபிடிக்க முடியாத ஊக்கமருந்து கண்டுபிடித்து, பெரிய ஆள் ஆனதை கண்டுபிடிக்கிறார்.

இரட்டையரில் ஒருவன் இறந்துபோக, அதற்குக் காரணானவர்களை பழி வாங்க புறப்படுகிறார் இன்னொரு சூர்யா. அதுசம்பந்தமாக ஃபாரின் எல்லாம் சென்று(!) ஆராயும்போது, பால்பவுடரில் அப்பா சில ரசாயனங்களைக் கலப்பது தெரியவருகிறது.

அங்கேயிருந்து அடுத்து குஜராத்தில் லேண்ட் ஆகிறார் ஹீரோ. அதை வைத்து கொஞ்ச நேரம்.

அடுத்து, ஹீரோ பத்துப்பேரின் விந்தணுவை மிக்ஸ் செய்து பிறந்தவன் எனும் மரபணு ஆராய்ச்சிக்கதை.

தான் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டேன் எனும் ஹீரோவின் அப்பா கதை.

எழுத்தாளர்கள் சுபா மிகத்திறமையானவர்கள் தான். அதற்காக அந்த திறமையை எல்லாம் ஒரே படத்தில் கொட்டினால், இத்தனை விஷயங்களை இரண்டரை மணி நேரத்துக்குள் யார் ஜீரணிப்பது?

எனவே ஒரே கதையில் பல ஐடியாக்களைக் கொட்டி, ஓவர்டோஸ் ஆக்குகிறோமா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள். சில நேரங்களில் நாம் எடுத்துக்கொண்ட கதையே, பல விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அதற்கு உதாரணங்கள், பருத்தி வீரனும் மங்காத்தாவும்.

பருத்திவீரன் கதை இரண்டு தலைமுறையாக நடப்பது. பருத்திவீரனின் அப்பா வேறு ஜாதியில் கல்யாணம் முடித்ததால், ஹீரோ-ஹீரோயின் குடும்பங்கள் பகையானது ஒரு முன் கதை.

ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையே அறியாத வயசில் புரியாத மனசில் வந்த காதல் இன்னொரு முன்கதை.

நிகழ்காலத்தில் பருத்திவீரனுக்கும் முத்தழகுக்குமான காதலும் முடிவும் தான் முக்கியக்கதை. ஆனால் அதில் உள்ள பிரச்சினையை விளக்க முதல் முன்கதையும், காதலை விளக்க இரண்டாவது முன்கதையும் தேவைப்பட்டது. அதை ஒன்றாகச் சொல்லாமல் பிரித்து, இரு ஃப்ளாஷ்பேக்கில் சொல்லி இருப்பார் அமீர். இரு தலைமுறைக்கதை என்றாலும், அது பருத்திவீரன் – முத்தழகுக்கு இடையேயான காதலை மையம் கொண்டே இருக்கும். மேலே பார்த்த உதாரணங்களில் அப்படியான மையப்புள்ளி, மிஸ்ஸிங். 

அதே போன்றே வெங்கட் பிரபு எழுதிய மங்காத்தா கதையில் அஜித் டிஸ்மிஸ் ஆவது, ஜெயப்ரகாஷுடன் நட்பாவது, த்ரிஷாவுடன் காதலாவது, பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் ஒரு கும்பலின் கதைகள் என கொஞ்சநேரத்துக்கு எங்கெங்கோ படம் அலைபாய்வது போல் இருக்கும். அது எல்லாமே சூதாட்டப் பணம் எனும் ஒரு விஷயத்தை சுற்றி நடப்பது விளக்கப்பட்டவுடன், கதை நமக்கு தெளிவாகிவிடுகிறது.

எனவே ஓவர்டோஸ் ஆகக்கூடாது என்பதன் அர்த்தம், பல விஷயங்கள் கொண்ட ஒரு கதையை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதல்ல. அதை ஒரு மையப்புள்ளியில் குழப்பமில்லாமல் இணைக்க முடியுமா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு மேலே சொன்ன உதாரணப் படங்கள் உதவும்.


(தொடரும்)


Casablanca-ம் நெஞ்சில் ஓர் ஆலயமும்

$
0
0
இன்ஸ்பிரேசனும் காப்பியும் :

ஆங்கிலத்தில் வந்த சிறந்த படங்கள் என்று ஒரு லிஸ்ட் போடும்போது, இந்த மூன்று படங்கள் தவறாமல் இடம்பிடிக்கும் : தலைவர்  ஹிட்ச்காக்கின் Vertogo(1958), Citizen Cane(1941), Casablanca(1942).

Casablanca ஒரு சிறந்த காதல் கதை என கொண்டாடப்படுகிறது. பல திரைக்கதை புத்தகங்களிலும் சினிமா இணைய தளங்களிலும் இந்தப் பெயர் வந்துகொண்டே இருக்கும். முதல் இரு படங்களை ஏற்கனவே பார்த்துவிட்டாலும், Casablanca பார்க்க இன்று தான் நேரம் கிடைத்தது. உண்மையில் அசத்தலான கதை தான்.
இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மானியப் பிடியில் இருந்த ஐரோப்பிய நகரம், Casablanca. பெரும்பாலும் பணக்கார அகதிகளால் நிரம்பிய ஊர். எனவே விசா மற்றும் திருட்டு விசா விற்பனை கனஜோராக நடக்கும் இடம். அங்கே நைட் கிளப் நடத்திவரும் ஹீரோ கையில் இரண்டு விசாவுக்கான பேப்பர் கிடைக்கிறது. யார் பெயரை வேண்டுமானாலும் அதில் எழுதி, இருவர் பயணிக்கலாம். ஜெர்மனிக்கு எதிரான போராளிக்குழுவினருக்குச் சொந்தமானது அந்த விசா. அந்த குழுவின் தலைவன் அல்லது முக்கியப்புள்ளி தப்பிப்பதற்கு உதவும் டாகுமெண்ட், அந்த விசா. ஹீரோ யாருக்கும் இரக்கம் காட்டாத, ரஃபான ஆள். அந்த விசாவைத் தேடி, அந்த தலைவன் தன் மனவியுடன் அந்த க்ளப்பிற்கு வருகிறான். அந்த மனைவி தான் ஹீரோயின், ஹீரோவின் முன்னாள் காதலி.

 ‘வருவாள் என நான் தனிமையில் இருந்தேன்..வந்தது வந்தாள், துணையுடன் வந்தாள்’ என ஹீரோ கலங்கிப் போகிறார். இறுதியில் கணவனின் உயிரைக் காப்பாற்ற ஹீரோ உதவினாரா? விசாவுடன் இறுதியில் பயணிப்பது கணவன் - மனைவியா? அல்லது காதலன் - காதலியா? எனும் சஸ்பென்ஸை மையப்படுத்தியே படம் நகர்கிறது.

தமிழில் சிறந்த படங்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டால், ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம்(1962) படம் கண்டிப்பாக இடம்பெறும். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியடைந்த படம். ஹீரோ ஒரு டாக்டர். அங்கே ஒரு பேசண்ட் தன் மனைவியுடன் வருகிறார். மனைவி தான் ஹீரோயின், டாக்டரின் முன்னாள் காதலி. காதலா? தொழில் தர்மமா? எனும் கேள்வியை மையப்படுத்தி படம் நகர்ந்தது. 

Casablanca மற்றும் நெஞ்சில் ஓர் ஆலயம் படங்களின் கதைக்கரு ஒன்று தான், அதாவது, கணவனின் உயிர் காதலனின் கையில். Casablanca படத்தில் இன்ஸ்பையர் ஆகித்தான் ஸ்ரீதர், நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தை எடுத்தாரா என்று தகவல் இல்லை. இருப்பினும்...
டிவிடியைப் பார்த்து அப்படியே சுட்டு மானத்தை வாங்கும் மகான்கள், இன்ஸ்பிரேசன் என்றால் என்ன என்று புரிந்துகொள்ள இந்த இரு படங்களையும் பார்க்கலாம். கேரக்டர், சூழ்நிலை, காட்சிகள் என எல்லாமே தமிழில் புதியவையாக இருக்கின்றன. ஒரே ஒற்றுமை, உணர்ச்சி. மிகப்பெரிய வேற்றுமை, Casablanca-ல் ஹீரோயின் ஹீரோவுடன் இருக்கவே விரும்புகிறாள். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் நம் கலாச்சாரப்படி, ஹீரோயின் கணவனுக்கு உண்மையாக இருக்கிறாள்.

காப்பி - இன்ஸ்பிரேசனுக்கு நான் ஒரு வேடிக்கையான டெஃபனிசன் கொடுப்பதுண்டு : நமக்குப் பிடிச்சவன் சுட்டா, இன்ஸ்பிரேசன்; பிடிக்காதவன் சுட்டா காப்பி. இந்த இரு படங்களைப் பார்த்ததும், எனக்குத் தோன்றியது : இரண்டாவதாக வந்த படத்தைப் பார்த்ததும் கடுப்பானால், அது காப்பி. என்ன ஒரு புத்திசாலித்தனம் என்று இம்ப்ரஸ் ஆனால், அது இன்ஸ்பிரேசன்!

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-18)

$
0
0
18. லாஜிக் ஜாக்கிரதை
திரைக்கதை எழுத்தாளர்களை மிரட்டும் இரு வார்த்தைகள் லாஜிக்கும் க்ளிஷேவும். இந்த பதிவில் லாஜிக் பற்றிப் பார்ப்போம்.

முதலில் லாஜிக் என்றால் என்னவென்று புரிந்துகொள்வோம். லாஜிக் என்பதை தமிழில் தர்க்கம் என்று மொழிபெயர்க்கலாம். தர்க்கம் என்பது விவாதம் என்று பொருள்படும். அதாவது தவறாகத் தோன்றும் ஒரு விஷயத்தை விவாதம் மூலம் உண்மை என்று நிறுவ முடியும் என்றால், அது தர்க்கரீதியில் சரி..அதாவது லாஜிக்கான விஷயம் என்று அர்த்தம்.
உதாரணமாக பில்லா போன்ற ஆள் மாறாட்டக் கதையை எடுத்துக்கொள்வோம். ஒரிஜினலின் இடத்திற்கு டூப்ளிகேட் ஆள் மாறாட்டம் செய்து போகிறார். அப்படி ஆள் மாறாட்டத்தில் போகும் ஆளிற்கு, ஏதோவொரு விதத்தில் அடிபடும் வாய்ப்பு இருக்கிறது இல்லையா? அப்போது அவர் ஹாஸ்பிடலுக்குப் போவார். அது ஒரிஜினல் ஆள் வழக்கமாகச் செல்லும் இடமாக இருக்கும். அந்த டாக்டர் ஒரிஜினலை மட்டுமே அறிந்தவராக இருப்பார். அடிபட்ட ஆள்மாறாட்ட ஆளிற்கு, ஒரிஜினலின் ப்ளட் குரூப் ரத்தத்தை ஏற்றிவிட்டால் என்ன ஆகும்?

சங்கு தான் இல்லையா? எனவே அப்படி சீன் வைக்கக்கூடாது என்று விட்டுவிடலாமா? 
ல்லை.

ஒரிஜினலுக்கும் டூப்ளிகேட்டுக்கும் ப்ளட் குரூப் வெவ்வேறாகத் தான் இருக்குமா?
ஆம்

ஒன்றாக இருக்க வாய்ப்பே இல்லையா?
இருக்கு..0.0001% வாய்ப்பு இருக்கு.

அப்போ அந்த டூப்ளிகேட் 0.0001% ஆளாக இருக்கலாம், இல்லியா?
ஆம்..இருக்கலாம்.

எனவே இது தர்க்கரீதியாக சரி தான். லாஜிக் என்பது உண்மை அல்ல, உண்மை மாதிரி, உண்மைக்கு அருகே வரும் ஒரு விஷயம்.

இப்போது நான் எழுத நினைத்திருக்கும் ஒரு திரைக்கதையின் ஒன் லைனை சொல்கிறேன்:
ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிற்கும் உடன் வேலை பார்க்கும் வில்லனுக்கும் காதல். இந்த காதலுக்கு இடைஞ்சலாக இருப்பது, அந்த பெண்ணின் கணவனும்,(ஹீரோ) மாமியாரும், அவளின் மூன்று வயது குழந்தையும். இந்த மூவரையும் கொன்றுவிட்டால், நாம் சேர்ந்துவிடலாம் என்று திட்டமிடுகிறாள். வில்லன் சென்று மூன்று பேரையும் கொல்ல முயற்சிக்கிறான். மாமியாரும், குழந்தையும் இறந்துவிடுகிறார்கள். ஹீரோவும் இறந்துவிட்டதாக வில்லன் நினைக்கிறான். ஆனால் ஹீரோ உயிர் பிழைக்கிறான். அப்புறம் என்ன ஆச்சு என்பதே கதை.

எப்படி இருக்கிறது?................சும்மா சொல்லுங்க, கேவலமாக இருக்கிறது இல்லையா? ’ஒரு தாய், குழந்தையைக் கொல்வாளா? லாஜிக்கே இல்லையே’ என்று தோன்றுகிறது இல்லையா? அது நான் எழுதிய கதை கிடையாது. அது கேரளாவில் இந்த வருடம் நடந்த உண்மைச் சம்பவம். அது கடவுள் எழுதிய கதை. லாஜிக் எங்கேய்யா? என்று அவரிடம் கேட்க முடியுமா?
மேலே சொன்ன சம்பவத்தையும் தர்க்கரீதியாக நடக்க வாய்ப்பு உண்டு என்று நிறுவ முடியும். ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை லாஜிக் என்பது விவாதித்து நிறுவும் விஷயம் மட்டும் அல்ல. பெருவாரியான மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் விஷயமாகவும் இருக்க வேண்டியது அவசியம். ‘நடப்பதைத் தானே எடுக்கிறோம். லாஜிக்கலாக கரெக்ட் தான்’ என்று நினைத்து எடுத்தால், ஊற்றிக்கொள்ளும்.

எனவே சினிமா லாஜிக் என்பதை ‘தர்க்கரீதியில் சரியான, அதே நேரத்தில் வெகுஜன கருத்துடன் ஒத்துப்போகிற விஷயம்’ என்று தான் வரையறுக்க வேண்டும். அதாவது உண்மையை சுவாரஸ்யத்திற்காக வளைக்கிறோம், ஒரு அளவுடன்!

சினிமாவில் நாம் கதை தான் சொல்கிறோம். அது உண்மை அல்ல என்பது படம் பார்ப்போருக்கு நன்றாகவே தெரியும். எனவே நுணுக்கமாக 100% உண்மையாக இருக்கிறதா என்று பார்ப்பது வீண்வேலை. என்னைப் போன்ற வெட்டி விமர்சகர்கள் ‘அது ஏன் அப்படி இருக்கு? இது ஏன் இப்படி இல்லை?’ என்று எழுதினாலும், பெருவாரியான ரசிகர்களுக்கு அந்த லாஜிக் விஷயம் உறுத்தாது என்பதே உண்மை.

பெர்ஃபெக்ட்டாக உண்மையை எடுத்தால், அது டாகுமெண்டரியாகத்தான் வருமேயொழிய. சினிமாவாக வராது. ஹீரோ 30 பேரை அடிக்கிறான் என்று சீன் வைத்தால், தர்க்கரீதியில் சரியென்று நிரூபிக்க சில காரணங்களையும் கூடவே வைத்தால் போதுமானது. அவர் ஹீரோ..அதனால் அடிப்பார் என்பது மாஸ் ஹீரோ படங்களைத் தவிர்த்து மற்ற படங்களில் எடுபடாது.

எனவே கதையானாலும், சீன் ஆனாலும் லாஜிக் இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். அந்த விஷயத்தில் கோட்டை விட்ட படங்கள் நிறைய உண்டு. உதாரணம், கார்த்தி நடிப்பில் வெளியான அலெக்ஸ்பாண்டியன்.
வில்லன் காலாவதியான மருந்துகளை ஒரு கப்பலில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறான். அதை தமிழ்நாட்டுக்குள் விற்க, முதல்வரின் அனுமதி வேண்டும். அவரோ நல்லவர். ஒத்துக்கொள்ள மறுக்கிறார். எனவே அவர் மகளை ஹீரோவை வைத்துக் கடத்தி மிரட்டுகிறான். பின்னர் ஹீரோ மனம் திருந்தி, அடிபின்னுகிறார் என்பதே கதை.

முதல்வரின் அனுமதிக்காக மிரட்டுகிறான் எனும்போது முதல்வர் கையெழுத்துப் போட்டுவிடலாம். அந்த மருந்துகள் எங்கெல்லாம் நாட்டுக்குள் விற்கப்படுகின்றன என்று கண்காணிக்க முதலிலேயே ஏற்பாடு செய்துவிடலாம். மகளை மீட்டவுடன், அந்த மருந்துகளையும் வில்லனையும் அழித்துவிடலாம். ஒரு மாநிலம் என்பது முதல்வரின் கோட்டை. அதற்குள் நுழைய, அவரை மிரட்டுவது என்பது முட்டாள்தனம். ‘சரி, வா’ என்று உள்ளே விட்டு கும்மி விடலாம்.

எனவே அங்கே லாஜிக் சுத்தமாக மிஸ்ஸிங். அதற்குப் பதிலாக பல கண்டெய்னர் லாரிகளில் தங்கம்/போதை மருந்து இருக்கிறது. அதை மாநிலத்துக்கு வெளியே கொண்டு போக வேண்டும். அதற்கு முதல்வர் இடைஞ்சல் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், அது லாஜிக்! வேலை முடிந்ததும் எஸ்கேப் ஆகிவிடலாம்.

நடைமுறையில் கதை-திரைக்கதை/சீன்ஸ் ஆகிய இரண்டில் ஒன்று லாஜிக் இல்லாமல் இருந்தால்கூட படம் தப்பித்துக்கொள்கிறது. குறிப்பாக காமெடிப்படங்களை நாமும் ஜாலியாக அணுகுவோம் என்பதால், அங்கே விளையாடலாம். 

னால் அலெக்ஸ்பாண்டியன் போன்ற சீரியஸ் கதையில் லாஜிக் மிஸ் ஆனதால், படம் தோல்வி அடைந்தது. நம்முடைய நோக்கம் பெட்டரான திரைக்கதையை எழுதுவது என்பதால், லாஜிக் விஷயத்தில் காம்ரமைஸ் செய்யாதீர்கள். நீங்கள் திறமையற்றவர் என்பதற்கு வெளிப்படையான உதாரணமாக அது நிற்கும்.


(அடுத்த ஞாயிறு....தொடரும்)

LA Confidential (1997)- திரை விமர்சனம்

$
0
0
திரைப்பட ஜெனர்களில் எனக்குப் பிடித்தது ஃபிலிம் நுஆர்(Film Noir)-ம் அதன் நவீன வடிவமான நியோ-நுஆர்(Neo-Noir)-ம் தான். சமூகத்தின் இருண்ட பக்கங்களைப் பற்றிப் பேசும்படங்கள் என்பதாலும், மற்றபடங்களைவிட இவற்றில் ஒளிப்பதிவு நன்றாக இருக்கும் என்பதாலும் இந்த ஜெனரில் வரும் நல்ல படங்களைத் தவறவிடுவதில்லை. ஆனாலும் எப்படியோ இந்தப் படத்தை கவனிக்காமல் விட்டிருக்கிறேன். சமீபத்தில் நண்பர் ‘மதிமுக ஸ்ரீதரன்’, இந்தப் படத்தைப் பார்க்கும்படி சொன்னார். அவருக்கு ஆயிரம் நன்றிகள்.
வித்தியாசமான மூவி போஸ்டர்
ஹாலிவுட் வீற்றிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கென்று ஒரு கலர்ஃபுல் இமேஜ் நம் மனதில் இருக்கிறது. இந்தப் படம், அங்கே நடக்கும் திரைமறைவு விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது. போலீஸ், கோர்ட், மீடியா, ஹாலிவு என எல்லாவற்றிலும் இருக்கும் ஊழலையும் குற்றங்களையும் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைக்கிறது. ஒரு இரண்டாந்தர நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான், இந்தப் படம். ஆனால் திரைக்கதையிலும் மேக்கிங்கிலும் அசத்திவிட்டார்கள்.

கதை கொஞ்சம் சிக்கலானது தான். மூன்று போலீஸ் ஆபீசர்களை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. இரண்டாம்பாதியில் மூன்றுபேருமே ஒரே புள்ளியில் சந்திக்கிறார்கள். அதைக் குழப்பாமல் சொல்லியதில் தெரிகிறது, திரைக்கதை ஆசிரியரின் திறமை.

1. எட்மண்ட் எக்ஸ்லி (Guy Pearce) : புதிதாக வேலைக்குச் சேரும் நேர்மையான ஆபீசர். சட்டப்படியே எல்லாம் நடக்கவேண்டும் எனும் கொள்கை உடையவர். அவர் தந்தையும் போலீஸ்காரராக இருந்து, அடையாளம் தெரியாத யாரோ ஒரு திருடனால் கொல்லப்பட்டவர். அந்த திருடன் பிடிபடவேயில்லை. அவனுக்கு எக்ஸ்லி வைத்திருக்கும் பெயர் ‘Rollo Tomasi’. 

ஒரு கிறிஸ்துமஸ் இரவில், போலீஸ்காரர்கள் சில கைதிகளை அடித்தே கொல்கிறார்கள். அதை எதிர்த்து சாட்சி சொல்லி, புரமோசன் வாங்குகிறான் எக்ஸ்லி. அதனால் மற்ற போலீஸ்காரர்களை பகைத்துக்கொள்கிறான். எக்ஸ்லியைப் பொறுத்தவரை சட்டத்தை தன் கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. இவனது சாட்சியத்தால், Stensland எனும் ஒரு ஆபீசர் வேலையை இழக்கிறான். கொஞ்சநாள் கழித்து, ஒரு ரெஸ்டாரண்டில்(Nite Owl) நடக்கும் கூட்டுக்கொலையில் Stensland கொல்லப்படுகிறான். அந்த கேசை விசாரிக்கும் பொறுப்பும் எக்ஸ்லிக்கே வருகிறது.
2. பட் ஒயிட் (Russell Crowe):நேர்மையான, அதே நேரத்தில் ப்ராக்டிகலான போலீஸ் ஆபீசர். கோர்ட், கேஸ் என்று இழுத்தடிக்காமல் குற்றவாளிகளை ‘டுமீல்’ ஆக்குவது நல்லது என்று நினைப்பவன். பெண்கள் மீதான வன்முறை என்றால், காண்டாகிவிடுபவன். வேலையை இழந்த Stensland-ல் நண்பன். எனவே எக்ஸ்லியை வெறுப்பவன். தொடர்ந்து நண்பன் கொலை செய்யப்பட, அந்த கேஸை அவனே துப்பறிய ஆரம்பிக்கிறான். (இந்தப் படத்தில் நடிக்கும்போது ரஸ்ஸல் சாதாரண நடிகர். படம் வெளியானதும் பெரிய ஸ்டார் ஆகிவிட்டார். அசத்தலான நடிப்பு.)

3. ஜாக் வின்சென்ஸ் (Kevin Spacey): லஞ்சம் வாங்காமல் பொழைக்க முடியாது என்று லட்சியவாதத்தை எல்லாம் தூக்கி கடாசிவிட்டு வாழும் சராசரி போலீஸ்காரன். ஒரு கேஸை சால்வ் செய்தால், டிடெக்டிவாக புரமோட் ஆகலாம் என்று உழைத்துக்கொண்டிருப்பவன். ஆனாலும் மெயின் வேலை, போலீஸ்காரர்கள் பற்றி எடுக்கப்படும் ஒரு டிவி சீரியலுக்கு டெக்னிகல் அட்வைஸாராக இருப்பதும், Hush-Hush எனும் பத்திரிக்கைக்கு பரபரப்பான கவர் ஸ்டோரியை ‘உருவாக்கி’ கொடுப்பதும் தான். எக்ஸ்லி Stensland கேஸ்க்கு உதவ, ஜாக்கையும் கூப்பிடுகிறான்.

இப்படி மூன்று பேரையுமே இணைக்கும் விஷயமாக Stensland கொல்லப்பட்ட நைட் ஔல் கேஸ் இருக்கிறது. அந்த கேஸை விசாரிக்க இறங்கும்போது, மூன்றுபேரின் வாழ்க்கையுமே புரட்டிப்போடப்படுகிறது. சட்டப்படியே எல்லாவற்றையும் சரி செய்துவிட முடியாது என்று எக்ஸ்லி உணர்கிறான். ஜாக், தன்னைத் திருத்திக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பாக நைட் ஔல் கேஸை எடுத்துக்கொண்டு, அந்த நேர்மைக்காக உயிரையும் விடத் துணிகிறான்.

படம் பார்க்கும் நமக்கு, யார் ஹீரோ என்பதில் தான் ஆரம்பத்தில் தடுமாற்றம் வருகிறது. ஜாக் நிச்சயம் ஹீரோ அல்ல, யதார்த்தத்திற்கு பலியாகிவிட்ட சாமானியன். எக்ஸ்லியின் நேர்மை அவனை ஹீரோவாக காட்டினாலும், பெர்சனலாக அவனுடன் நாம் அதிகம் ஒன்ற முடிவதில்லை. பிரக்டிகலான ஆளாக வரும் பட் ஒயிட் தான் நம்மை அதிகம் கவர்கிறான். சிறுவயதில் அவனுக்கு நிகழ்ந்த சம்பவங்கள், பிராஸ்டிடியூட்(ஹீரோயின்) உடன் அவனுக்கு ஏற்படும் காதல், நண்பனின் கொலைக்கு பழி வாங்க அலையும் ஆவேசம் ஆகியவை அவனையே ஹீரோவாக முன்னிறுத்துகின்றன. எக்ஸ்லி, பட் ஒயிட்டின் எதிர் பிம்பமாக வருகிறான். இரு எதிர் துருவங்களும் கதை நகரும்போது, எப்படி இணைகிறார்கள் என்று காட்டப்படுவதால், நம்மால் பட் ஒயிட்டை ஹீரோவாக எடுத்துக்கொள்ள முடிகிறது.

மீடியாவில் வரும் செய்திகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதை படம் முழுக்க போட்டு உடைத்துக்கொண்டே இருக்கிறார்கள். வில்லனைக் கூட மக்கள் மத்தியில் தியாகிகளாக மீடியாக்கள் ஆக்க வேண்டிய அவசியம், குற்றங்களை மீடியாவும் போலீஸுமே சேர்ந்து உருவாக்கிவிட்டு அதைச் செய்தியாக்குவது என பல அண்டர்வேர்ல்டு விஷயங்களை வெட்டவெளிச்சமாக்குகிறது படம்.

ஃபிலிம் நுஆரில் வரும் தவிர்க்க முடியாத விஷயங்களில் ஒன்று, femme fatale. அதாவது ஒரு பெண்(ஹீரோயின்) ஹீரோவுடம் பழகுவதும், பின்னர் ஹீரோவை ஏமாற்றுவது அல்லது பெரும் ஆபத்தில் மாட்டிவிடுவது. தமிழில் femme fatale கேரக்டரின் உச்சம், சுப்ரமணியபுரம் சுவாதி. பழைய படங்களில் ‘எல்லாமே நடிப்பா?’ என்று கேட்கப்பட்ட ‘புதிய பறவை’ சரோஜா தேவி ஞாபகம் வருகிறது. இந்தப் படத்திலும் femme fatale கேரக்டர் வருகிறது.
ஹாலிவுட் ஸ்டார் போன்றே ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்ட ப்ராஸ்டிடியூட்களில் ஒருவராக, லின் ப்ராக்கென் (Kim Basinger)கேரக்டர் வருகிறது. நண்பனுடன் கொல்லப்பட்டவள், ஹீரோயினின் தோழி என்பதால் பட் ஒயிட் இவளிடம் வந்து சேர்கிறான். பார்த்தவுடனே, காதலில் விழுகிறான். ஆனாலும் இந்த femme fatale கேரக்டர், ஹீரோவை ஏமாற்றுவதில்லை. ஏமாற்றப் போகிறாள் என்று நாம் நம்பும்போது, சர்ப்ரைஸாக லின் நல்லவளாக ஆகிறாள்.

மேலும், ஃபிலிம் நுஆரில் சந்தோசமான முடிவு என்பதும் அபூர்வம். இந்தப் படம், சுபமாக முடிகிறது. வில்லனை எக்ஸ்லி கொல்ல மாட்டான் என்று நம்மை நினைக்கவைத்து, கடைசி நிமிடத்தில் மனம் மாறி வில்லன் கொல்லப்படும்போது நமக்கு கை தட்டத் தோன்றுகிறது.

முதலில் எக்ஸ்லி கேரக்டரை நாம் புரிந்துகொள்ளப் பயன்படும் ‘Rollo Tomasi’வார்த்தை, இறுதியில் வில்லன் பிடிபடக் காரணம் ஆவது சுவாரஸ்யம்.  ‘நீ எதற்காக போலீஸில் சேர்ந்தாய்?’ என்ற கேள்விக்கு லஞ்சப் போலீஸ் ஆகிவிட்ட ஜாக், ஒருநிமிடம் கண் கலங்கி ‘ஞாபகம் இல்லை’ என்று சொல்லும் சீன், ஒரு விஷுவல் இலக்கியம். பல லட்சியங்களுடன் வேலையில் சேர்ந்த ஒருவன், மனசாட்சியை அடகு வைத்து எப்படி சராசரி போலீஸாக ஆகிவிட்டான் என்பதை பல காட்சிகள் மூலம் சொல்லாமல், அந்த ஒரு சின்ன ஷாட்டிலேயே முடித்திருப்பார்கள்.

நேர்மையான, புனிதமான விஷயங்கள் என்று நாம் நம்புவதையெல்லாம் கலைத்துப் போடுவதும், ஏமாற்றமும் விரக்தியுமே சகமனிதர்களால் நமக்கு அதிகம் கிடைக்கின்றன என்று உணர்த்துவதுமே ஃபிலிம் நுஆரின் அடிப்படைக் குறிக்கோள். ஊழல், கொலை, செக்ஸ், femme fatale, ஏமாற்றுதல், வாய்ஸ் ஓவர் போன்ற எல்லா ஃபிலிம் நுஆரின் கூறுகளையும் ஒரே படத்தில் கொண்டுவந்திருப்பது தான் -ன் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். அதுவே நம்மை ‘என்னா படம்டா’ என்று அசர வைக்கிறது.

இருக்கு ஆனா இல்லை- திரை விமர்சனம்

$
0
0
அதாகப்பட்டது... :
குவைத் வாழ் தமிழர்களின் தயாரிப்பில் உருவாகி சென்ற வாரம் வெளியான படம், இருக்கு ஆனா இல்லை. ரம்ஜான் லீவ் முடிந்து தியேட்டர் இன்று தான் ஓப்பனிங் என்பதால், இன்று இங்கே ரிலீஸ். VIP, சதுரங்க வேட்டை எனும் இரு ஹிட் படங்களுடன் வெளியானதால், அதிகம் கவனிக்கப்படாமல் போய்விட்ட படம் இது.
ஒருஊர்ல..:
ஹீரோ ஒரு ஆக்சிடெண்ட்டில் சிக்கிப் பிழைக்கிறான். அதே ஆக்சிடெண்ட்டில் முன்பின் தெரியாத ஒரு பெண்(ஹீரோயின்) இறக்கிறார். ஹீரோவைத் தொடர்ந்து வந்து, பேயாக ஹீரோ வீட்டிலேயே தங்குகிறார். தான் யார் என்று கண்டுபிடித்துத் தரும்படி ஹீரோவைக் கேட்கிறார். அந்த பேயின் பேக்ரவுண்டை ஹீரோ கண்டுபிடிப்பதும் ஆபத்தில் இருக்கும் ஹீரோயினின் சகோதரியைக் காப்பாற்றுவதுமே கதை.

உரிச்சா....:
ஆதவன் தன் நண்பர்களுடன் சரக்கடித்தபடியே ஹீரோவின் கதையைச் சொல்வதாக திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள். அது சுவாரஸ்யமாகவே இருக்கிறது.
சொங்கியாக, எதைத் தொட்டாலும் விளங்காத ஆளாக ஹீரோ விவந்த் அறிமுகம் ஆகிறார். அடுத்து நடக்கும் ஆக்ஸிடெண்ட்டும், தொடர்ந்து வரும் பேய் எபிசோடும் ரசிக்க வைக்கின்றன. பிறகு பேய் ஹீரோயினும்(அறிமுகம் ஈடன்) ஹீரோவும் நண்பர்கள் ஆகிறார்கள். தான் யார் என்று மறந்து போய்விட்டதாகவும், அதைக் கண்டுபிடித்துச் சொன்னால், தான் திரும்பிப் போய்விடுவதாகவும் ஹீரோயின் சொல்கிறார்.

ஹீரோ தேடுவதும், கூடவே இருவருக்குமான உறவு நெருக்கமாவதுமாக படம் இடைவேளைவரை நன்றாகவே செல்கிறது. ஹீரோயின் யார் என்று கண்டுபிடிப்பதுடன் இடைவேளை விடுகிறார்கள்.
பிரச்சினையே அதில் தான் ஆரம்பிக்கிறது. கண்டுபிடித்தவுடனே படம் முடிந்துவிட்ட ஃபீலிங் நமக்கு வந்துவிடுகிறது. ஹீரோயின் ட்வின்ஸ் என்றும் இன்னொரு ஹீரோயின் ஹாஸ்பிடலில் ஆபரேசனுக்காக அட்மிட் ஆகியிருப்பதாகவும், அவரைக் கொன்றுவிட்டு அவர் உடல் உறுப்புகளைத் திருட ஹாஸ்பிடல் முயல்வதாகவும் கதையைக் கொண்டுபோய் இருக்கிறார்கள்.

அடுத்து, தன் அக்காவைக் காப்பாற்றும்படி ஹீரோயின் கேட்க, ஹீரோ அந்த வேலையையும் ஒத்துக்கொள்கிறார். அதையாவது அதிரடி ஆக்சன்களுடனோ, சஸ்பென்ஸுடனோ சொன்னார்களா என்றால், இல்லை. சப்பையான வில்லன் டாக்டர், அவரை எதிர்கொள்ள முடியாமல் கிளைமாக்ஸ்வரை சுற்றிசுற்றி ஓடிவரும் ஹீரோ என படம், டெம்போவை இழக்கிறது.

இடையில் செகண்ட் ஹீரோயினுடன் ஒரு சவசவ காதல் எபிசோடு வேறு. அந்த கேரக்டர், இந்தக் கதைக்கு எதற்கு என்பது டைரக்டருக்கே வெளிச்சம். ஆதவனும் இடைவேளைக்குச் சற்றுமுன் காணாமல் போகிறார். கிளைமாக்ஸுக்குக் கொஞ்சம் முன் வந்து, மீண்டும் கிச்சுகிச்சு மூட்டுகிறார். அவர் வந்தபின்பே, ஓரளவு ரிலாக்ஸாக இருக்கிறது.

ஹீரோயின் யார் என்று கண்டுபிடிப்பது தான் ஹீரோவின் குறிக்கோள். இவ்வாறு குறிக்கோள் அமைக்கும்போது, ஹீரோயின் யார் எனும் உண்மை அதிர்ச்சியூட்டுவதாகவும், ஹீரோவுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டியது அவசியம். ’அவரா?..அவர் ஒரு பொண்ணு’ என்பது போல் உண்மை சப்பென்று இருக்கிறது. அதன்பின் இரண்டாவது குறிக்கோளாக ‘ஹீரோயினின் அக்காவைக் காப்பாற்றுவது’ வருகிறது. அதில் ஹீரோவின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது.

இண்டர்வெல்வரை இருந்த விறுவிறுப்பை, இரண்டாம்பாதியில் மெயிண்டெய்ன் செய்யத் தவறிவிட்டு, மீண்டும் கிளைமாக்ஸில் விறுவிறுப்பாகி படம் முடிகிறது. இயக்குநர் சரவணனுக்கு இது நல்ல ஆரம்பம். இன்னும் இறங்கி அடிக்க வேண்டும், பாஸ்!

விவந்த்:
அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு இயல்பாக இருக்கிறார். வாரிசு நடிகர்களைவிட நன்றாக நடிக்கிறார். முன்பு ஜெயா டிவியின் வீஜே-யாக இருந்தாராம்.(அதெல்லாம் பெருமையான்னு கேட்டால்…!!) நம்பிக்கை தரும் அறிமுகம். நல்ல எதிர்காலம் இருக்கிறது.
 ஈடன்:
பேய் என்றாலும் கும்மென்று அழகாக இருக்கிறார். சும்மா நாலு பாட்டுக்கு வந்துவிட்டுப் போகும் கேரக்டர் இல்லை. படத்தின் கதையே இவரை மையப்படுத்தித் தான். புதுமுகம் என்றாலும், அந்த கேரக்டரை அசால்ட்டாக செய்திருக்கிறார். நல்ல நடிப்பு. ஹீரோவை ஆரம்பத்தில் மிரட்டுவது, பின் நட்பாவது, பிரியும்போது காதலை உணர்வது என ரசிக்க வைக்கிறார். தமிழன் விரும்பும் அம்சங்களுடன் இருப்பதால், ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
மனீஷா:
இரண்டாவது ஹீரோயின் என்று சொன்னார்கள். சவசவ என்று இருக்கிறார். ஏற்கனவே இடைவேளைக்குப் பின் படம் டல் ஆகிறது, இவர் வேறு ஒரு டூயட் பாடி இம்சிக்கிறார். நல்ல பாடல் அது, ஆனாலும் பார்க்க முடியவில்லை.
ஆதவன்:
படத்தில் இருக்கும் பெரும் ஆறுதல்..பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் ஓவர் சவுண்டில் பேசிக்கொண்டே இருக்கிறார். தனக்கென ஒரு உடல்மொழியை டெவலப் பண்ண வேண்டியது அவசியம். பீட்சா டெலிவரி பாய் போன்ற உடல்மொழி, நகைச்சுவைக்கு உதவாது. இன்னும் கொஞ்சம் நடிங்க பாஸ்!
சொந்தபந்தங்கள்:
ஒய்.ஜி.மகேந்திரன் ’சைண்டிஸ்ட் இலக்கியவாதி’ கெட்டப்பில் நல்ல டாக்டராக வருகிறார். ஒரு தயாரிப்பாளர் ஐ.டி.கம்பெனி பி.எல்லாக வந்து, ஆதவனால் கலாய்க்கப்படுகிறார். இன்னொரு தயாரிப்பாளர் ஒரு சீனில் வில்லனாக வருகிறார். படத்தில் வரும் இன்னொரு முக்கிய கேரக்டர், ஹீரோயினின் அம்மா. யாரோ புதுமுகம் நடித்திருக்கிறார். இரண்டாம்பாதியில் கொஞ்ச நேரம் அம்மா செண்டிமெண்ட் ஓடுகிறது. அவர் புதுமுகம் என்பதால், பெரிய அட்டாச்மெண்ட் வரவில்லை. கதையில் அது ஒரு முக்கியமான கேரக்டர் என்பதால் செலவைப் பார்க்காமல், நல்ல அம்மா நடிகையைப் போட்டிருக்கலாம். 

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
  • ஆதவனை பாதியில் காணாமல் போகச் செய்தது. அவர் இல்லாத இரண்டாம்பாதிக் காட்சிகளில் நகைச்சுவை என்பதே இல்லை.
  • இரண்டாவது ஹீரோயினும், அந்த கேரக்டரும் 
  • முதல்பாதியை வேகமாக, சுவாரஸ்யமாக நகர்த்திவிட்டு, இரண்டாம்பாதியில் வேகத்தை இழந்தது 
  • முற்றிலும் புதுமுகங்களை நடிக்க வைத்ததால், பெரும்பாலான மக்கள் இந்தப் படத்தை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. முந்தைய பேய்பட ஹிட்டான யாமிருக்க பயமே-வில் ஹீரோ-ஹீரோயின் ஓரளவு தெரிந்தவர்கள், ஓவியா பெரிய அளவில் தெரிந்தவர். எனவே படம் பிக்கப் ஆக, அது உதவியது. இங்கே அது ஒரு குறை தான். 
  • ஹீரோயின் பேச்சைக் கேட்டு ஆபீஸில் வேலை செய்பவர்களை சப்பென்று அடித்ததால், வேலை போய்விட்டதாக ஹீரோ முதல்பாதியில் சொல்கிறார். இரண்டாம்பாதியில் அதே ஆபீஸில் இருந்து அமெரிக்கா அனுப்புவதாக வருகிறது. இடையில் ஒரு சீன், எடிட்டிங்கில் போய்விட்டதா என்று தெரியவில்லை.
  • இரண்டாவது ஹீரோயினுக்கு வரும் டூயட் பாடல்..முடியலை பாஸ்!

பாசிடிவ் பாயிண்ட்கள்:
  •      வித்தியாசமான தீம்
  •    முதல்பாதி முழுக்க வரும் நகைச்சுவையும் சுவாரஸ்யமான காட்சிகளும் 
  •   ஷமீரின் பிண்ணனி இசையும், ‘இது என்ன?’ ‘இருக்கு ஆனா’ பாடல்களும்
  •    பேய் எஃபக்ட்டைக் கூட்டிய ஒளிப்பதிவு
  •     புதுமுகங்கள் என்றாலும், நடிப்பில் பெரிய குறையில்லாமல் இயக்கி இருப்பது
  •      அந்த கிளைமாக்ஸ் சீன்..வில்லன் இறப்பது அட்டகாசம்
  •    ஹி..ஹி..ஹீரோயின்!

  பார்க்கலாமா? :
முதல்பாதிக்காகவும் கிளைமாக்ஸுக்காகவும் ஒருமுறை பார்க்கலாம்.

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-19)

$
0
0

19.க்ளிஷே எனும் ஆபத்து
.திரைக்கதை ஆசிரியர்களை டரியல் ஆக்கும் விஷயம், க்ளிஷே. இது என்ன என்று சிம்பிளாகப் பார்த்தால், ஏற்கனவே பார்த்துச் சலித்த காட்சிகள் என்று சொல்லலாம்.

உதாரணமாக சிறுவனாக இருக்கும் ஹீரோ பெரியனவாக ஆனான் என்பதைச் சொல்ல வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு எளிய வழியாக இருந்தது, ஒரு சைக்கிளில் ஏறி பெடலை மிதிப்பதைக் காட்டுவது தான். சைக்கிள் சக்கரத்துடன் காலச்சக்கரமும் சுற்றிவிடும். எம்.ஜி.ஆர் காலத்தில் ஆரம்பித்து டி.ராஜேந்தர் காலம்வரை, இந்த உத்தி பயன்படுத்தப்பட்டது.

ஆனால் ஒரு கட்டத்தில் இது பார்வையாளர்களுக்கு சலிப்பையும் ஏளனச் சிரிப்பையும் உண்டாக்கியது. ஏனென்றால் எப்போதும் புதிய விஷயங்களை எதிர்பார்த்தே, அவர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். எளிதில் யூகிக்கக்கூடிய அல்லது ஏற்கனவே பிற படங்களில் வந்த காட்சிகள் அவர்களை படத்துடன் ஒன்ற வைக்காமல் தொந்தரவு செய்யும். அவையே கிளிஷே என்று சொல்லப்படுகின்றன.
அண்ணாமலை ஷூட்டிங்கில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு ஒரு சிக்கல் வந்தது. இளைஞனாக பால்காரனாக இருக்கும் சூப்பர் ஸ்டார், 18 வருடங்களுக்குப் பிறகு வயதானவராகவும் பணக்காரனாகவும் ஆனதைக் காட்ட வேண்டும். வயது மட்டும் கூடுகிறது என்றால், அண்ணாமலை சைக்கிளையே மிதிக்க வைத்துவிடலாம். ஆனால் உழைப்பால் உயர்கிறார் என்றும் காட்ட வேண்டும்.

எனவே அவர் குடும்பத்துடன் சில பிஸினஸ் செய்வதாக, பிண்ணனி இசையுடன் காட்டலாம் என்று முடிவெடுத்து, காட்சிகளை ஷூட் செய்தார். அதன்பின் எடுத்ததைப் போட்டுப் பார்த்தபோது, துண்டு துண்டாக காலம் நகர்வது டாகுமெண்டரி பட எஃபக்ட்டைக் கொடுப்பது தெரிய வந்தது. அப்போது என்ன செய்யலாம் என்று யோசித்தபோது தான், ஒரு புது ஐடியா அவருக்கு உதித்தது.

நண்பனை எதிர்த்து ஒரு சவால் பாடலை பிண்ணனியில் சூப்பர் ஸ்டார் பாடுவதாக காட்சிகளை அமைத்தார். ‘வெற்றி நிச்சயம்’ என காற்றில் முடி பறக்க சூப்பர் ஸ்டார் பாட, கூடவே காலமும் ஸ்மூத்தாக உருண்டு ஓடியது. அப்போது மிகவும் பாரட்டப்பட்ட உத்தி இது. சைக்கிள் பெடல் க்ளிஷேவைத் தாண்டி, புதிதாக யோசித்ததால் அந்த காட்சிகளை ரசிக்க முடிந்தது.

ஆனால் இன்று அதே உத்தியை படத்தில் வைத்தால், ‘ஒரே பாட்டுல கோடீஸ்வரன் ஆகப் போறான்யா’ எனும் சலிப்பே பார்ப்பவர் மனதில் எழும். அதாவது புதிய, ரசிக்கத்த விஷயமாக இருந்த உத்தி, இன்று க்ளிஷே ஆகிவிட்டது. இது தான் திரைக்கதை ஆசிரியனுக்கு இருக்கும் பெரும் சவால். முதல்முறை ஒரு திரைக்கதையை எழுதிவிட்டு, அதில் எத்தனை காட்சிகள் க்ளிஷேயாக இருக்கின்றன என்று எண்ணிப்பார்த்தால், உங்கள் ‘ரைட்டர் ஈகோ’ டமார் ஆகிவிடும்.
இதை எப்படித் தவிர்ப்பது? க்ளிஷேயான கதையை எளிதில் கண்டுகொண்டு ஆரம்பத்திலேயெ தவிர்த்துவிடலாம். ’ஒரு ஊர்ல ஒரு நாட்டாமை’ என்று மனதில் முதல்வரி ஓடும்போதே, நிறுத்திவிடலாம். அடுத்து திரைக்கதையை, அதாவது சீன்களை எழுதும்போதே பிரச்சினை வரும்.

சீன் என்பதில் இரண்டு விஷயங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. (இது நல்ல பதிவு என்பதால், நல்ல அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளவும்!). முதலாவது கேரக்டர்கள், இரண்டாவது இடம்/சூழ்நிலை. ஒரு சீனை யோசிக்கும்போது, முதலில் நமக்குத் தோன்றுவது க்ளிஷேயாக இருக்கவே வாய்ப்பு அதிகம். அதை அப்படியே எழுதிக்கொள்ளுங்கள்.

கேரக்டர்: பின்னர் அந்த சீனில் உள்ள வரும் கேரக்டர்களில் ஒன்று அல்லது எல்லாமே வழக்கமானதாக இல்லாமல் வித்தியாசமான கேரக்டராக மாற்றி எழுதுங்கள். மனிதன் படத்தில் ஜெயிலில் இருந்து ஒருவர் வெளியே வருவார். ஷூவில் ஆரம்பித்து கேமிரா மேலே உயரும். (தியேட்டரில் ஆரவாரம்!). பார்த்தால், செந்தில் அங்கே நின்றுகொண்டிருப்பார். ஹீரோவை எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காமெடி அங்கே கிடைக்கும். ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகிறார் ஹீரோ எனும் சீன், க்ளிஷே இல்லாமல் புதியதாக ஆகியிருக்கும்.

இந்த இடத்தில் ஒரு ஆங்கிலப்படக் காட்சி ஞாபகம் வருகிறது. The Big Sleep எனும் படம். ஹீரோ ஒரு ரொமாண்டிக்கான டிடெக்டிவ். ஒரு காட்சியில் வில்லனை டாக்ஸியில் பின் தொடர்வார். அது வழக்கமான சீன் தான். ஆனால் அந்த டாக்ஸி டிரைவர் ஒரு பெண்ணாக அமைத்திருப்பார்கள். இறங்கும்போது அவர் தன் விசிட்டிங் கார்டை ஹீரோவிடம் தருவார். வசனங்கள் ஏறக்குறைய இப்படி இருக்கும்:

பெண்: ஃபியூச்சர்ல தேவைப்பட்டா கூப்பிடு
ஹீரோ: (குறும்புடன்) நைட்லயா? பகல்லயா?
பெண்: (நக்கலாக) நைட்டே கூப்பிடு. ஏன்னா பகல்ல நான் டாக்ஸி ஓட்டணும்.

ஒரு வழக்கமான ஃபாலோ பண்ணும் சீனுக்கு இடையே ஒரு நிமிட ரிலாக்ஸ். இது தான் க்ளிஷேயை புதிய கேரக்டர்கள் மூலம் மாற்றும் தந்திரம்.

சூழ்நிலை: இன்னொரு வழி என்னவென்றால், சம்பவம் நடக்கும் இடத்தையோ சூழலையோ வித்தியாசமானதாக ஆக்குவது. ஒரு அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுக்கும் இடம், அரசு அலுவலகமாகவே இருக்கும். அல்லது அந்த அலுவலகத்தின் அருகேயுள்ள கடையாக இருக்கும். ஆனால் சிவாஜி படத்தில் ஒரு ஹைடெக் பாரில் வைத்து எம்.எஸ்.பாஸ்கரிடம் சூப்பர் ஸ்டாரும் விவேக்கும் பேசுவதாக காட்சியை அமைத்திருப்பார்கள். புதுவிதமான காட்சியைப் பார்க்கிறோம் எனும் எண்ணத்தை அது கொடுக்கும்.

இந்த மாதிரி வித்தியாசப்படுத்துவதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தனுஷ் நடித்து ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படத்தில் பாரில் கல்யாணம் செய்வதாக ஒரு காட்சி வரும். அது மிகவும் புதுமையான சிந்தனை என்று நினைத்து, அந்தக் காட்சியை அமைத்திருப்பார்கள். ஆனால் படத்தின் கதை என்ன?
காதலித்துக் கல்யாணம் செய்கிறார்கள் ஹீரோ-ஹீரோயின், ஹீரோவுக்கு வரும் மனநோயால், அவன் தற்கொலை செய்துகொண்டு சாகிறான். நன்றாக வாழ வேண்டிய ஒரு இளம் ஜோடிகளின் வாழ்க்கை, விதிவசத்தால் இப்படி துயரமாக முடிகிறது.

இந்தக் கதையின் நோக்கம், பார்வையாளர் மனதில் அந்த இழப்பையும் அது தரும் துக்கத்தையும் பதிய வைப்பது தான். ஹீரோயின் உணர்வதை, படம் பார்ப்போரும் உணர்வதில் தான், படத்தின் வெற்றி இருக்கிறது. நம் சமூகம் ஒரு செண்டிமெண்ட் சமூகம். 0.001% இணைய போராளிகளைத் தவிர்த்து, தாலிக்கு மதிப்பளிக்கும் மனிதர்களால் நிறைந்த செண்டிமெட் சமூகம் நம்முடையது. பாரில் கல்யாணம் செய்துவிட்டு தாலியறுத்தாள் என்பது எந்த தாக்கத்தையும் பார்ப்பவருக்கு ஏற்படுத்தாது. ’பாரில் கல்யாணம் செய்தால், விளங்குமா?’ எனும் கோபமே, படத்தை பார்வையாளர்களிடம் இருந்து அந்நியப்படுத்தியது.

எனவே க்ளிஷேவைத் தவிர்த்து வித்தியாசப்படுத்துகிறேன் பேர்வழி என்று நமக்கு நாமே ஆப்பு வைத்துக்கொள்ளக்கூடாது. இந்த தொடரின் முதல் கட்டுரையில் தீம் பற்றிச் சொன்னது தான் இதற்கும் பொருந்தும். நாம் வைக்கும் காட்சிகள், வசனங்கள் எதுவும், படம் சொல்ல வருவதை சிதைத்துவிடக் கூடாது.

எனவே வெவ்வேறு கேரக்டர்களையும் வெவ்வேறு சூழலையும் மாற்றி எழுதிப் பார்த்து, க்ளிஷேவைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இது போன்ற சிக்கல்களால் தான் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிப்பதை விடவும் கஷ்டம், சீன் பிடிப்பது என்று புலம்புகிறார்கள்!


(தொடரும்)

German Expressionism - ம் ஹிட்ச்காக்கும்

$
0
0
ழைய படங்களைப் பார்க்கும்போதெல்லாம் பேசியே கொல்றாங்களே என்று நமக்குத் தோன்றும். அப்போது நடந்துவந்த நாடகங்களை அப்படியே கேமிராவில் பதிவு செய்து, சினிமா என்று ஏமாற்றி ரிலீஸ் செய்திருக்கிறார்கள் என்று கோபமும் சிலருக்கு வருவதைக் காண்கிறோம். இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவே நடந்துவந்த விஷயம் தான். 

பேசும்படம் வந்தவுடன், நாடக சினிமாக்களே அதிகம் உருவாக்கப்பட்டன. வசனங்கள் மூலம் கதை சொல்வதே, அப்போதைய படைப்பாளிகளுக்குத் தெரிந்த எளிய வழி. இதைத் தான் ஹிட்ச்காக் ‘மௌனப்படக் காலத்தில் காட்சிகளின் வழியே கதை சொல்லும் கட்டாயம் இருந்தது. பேசும் சினிமா வந்து, சினிமாவைக் கெடுத்துவிட்டது.’ என்று சொன்னார்.
அந்த நாள் படத்தில் சிவாஜி
மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழ்வதில்லை. சினிமாவும் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது, மாறிக்கொண்டே இருக்கிறது. ஹிட்ச்காக் போன்ற ‘உண்மையான’ படைப்பாளிகள் (Authors) , சினிமாக் கலையை வளர்த்தெடுத்தார்கள். அவ்வப்போது தோன்றிய கலை இயக்கங்கள், அவர்களுக்கு உதவின. அவற்றில் ஒன்று, German Expressionism. 

1905ஆம் ஆண்டு, ஓவியங்களில் பெரும் மாற்றத்தை நிழத்தியது German Expressionism. ’இருப்பதை அப்படியே வரைய வேண்டிய அவசியம் இல்லை. ஓவியம் சொல்ல விரும்பும் விஷயங்களை கலர் மூலமும் வித்தியாசமான வரையும் முறை மூலமும் (மாடர்ன் ஆர்ட் போன்று) சொல்ல வேண்டும்’ எனும் கருத்து ஜெர்மனியில் அப்போது உருவானது. பார்வையாளர்களின் உணர்ச்சிகளுடன், கலர், லைட்டிங், செட்டிங்/சூழ்நிலை மூலம் உரையாடுவதே இதன் அடிப்படை நோக்கம்.

The Bodygaurd(1924) படத்தில் ஆர்ட் டைரக்டராக பணிபுரிய ஜெர்மன் சென்ற ஹிட்ச்காக், German Expressionism-ஆல் ஈர்க்கப்பட்டார். வசனங்கள் மூலம் நாடகம் போன்று படம் எடுப்பதை வெறுத்த அவருக்கு, ஆர்ட்-ஒளிப்பதிவு-எடிட்டிங் மூலம் கதை சொல்ல German Expressionism உதவும் என்பது அங்கே புரிந்தது. அதையே Truffaut-க்கு 1967-ல் கொடுத்த பேட்டியில் இப்படிச் சொன்னார் :

I don’t care about the subject matter; I don’t care about the acting; but I do care about the pieces of film and the photography and the soundtrack and all of the technical ingredients that made the audience scream. I feel it’s tremendously satisfying for us to be able to use the cinematic art to achieve something of a mass emotion.
The Bodygaurd..ஹிட்ச்காக் போட்ட செட்.
முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியடைந்த பின்னர், மக்கள் வாழ்க்கையின் மீதே நம்பிக்கை இழந்திருந்தார்கள். பெரும் மனக்கொந்தளிப்பான சூழ்நிலையே நிலவியது. அப்போது தான் ’கேரக்டர்களின் எண்ண ஓட்டத்தை வசனங்களின் மூலம் அல்லாமல் German Expressionism மூலம் சொல்லும் உத்தியை படைப்பாளிகள் கையில் எடுத்தார்கள். 1920ஆம் ஆண்டு Robert Wiene எனும் ஜெர்மானிய இயக்குநரின் இயக்கத்தில் வெளியான The Cabinet of Dr. Caligari எனும் மௌனப்படம், சினிமா கதை சொல்லும் உத்தியை புரட்டிப்போட்டது. செட்டிங், லைட்டிங் மூலம் வித்தியாசமான சூழலையும் நிழல் உருவங்களையும் உருவாக்குவதன் மூலம், ஒரு கேரக்டரின் எண்ண ஓட்டத்தை பார்வையாளனுக்கு புரிய வைக்க முடியும் என்று நிரூபித்தது அந்தப் படம்.

அது கருப்பு வெள்ளைக் காலம் என்பதால், நிழல்களுக்கும் வெளிச்சத்துக்குமான் முரண்பாட்டைப் பயன்படுத்தியே விஷுவலாக கதை சொல்லவேண்டியிருந்தது. அதில் Murnau  இயக்கிய Nosferatu (1922 ) படம், உச்சத்தைத் தொட்டது. தொடர்ந்து வந்த இரண்டாம் உலகப்போர், இந்த இயக்கத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தாலும், விஷுவலாக கதை சொல்ல விரும்புவோருக்கான இலக்கணமாக German Expressionism நிலைத்தது. 
Nosferatu
German Expressionism-ன் கூறுகளாக இவற்றைச் சொல்லலாம்:
  • படத்தின் தீம் ஆனது சைக்காலஜி, ஹாரர், கொலை, செக்ஸ் போன்ற டார்க் சப்ஜெக்ட்டாக இருக்க வேண்டும். 
  • முக்கிய கேரக்டர்களின் மனக்கொந்தளிப்பையும் உள்மனவோட்டத்தையும் காட்சியமைப்பின் மூலம் சொல்வதே முக்கியக் குறிக்கோள்.
  • ஹீரோ சைக்கோவாக, ஆண்டி-ஹீரோவாக, விரக்திக்கு ஆளாகும் நபராக இருப்பது நலம்!
  • ரியாலிட்டியில் இருந்து முடிந்தவரை விலகியதாக சூழலும் காட்சிகளும் இருக்க வேண்டும். எனவே பெரும்பாலும் கிராமங்களைத் தவிர்க்க வேண்டும். சிட்டியிலேயே கதை நடக்கும்.
  • நடிகர்களின் மேக்கப், உடை, நடக்கும்விதம், நடிக்கும் விதம் எல்லாமே ரியாலிட்டியில் இருந்து விலகி இருக்க வேண்டும். எனவே ஓவர் ஆக்ட்டிங் இதில் சகஜம்.
  • நடிகர்களின் நடிப்பை நம்பாமல், காட்சியமைப்புகள் (Composition - mise-en-scene) மூலமே கதை சொல்ல வேண்டும்.
  • லைட்டிங்கில் விளையாட, பெரும்பாலும் இருட்டில் நகரும் காட்சிகள்
  • பொதுவாக நடிகர்களை 1/3 விதியின் கீழ், ஸ்க்ரீனில் வலதுபுறமோ இடதுபுறமோ வரும்படி தான் காட்சிகளை அமைப்பார்கள். ஸ்க்ரீனின் செண்டரில் கேரக்டரை வைத்து, செட்டிங்கை Symmetric ஆக அமைத்தால், ஆடியன்ஸை அது உளவியல்ரீதியில் தொந்தரவு செய்யும். எனவே அதை இங்கே கட்டாயம் கடைப்பிடிப்பார்கள். (பின்னாளில் Stanely Kupric இதை அதிகம் உபயோகித்தார்.)
  • படத்தின் முடிவு, சந்தோசமானதாக இருக்கக்கூடாது. ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தருவதாக இருக்க வேண்டும்.
  • ஒட்டுமொத்த படத்தின் நகர்வும்(திரைக்கதை), ஆடியன்ஸை தொந்தரவு செய்வதாகவே இருக்க வேண்டும். மறந்தும் குஷிப்படுத்திவிடக்கூடாது.
  • ஒரு காட்சியை நிறுத்திவிட்டுப் பார்த்தால், ஒரு ஓவியத்தைப் பார்ப்பது போன்ற லுக் இருக்க வேண்டும்.
  • ஒரு மாய உலகில் மாய மனிதர்களுக்கு நடக்கும் மாயமான நிகழ்வுகள் எனும் தோற்றத்தைப் படம் தர வேண்டும்
தமிழில் German Expressionism கூறுகளைக் கொண்ட படங்களாக சட்டென்று நினைவுக்கு வருவது நடிகர் திலகம் நடிப்பில் உருவான அந்த நாள்(1954) படமும், புதிய பறவை(1964)யும். குறிப்பாக, புதியபறவையில் வரும் ‘எங்கே நிம்மதி’ பாடலில் German Expressionism-ன் தாக்கம் அதிகம். சரோஜாதேவிக்கும் சௌகார்ஜானகிக்கும் கொடுத்திருக்கும் வெவ்வேறு வகையான லைட்டிங், அது கொடுக்கும் மூட் மற்றும் நிழல் உருவங்கள், சிவாஜியின் நகங்கள் தரும் எஃபக்ட் என அசத்தியிருப்பார்கள் அந்தப் பாடலில். அந்த வீடியோ இங்கே: 


(சிவாஜியைப் பற்றியும் அவர் படங்கள் பற்றியும் எவ்வித அடிப்படை அறிவும் இல்லாமல் ’Torrent சவலைப் பிள்ளைகள்’ விமர்சிக்கும்போது, சினிமா தெரிந்தவர்கள் ஏன் கடுப்பாகிறார்கள் என்று இப்போது உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன்!!!)

பின்னாளில் உருவான Film Noir ஜெனருக்கு அடிப்படை, German Expressionism தான். ஓவர் ஆக்டிங், Symmetric shots போன்ற சில விஷயங்களைத் தவிர்த்துவிட்டு, ஆடியன்ஸை உளவியல்ரீதியில் தொந்தரவு செய்யாத, ஆனால் வாழ்வின் அபத்தத்தையும் இருண்ட பக்கங்களையும் பேசும் ஜெனராக Film Noir உருவானது. 1930களில் ஹாலிவுட்டுக்கு பெருமளவிலான ஐரோப்பிய சினிமா மேதைகள் முடிபெயர்ந்தார்கள். Film Noir-ஐ ஹாலிவுட்டில் அவர்களே வடிவமைத்தார்கள். அதில் ஒருவர், நம் ஹிட்ச்காக். 

ஹிட்ச்காக் அதை தனது முதல் ஹிட்ச்காக் ஸ்டைல் படமான The Lodger(1927)லேயே உபயோகிக்க ஆரம்பித்தார். படத்தின் முதல் காட்சியே, குளோசப்பில் ஒரு ப்ளாண்ட் பெண் அலறுவதாக எடுத்தார். ஒரு கண்ணாடி மேல் அந்தப் பெண்ணை குப்புறப்படுக்க வைத்து, கீழே இருந்து லைட்டிங்கை அவர் முகத்தில் அடித்து, முடியை ஸ்க்ரீன் முழுக்க பரவும்படி பரப்பி வைத்து, ஒரு ஷாட்டுக்கு ஹிட்ச்காக் செய்த அக்கப்போரைப் பார்த்து, அப்போதே எல்லாரும் மிரண்டார்கள். அந்த பெண்ணை நிற்க வைத்து, வீல் என்று அலற விட்டால் போதாதா என்று புலம்பினார்கள்.
இது என்ன வகையான உணர்ச்சியை எழுப்பும் எனும் தெளிவு ஹிட்ச்காக்கிற்கு இருந்தது. திரைக்கதையில் ‘ஒரு பெண் அலறுகிறாள்’ என்று மட்டுமே இருக்கும். அதை எப்படி காட்சிப்படுத்துவது என்பதில் தான், இயக்குநரின் தனித்தன்மை இருக்கிறது. ஹிட்ச்காக் German Expressionism உதவியுடன், தனக்கென தனி ஸ்டைலை அப்போதே (1920களில்) உருவாக்கினார். தொடர்ந்து, தன் இறுதிப்படம்வரை அதை மெருகேற்றிக்கொண்டே வந்தார்.

ஹிட்ச்காக் இயக்குநர் ஆகும்முன் The Bodygaurd(1924) படத்தில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றியபோது, அவர் உருவாக்கிய படிக்கட்டு செட் பிரபலமானது. German Expressionism-ன் படியே அமைத்தார். அவரது கடைசிப்படமான The Family Plot(1976) படத்தின் கடைசிக்காட்சியும் அதே போன்று படிக்கட்டிலேயே முடிந்தது ஒரு தற்செயலான ஆச்சரியம் தான்!

சைக்காலஜி படமானாலும், ஹாரர் படமானாலும், சீரியல் கில்லர் படமானாலும் ஹிட்ச்காக்கை ரெஃபர் செய்யாமல், ஹிட்ச்காக் பாதிப்பு இல்லாமல் யாரும் படமெடுத்துவிட முடியாது. இதற்கு அர்த்தம், German Expressionism பாதிப்பு இல்லாமல் டார்க் சப்ஜெக்ட்களை படமாக எடுக்க முடியாது. 

நாயகன் - தமிழில் ஒரு உலக சினிமா

$
0
0
தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய படம் நாயகன். ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படம் என்றால் அது நாடகத்தனமாகவும் தொடர்ச்சியின்றி ஜம்ப் ஆவதாகவுமே இருக்கும் எனும் நம்பிக்கையை உடைத்து நொறுக்கிய படம் நாயகன். மணிரத்னம், கமலஹாசன், ஸ்ரீராம், இளையராஜா, தோட்டாதரணி, பி.லெனின் - வி.டி.விஜயன் என தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கிய இந்த காவியம், டெக்னிகலாக தமிழ் சினிமா பலநூறு அடிகள் பாய உதவியது.
மும்பையில் வாழ்ந்த வரதராஜ முதலியார் எனும் தமிழ் தாதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, மணிரத்தினம் எழுதிய கதையே நாயகன் திரைப்படம். வரதராஜ முதலியார் படத்தில் வேலு நாயக்கராக வந்தார். தூத்துக்குடியில் ஒரு கொலை செய்துவிட்டு மும்பை ஓடிவரும் சிறுவன் வேலு, மும்பை தாராவியில் வாழும் மக்கள் மதிக்கும் ஒரு தலைவனாக எப்படி ஆனான் என்று பேசுகிறது படம்.

திரைத்துறை மாணவர்கள் ஒரு பாடமாகக் கற்கவேண்டிய பொக்கிஷம், இந்த படத்தின் திரைக்கதை. ஐந்து பகுதிகளாக வேலு நாயக்கரின் வாழ்க்கை, இந்த திரைக்கதையில் பிரிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் கொலை செய்துவிட்டு ஓடிவருவது முதல் பகுதி, மும்பையில் பாய் ஆதரவில் வளர்ந்து பாய் இறந்தவுடன் போலீஸ்காரனைக் கொல்லும் தைரியம் மிகுந்த இளைஞனின் வாழ்க்கை இரண்டாம் பகுதி, மனைவியுடன் சந்தோசமாக வாழ்ந்தபடியே தாராவியில் முக்கியமான ஆளாக உருவெடுப்பதும் மனைவியை இழப்பதும் மூன்றாம் பகுதி, மகன் தலையெடுப்பதும் இறப்பதும் அதனால் மகள் விலகிச் செல்வதும் நான்காம் பகுதி, இறுதிப்பகுதியில் திரும்பி வரும் மகளின் கணவனால் வேலு நாயக்கரின் ஆட்சி முடிவுக்கு வருவதும், நாயக்கர் கொல்லப்படுவதும்.  ‘பத்து வருடங்களுக்குப் பிறகு’ எனும் டைட்டில் போடும் வேலையெல்லாம் படத்தில் இல்லை. பெரும்பாலும் ஒரு காலகட்டத்தில் இருந்து இன்னொரு காலகட்டத்திற்கு, பாடல்காட்சியிலேயே ஸ்மூத்தாக நகர்ந்திருப்பார்கள்.

தலைவன் என்று யாரும் தனியே பிறப்பதில்லை. இந்த சமூகம், ஒரு தைரியமான மனசாட்சியுடன் உரசும்போது தீப்பொறியாக தலைமைப்பண்பு உருவாகி விடுகிறது. ஒரு யூனியன் லீடரின் மகன் தான் வேலு நாயக்கர். நியாயமான கூலி கேட்டுப் போராடியதற்காக தீவிரவாதி என்று பெயர்சூட்டி, சுட்டுக்கொல்கிறது போலீஸ். பத்து வயதுச் சிறுவனான வேலு அந்த தந்தையிடம் ஒரு கேள்வி கேட்கிறான் ‘யூனியன் லீடராய் இருப்பது தப்பா அப்பா?’. அதற்கான பதிலை மும்பைக்கு வந்தபின் பாய் சொல்கிறார் ‘நாலு பேருக்கு உதவும்ன்னா, எதுவும் தப்பில்லை’. அந்த பதில் தான் வேலு நாயக்கர் பின்னால் மக்களுக்கு நல்லது செய்யும் தாதாவாக உருவெடுப்பதற்கு அடிநாதம். அது தான் வேலு நாயக்கரின் வேதம். அதன்பின் வேலு நாயக்கர் ஒரு தாதாவாக உருவெடுப்பதை எதுவும் தடுப்பதில்லை.
கமலஹாசன் எனும் அற்புதமான நடிகரின் படங்களில் முக்கியமானது நாயகன். இயல்பான நடிப்பில் வேலு நாயக்கரை கண் முன்னே கொண்டுவந்திருப்பார். இளைஞனாக இருப்பதில் ஆரம்பித்து, பொறுப்பான குடும்பத்தலைவனாக ஆகும்போது முகத்தில் அவர் காட்டும் முதிர்ச்சி, வயதானதும் காலை அகட்டி நடக்கும் ஸ்டைல், பேச்சு தடுமாறுவது, இறந்த மகன் உடலைப் பார்த்து கதறுவது, மகளுடன் விவாதித்து தோற்பது என பல காட்சிகளில் நடிப்பின் உச்சத்தை தொட்டிருப்பார். கமலஹாசன் போன்ற நடிகர் இல்லையென்றால், இந்தப் படத்தையே எடுத்திருக்க முடியாது.

இசைஞானி இளையரஜாவின் 400வது படம் இது. ‘தென்பாண்டிச் சீமையிலே’ என்று ஆரம்பிக்கும் அவரது இசைத்தாலாட்டு, படம் முழுக்க நம்மைக் கிறங்க வைக்கிறது. படத்தில் அந்தப் பாட்டு வரும்போதெல்லாம் நமக்கு கண்கலங்கி விடுகிறது. இந்தப் படத்தின் இசை ஆல்பம் மிகவும் விஷேசமானது. தமிழ்மண் மணத்துடன் தென்பாண்டிச் சீமையிலே பாடல், மும்பை சாயலில் ‘நான் சிரித்தால்’ & ‘அந்திமழை வானம்’ ஆகிய பாடல்கள், ஆட்டம் போட வைக்கும் துள்ளிசைப்பாடலாக ‘நிலா அது வானத்து மேல’, மனதை மயக்கும் மெலொடியாக ‘நீ ஒரு காதல் சங்கீதம்’ என ஒவ்வொரு பாடலுமே நம் மனதைக் கொள்ளை கொள்பவை. பொதுவாக இளையராஜாவின் அற்புதமான பாடல்கள், நம் படைப்பாளிகளால் விஷுவலாக கற்பழிக்கப்படும். ஆனால் இதில் அவற்றை சிறப்பான முறையில் படம்பிடித்து, உரிய மரியாதை செலுத்தியிருப்பார்கள்.

இந்தப் படத்தில் வந்த பெரும்பாலான வசனங்கள் மறக்க முடியாதவை. எழுத்தாளர் பாலகுமாரன் ஒவ்வொரு சீனுக்குமே சுருக்கமாக, மனதில் தைக்கும் வசனமாக எழுதியிருப்பார். ‘நாலு பேருக்கு உதவும்ன்னா, எதுவும் தப்பில்லை, இனிமே அப்படித்தான், நான் அடிச்சா செத்திடுவே, அவங்களை நிறுத்தச் சொல், நீங்க நல்லவரா கெட்டவரா’ என எல்லாமே அசத்தலான வசனங்கள். பாலகுமாரன் கருத்துச் செறிவுடன் விலாவரியாக எழுதுவதில் வல்லவர். மணிரத்தினமோ அதிகம் தன் கதாபாத்திரங்களைப் பேச விடாதவர். இரண்டும் இணைந்தபோது, ஒரு புதுவகையான அனுபவம் நமக்குக் கிடைத்தது.

இந்தப் படத்தில் கமலின் நண்பராக வந்த ஜனகராஜின் நடிப்பு மிகவும் யதார்த்தமாகவும் அதே நேரத்தில் படத்தின் இறுக்கத்தைப் போக்கும்வகையில் ஜாலியானதாகவும் இருக்கும். இன்று குணச்சித்திர நடிப்பில் புகழ்பெற்று விளங்கும் நடிகை சரண்யா நாயகியாக அறிமுகமான படம் இது. கொஞ்ச நேரமே வந்தாலும் நிறைவான நடிப்புடன் விடைபெறுகிறார். கமலின் மகளாக வருபவர், மலையாள நடிகை கார்த்திகா. திரைத்துறையில் மொத்தமே நான்கு வருடங்கள் இருந்த, இருபது படங்களில் மட்டுமே நடித்த நடிகை. தமிழில் இரண்டு படங்கள், நாயகன் தவிர்த்து பூவிழி வாசலிலே படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனாலும் காலமெல்லாம் அவர் பெயர் சொல்லும்படி நாயகனில் நடித்துவிட்டார். படத்தின் உண்மையான நாயகி, கார்த்திகா தான்.

எதுவும் தப்பில்லை எனும் கொள்கைப்படி வாழ்க்கையில் முன்னேறும் வேலுநாயக்கரிடம், அவரது மனசாட்சியாக நின்று கேள்வி கேட்பது அவர் மகள் தான். சரண்யா இறக்கவுமே ‘அம்மா சாக நீங்க தான் காரணம்ன்னு சொல்றாங்களே, உண்மையா?’ எனும் கேள்வியை சிறுகுழந்தையாக கேட்கிறாள். பதில் கிடைக்காமலே சென்னை செல்லும் அவள் வளர்ந்து பெரியவளாக ஆனபின், மீண்டும் வேலுநாயக்கரை கேள்வி கேட்பவளாக திரும்பி வருகிறாள். ‘ தட்டிக்கேட்க நீங்க யார்? உங்களுக்கு சரின்னு படறது ஊருக்கு தப்பாகத் தெரியும்’ என்று சொல்கிறாள். எல்லா விஷயத்திலும் ஒரு மறுபக்க நியாயம் இருக்கும் என்று நம்புகிறாள். அவளது கேள்விகள், இங்கே எது சரி? எது தவறு எனும் வாழ்க்கையின் பொருள் தேடும் கேள்வியாக நம் முன் எழுந்து நிற்கிறது.

கருப்பு-வெள்ளை என வாழ்க்கையில் எல்லாவற்றையும் நல்லது-கெட்டது, சரி-தவறு என்று தீர்மானித்துவிட முடிவதில்லை. வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயலும் எல்லாருக்குமே, பெரும் சிக்கலாக இந்த சரி-தவறு எனும் தரம்பிரித்தல் இருக்கிறது. அநியாயமாகக் கொள்ளை அடிப்பவன் நலமாக வாழ்வதும், நல்லவன் பசியால் சாவதையும் நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். வேலு நாயக்கரும் சிறுவனாக அப்படி ஒரு உலகைப் பார்க்கிறார். நியாயம் கேட்டுப் போராடும் தந்தையை, சட்டம் குற்றவாளி என்று வன்முறையை ஏவுகிறது.

ஒரு துடிப்பான இளைஞனாக வேலுநாயக்கர் பதிலுக்கு அதே வன்முறையை கையில் எடுக்கிறார். மும்பை வந்தபின்னும், வன்முறை தான் அதிகார வர்க்கத்திடம் இருந்து மக்களைக் காக்க உதவுகிறது. வன்முறை தவறு என்று பல சித்தாந்தங்கள் சொன்னாலும், வாழ்க்கை சொல்லும் பாடம் வேறாக இருக்கிறது. படிக்காத பாமரனான வேலு நாயக்கருக்கு, வன்முறை மூலம் எதிராளிகளின் வன்முறையை எதிர்கொள்வது எளிதாக இருக்கிறது. அந்த வன்முறை மூலம் புற வாழ்க்கையில் வெற்றிகளை அடைந்துகொண்டே போகிறான். ஆனால் ஒவ்வொரு வெற்றிக்கும் சொந்த வாழ்வில் அவன் ஒரு பலி கொடுக்க வேண்டியிருக்கிறது.

தூத்துக்குடியில் இருந்து தப்பி மும்பை வந்தாலும், போலீஸின் சூழ்ச்சி வலையில் சிக்கி தந்தையை இழக்க தானும் காரணம் ஆகின்றான். தாராவியில் ஒரு தாதாவாக உருவெடுக்க, ஆரம்பத்தில் பெரியவர் பாயை பலி கொடுக்கிறான். ஹார்பரை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த வெற்றிக்காக மனைவியை பலி கொடுக்கிறான். வயதான பின்னும் தன் சாம்ராஜ்யத்தை தொடர்ந்து நடத்த முயல்கையில், மகனைப் பலி கொடுக்கிறான். எல்லா வெற்றிகளுக்குப் பின்னும் ஒரு சொந்த இழப்பு நிற்கிறது. அதற்கு தன் தவிர்க்க இயலாத வன்முறைப்பாதையும் ஒரு காரணம் என்பதை அவன் மனசாட்சி அறியும். அந்த மனசாட்சியின் குரலில் மகள் பேசும்போது, அவள் முன் மண்டியிடுவதைத் தவிர வேறு வழியில்லை அவனுக்கு!
படத்தின் முதல் பகுதியிலேயே ‘நீங்க நல்லவரா’ எனும் பொருள்படும் கேள்வியையே வேலு தன் அப்பாவிடம் கேட்கிறான். அவர் பதில் சொல்வதில்லை. ஒரு தலைமுறை தாண்டியபின் அதே கேள்வி, வேலு நாயக்கரிடமே வந்து நிற்கிறது. இந்த சமூக மக்களின் பார்வையில் ஒரு தலைவனாக அவன் செய்தது எல்லாம் சரியே. ஆனால் அவனது மகளின் பார்வையில் எல்லாமே தவறாகிவிடுகிறது. இங்கே யாருடைய தரப்பின் பக்கம் நியாயம் இருக்கிறது எனும் கேள்வியை படம் பூதாகரமாய் எழுப்பி நிற்கிறது. வேலு நாயக்கருக்கும் அதே குழப்பம் வருகின்றது. படம் எழுப்பும் கேள்வியையே வேலு நாயக்கரின் பேரனும் கேட்கிறான், ’நீங்க நல்லவரா? கெட்டவரா?’ என்று. படத்தின் மையக்கருவே அந்தக் கேள்வி தான். வேலு நாயக்கருக்கு பதில் தெரிவதில்லை. ஆனால் படத்தின் இயக்குநர் பதில் சொல்ல வேண்டும் அல்லவா? 

வேலு நாயக்கர் ஒரு நல்லவனால் கொல்லப்பட்டால், அவர் கெட்டவர் எனும் முடிவுக்கு வந்துவிடலாம். ஒரு கெட்டவனால் கொல்லப்பட்டால், நல்லவன் எனும் முடிவுக்கு வந்துவிடலாம். ஆனால் இங்கே வேலு நாயக்கர் கொல்லப்படுவது, மனவளர்ச்சியற்ற ஒருவனால்! சரி-தவறு என்று தர்க்கரீதியாக பிரித்தறியத் தெரியாத, குழந்தையைப் போன்ற ஒருவனால் வேலு நாயக்கர் கொல்லப்படுகிறார். இயக்குநர் மணிரத்தினம் சாமர்த்தியமாக படம் பார்க்கும் பார்வையாளனிடமே அந்தக் கேள்வியைத் தள்ளிவிடுகிறார். ஏனென்றால், அந்த கேள்விக்குப் பதில் இல்லை.
’வேலு என்று ஒருவன் இருந்தான். பெரிய தாதாவாக வந்தான்’ என்று சாதாரணமாகச் சொல்லி இருக்க வேண்டிய கதை. வேலு நாயக்கரின் புறவுலக வெற்றிக்கும் சொந்த வாழ்க்கையின் தோல்விக்குமான உணர்ச்சிப் போராட்டமாக படத்தை வடிவமைத்தால்தான், இந்தப் படம் உலக சினிமா ஆகியது.  கேங்ஸ்டர் படங்களில் மாஸ்டர்பீஸாக இன்னும் இந்தப் படம் நிலைத்து நிற்பதற்குக் காரணம், அது தான். Time Magazine தன்னுடைய "All-Time 100 Best Films" லிஸ்ட்டில் நாயகனையும் வரிசைப்படுத்தியது, இந்த படத்திற்குக் கிடைத்த கிடைத்த மற்றொரு கௌரவம்!


தொட்டால் தொடரும்..பாஸு பாஸு..ஒரு ரவுசுப் பாடல்

$
0
0
சுயமுன்னேற்ற நூல்களைப் படித்தால் ஜிவ்வென்று இருக்கும். உலகை வென்று சாதனையாளர் ஆகும் சூத்திரம் கிடைத்துவிட்டதுபோல் ஒரு கிறுகிறுப்பு கிடைக்கும். இரண்டு நாட்களுக்கு மனது விரைப்பாகவே இருக்கும். எல்லாம் இரண்டு நாட்களுக்குத் தான். பிறகு மனது சொய்ங்கென்று பழைய நிலைமைக்கே போய் விடும். ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு வித மனநிலையை நமக்கு உண்டாக்கக்கூடியவை. அந்தவகையில் எழுத்தாளர் சுஜாதாவின் புத்தகத்தைப் படிக்கும்போதெல்லாம் ஒரு கொண்டாட்ட மனநிலை வந்துவிடும். எதையும் கேஷுவலாக அணுகும் Tongue-in-cheek மனநிலை சுஜாதாவைப் படித்த சிலநாட்களுக்கு இருக்கும்.
இயக்குநர் கேபிள் சங்கரைப் பார்க்கும்போதெல்லாம் தினமும் இந்த மனிதர் காலையில் ஒரு சுஜாதா நாவலைப் படித்துவிட்டுத்தான் வெளியில் வருகிறாரோ என்று தோன்றுகிறது. எப்போதும் கலகலப்புடன், அடுத்தவருக்கும் தொற்றிக்கொள்ளும் உற்சாகத்துடன் வலம் வரும் மனிதர் அவர். நம்மை மாதிரி சொங்கிகளுக்கு அது பெரிய ஆச்சரியம் தான். அவரைப் பார்த்த இரண்டு முறையும் மனிதர் ஃபுல் எனர்ஜியுடன் இருந்தார். நண்பர்களைக் கேட்டால், ’அவர் எப்போதுமே அப்படித்தான்..இத்தனைக்கும் அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது’ என்று வியப்பைக் கூட்டுகிறார்கள்.

அவர் படம் எடுக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, நான் ஆசைப்பட்டது அந்த கொண்டாட்ட மனநிலையை படத்திலும் மனிதர் கொண்டுவர வேண்டுமே என்று தான். இப்போது தொட்டால் தொடரும் படத்தில் இடம்பெறும் ‘பாஸு..பாஸு’ பாடலைக் கேட்டபோது, என் ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. பாடல் இங்கே:



நாட்டு நடப்பையும் மனசாட்சியை ஆஃப் செய்துவிட்டு அலையும் பிஸி மனிதர்களான நம்மையும் திட்டுவது தான் பாடலின் கரு. அதை வேறு யாராவது செய்திருந்தால், இணையப் புரட்சியாளர்கள் பதிவைப் படித்த நிலைமைக்கு நம்மை ஆளாக்கியிருப்பார்கள். ஆனால் கேபிளார் இந்தப் பாடலை மெல்லிய நக்கலுடன் கொடுத்திருப்பதால், நான் மேலே சொன்ன கொண்டாட்ட மனநிலையே நமக்குக் கிடைக்கிறது. ஆண்டனி தாசனின் குரல், பாடலுக்கு ஒரு புது கலரைக் கொடுக்கிறது.

‘யாருக்கும் ஈவு இல்லை..இரக்கம் இல்லை பாஸு..பாஸு’ என்று ஆரம்பிக்கும் பாடல் மெல்லிய கிறக்கத்தைக் கொடுக்கிறது. ‘நியூசெல்லாம் ஸ்கேம் தானே..போச்சு நம்ம காசு, காசு’ என பாடல் முழுக்கவே சமூகக் கிண்டல் கொட்டிக்கிடக்கிறது. வழக்கமான இசையமைப்புப் பாணியைப் பின்பற்றாமல், ஜூஸ் ஸ்டைலில்..அது ஜூஸா, ஜாஸா..ம்ஹூம், இதற்கு மேல் நாம் இசை நுணுக்கத்தை ஆராய்ந்தால், பி.சி.சிவன் ஃபீல் பண்ணுவார். அது ஜூஸோ ஜாஸோ, நம்மை மாதிரி சாராசரி ஆட்களுக்கும் பிடிக்கும் வகையில் ’பாட்டு நல்லாயிருக்கு’ என்பது தான் இங்கே பாயிண்ட்!

நமது யூத் கேபிளாருடன் உண்மையான யூத்களான கார்க்கி பாவாவும் பி.சி.சிவனும் இணைந்து, ரகளையான பாடலைக் கொடுத்திருக்கிறார்கள். ’யானை வரும் பின்னே..மணியோசை வரும் முன்னே’ என்பதற்கிணங்க, படம் எப்படி இருக்கும் என்பதற்கு கட்டியம் கூறும் விதமாக இந்தப் பாடல் இருக்கிறது. இந்தப் பாடலில் தொனிக்கும் ‘கேபிளார் எனர்ஜி’ படத்திலும் இருந்தால், படம் சூப்பர் ஹிட் தான். வாழ்த்துகள்.

ஜிகர்தண்டா - ஒரு அலசல்

$
0
0
இணையத்தில் பெரும் பிரளயத்தையே உண்டுசெய்திருக்கும் படம், ஜிகர்தண்டா. நல்லாயிருக்கு..நல்லாயில்லை என பலவித அபிப்ராயங்கள் படம் பற்றி. ஆனாலும் இந்தப் படத்தை தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன், ஒரு வாரம் கழித்து இங்கே ரிலீஸ் ஆனதும் பார்த்தாகிவிட்டது. நெட்டில் தியேட்டர் ப்ரிண்ட் ரிலீஸ் ஆகியிருந்தாலும், தியேட்டர் ஹவுஸ்ஃபுல் என்பது பெரும் ஆச்சரியம் தான். 
படத்தைப் பார்த்ததுமே, ஏன் அடித்துக்கொள்கிறார்கள் என்று விளங்கிவிட்டது. இது இன்னவகைப் படம் என்று சொல்லிவிட முடியாத, நம்மை தலைசுற்ற வைக்கும் ஒரு படம், ஜிகர்தண்டா. ஒளிப்பதிவு, இசை, சிம்ஹாவின் நடிப்பு, ’தேவையற்ற’ நகைச்சுவை ஒரு லெவலிலும் மற்ற விஷயங்கள் இன்னொரு லெவலிலும் இருக்கின்றன. முந்தையதை வைத்துப் பார்த்தால், நல்ல படம் என்று தான் சொல்ல வேண்டும். பிந்தையதை வைத்துப் பார்த்தால், ப்ர்ர்.

பீட்சா என்ற தரமான படத்தைக் கொடுத்த இயக்குநரின் படம் வேறு. யாரோ குவாண்டின் டராண்டிவோவாம். அவர் படம் மாதிரி இருக்கிறது என்று ட்ரெய்லர் வரவுமே சொல்லிவிட்டார்கள். படமோ இன்னவகையென்று சொல்ல முடியாத அளவிற்கு இருக்கிறது. எனவே எதற்கு வம்பு என்று ஒரு குரூப், ‘ஆஹா..இதுவல்லவோ உலக சினிமா. ஆரண்ய காண்டம் எட்டு குட்டி போட்டது. இந்தப் படம் பதினாறு குட்டி போட்டுவிட்டது. இயக்குநர் கடுமையாக வேலை செய்திருக்கிறார்’ என்று கொளுத்திப் போட்டுவிட்டார்கள். 

அது தான் பிரச்சினைக்குக் காரணம். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு ஆவரேஜ் வணிகப் படம். டெக்னிகலாக படத்தை வித்தியாசமாகத் தர முயன்றிருக்கிறார்கள். மேலே சொன்ன சிம்ஹாவின் நடிப்பு போன்றவற்றிற்காக, இந்தப் படத்தை தாராளமாகப் பார்க்கலாம். பார்க்கக்கூடிய படம் தான். பீட்சா தந்த திருப்தியை இந்தப் படம் தரவில்லை என்பதைத் தாண்டி, ஒரு பொழுதுபோக்குப் படம் எனும் அளவில் ஒருமுறை பார்க்கலாம். இது ஒரு நல்ல முயற்சி; நல்ல படைப்பு வேறு, நல்ல முயற்சி வேறு!

வேலையில்லாப் பட்டதாரியே ஹிட் ஆகும்போது, இத்தகைய நல்ல முயற்சிகளும் கண்டிப்பாக ஹிட் ஆக வேண்டும். ஆகியிருக்கிறது. அதில் நமக்கும் சந்தோசமே. ‘ஒழக சின்மா’ குரூப் இத்துடன் கிளம்பிக்கொள்ளலாம்.

இந்தப் படத்தை தமிழ் சினிமாவைப் புரட்டிப்போடும் உலக சினிமா எனும் ரேஞ்சில் சிலர் பில்டப் செய்ததில் தான் நமக்கு வருத்தமேயொழிய, படத்தை பார்க்க முடியாத குப்பை என்று நான் நினைக்கவில்லை. இந்தப் படத்தைப் பற்றி ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் இருந்தேன். ஒரு நண்பர் ‘ஒரு இயக்குநரின் உழைப்பை ஒருவரியில் ஒதுக்கித்தள்ளுவது நியாயமா?’ என்று பொங்கியதால், படத்தில் என்னைத் தொந்தரவு செய்த விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன். 

இன்ஸ்பிரேசன்: 
இந்தப் படம் A Dirty Carnival என்ற கொரியப் படத்தின் காப்பி என்று செய்தி வெளியானபோது, அதிர்ச்சியாக இருந்தது. பீட்சா எனும் ஒரிஜினல் பெஸ்ட் ஸ்க்ரிப்ட் எழுதிய கார்த்திக் சுப்பராஜ் அப்படிச் செய்திருக்க மாட்டார் என்றே நம்பினேன். அவரும் ‘டாய்..ரெண்டாவது படத்துக்கே காப்பி அடிக்கிற அளவுக்கு நான் ஒன்னும் டொக் ஆகிடலைடா’ என்று சொன்னார். ஒரு நேர்மையான மனிதனால் தான் அப்படி துணுச்சலாகப் பதில் சொல்ல முடியும் என்று நம்பினேன். ஆனால் படம் பார்த்தபோது, என் நம்பிக்கை சுக்குநூறானது. 

A Dirty Carnival படத்தில் ஹீரோ ஒரு ரவுடி. இயக்குநர் ஆகும் ஆசையில் உள்ள அவனது நண்பன் ஒருவன், ரவுடிகளைப் பற்றி படம் எடுக்க நினைக்கிறான். எனவே ஹீரோ இருக்கும் இடத்திற்கே வந்து, ஹீரோவுடன் தங்கி ரவுடி வாழ்க்கையை ஸ்டடி செய்கிறான். ஹீரோ தான் செய்த ஒரு முக்கியமான கொலையை குடிபோதையில் விவரிக்க, அதை தன் படத்தில் அப்படியே காட்சியாக வைக்கிறான் நண்பன். படம் வெளியாகி ஹிட் ஆகிறது; கூடவே அந்த கொலைக் காட்சியும் ஹீரோ ரவுடியின் பாஸ்க்கு கடுப்பைக் கிளப்புகிறது. இறுதியில் தாதாவும் இயக்குநரும் கூட்டணி வைக்க, ரகசியத்தை உளறிய ஹீரோ கொல்லப்படுகிறான்.

ஒரு ரவுடியின் வாழ்க்கையை படமாக எடுக்க ஆசைப்பட்டு, ரவுடியுடன் பழகி படம் எடுக்கும் இயக்குநர் எனும் படத்தின் தீம் அப்படியே இங்கே எடுத்தாளப்பட்டிருக்கிறது. ‘ஆம்..A Dirty Carnival படத்தின் இன்ஸ்பிரேசன் தான் இந்தப் படம்’ என்று கார்த்திக் சொல்லியிருந்தால், அதை யாரும் பெரும் குற்றமாக நினைக்கப்போவதில்லை. டைட்டிலில் ஒரு நன்றி கார்டு போட்டால், போதும். (Rough Cut என்று இன்னொரு கொரியப்படம். சினிமாவில் நடிக்கும் ஆசையுள்ள ஒரு ரவுடிக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும்போது நடக்கும் சம்பவங்களை ஆக்சன் காட்சிகளாக விவரிக்கிறதாம். ஜிகர்தண்டாவின் இரண்டாம்பகுதி, ரவுடி நடிகன் ஆவதை காமெடியாக விவரிக்கிறது. Rough Cut படத்தின் சில காட்சிகள் காப்பி அடிக்கப்பட்டிருப்பதாக...மன்னிக்கவும்..எடுத்தாளப்பட்டிருப்பதாக, படம் பார்த்த கருந்தேள் எழுதியிருக்கிறார். நான் படம் பார்க்கவில்லை, ஆனால் அவரை நம்புகிறேன்.)

இரண்டு கொரியப் படங்களின் தீமை மிக்ஸ் செய்து, புதிய கதையையும் காட்சிகளையும் உருவாக்குவது தவறில்லை. ஒரிஜினலுக்கு கிரெடிட் கொடுப்பதை எது தடுக்கிறது என்று தெரியவில்லை. பேராண்மை, ஆடுகளம் போன்ற படங்களில் ‘இன்ஸ்பிரேசன்’ படங்களின் லிஸ்ட்டை டைட்டிலேயே போட்டார்களே? அந்த இயக்குநர்களை நாம் மரியாதையுடன் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுகிறோமே? அப்படி இருக்கும்போது, படம் வெளியாகும் முன்பே கொரியப் பட மேட்டர் லீக் ஆகிவிட்ட நிலையில், இன்ஸ்பிரேசனுக்கு ஒரு டைட்டில் கார்டு போட்டிருக்கலாம். படம் பார்ப்போரை முட்டாளாக எண்ணுகிறார்களோ எனும் நினைப்பு படம் பார்க்கும்போது வருவதை தவிர்க்க முடியவில்லை. (மேலும் படிக்க: ஜிகர்தண்டாவை சுட்ட கொரியர்கள்)

திரைக்கதை: 
இவ்வளவு மோசமான திரைக்கதையை நிச்சயம் நான் பீட்சா இயக்குநரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. ஒரு ஒழுங்கே இல்லாமல் நீளும் காட்சிகள், லாஜிக்கே இல்லாமல் ஒரு கிளைமாக்ஸ், கதை முடிந்தபின்னும் ஓடும் படம் என அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. குவாண்டின் டரண்டினோ பாணி என்று ஜல்லியடிக்கிறார்கள். திரைக்கதை விதிகளை கலைத்துப்போட்டு, ஒரு ஒழுங்கற்ற தோற்றத்தை உருவாக்குவதில் அவர் ஜித்தர். ஆனாலும் அதில் ஒரு லயம் இருக்கும். 

வழ வழா கொழ கொழா-விற்கும் அந்த ஒழுங்கற்ற காட்சிகளின் லயத்திற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. கத்தரிக்க வேண்டிய இடத்தில் கத்தரிக்காமல் படத்தை எடுத்துவிட்டு, இசை மற்றும் ஒளிப்பதிவு எனும் இரு ஆயுதங்களைக் காட்டி ‘இது உலக சினிமா தானே?’ என்று மிரட்டுவது நியாயமே அல்ல.

சித்தார்த்தின் இயக்குநர் ஆகும் கதை, சிம்ஹாவின் கதை, விஜய் சேதுபதியின் சினிமா என மூன்று அம்சங்களையும் வைத்து, முழுக்க நான் - லீனியரில் தெளிவாக ஒரு திரைக்கதையை எழுதியிருந்தால், டரண்டினோ பாணி என்று சொல்லியிருக்கலாம். அதற்கும் வழியில்லை. கதை யாருடைய பாயிண்ட் ஆஃப் வியூ, யாருடன் ஆடியன்ஸ் ஐக்கியம் ஆவார்கள் என்று எந்தப் புரிதலும் இல்லாமல் காட்சிகள் வருகின்றன. சிம்ஹா எனும் மகாநடிகன், தன் நடிப்பால் இது என் படம் என்று உணர்த்தியதால், படம் தப்பிக்கிறது.

சிம்ஹா கதைக்காக ரோடு ரோடாக அலையும் சித்தார்த்திடம், ஒரு அடியாள் ‘நான் சொல்றேன் பாஸ்’ என்று கதை சொல்ல ஆரம்பிக்கிறான். நாம் ஆர்வத்துடன் நிமிர்ந்து உட்கார்கிறோம். சட்டென்று ஒரு டூயட் பாடல். என்ன அக்கிரம் ஐயா, இது! ஒரு படம் நீள்கிறதென்றால், அதற்கு ஒரு காரணம் வேண்டும். சிம்ஹா திருந்தியதுமே படம் முடிந்துவிட்டது. 

அப்புறம் சித்தார்த் தாதா மாதிரி ஆவதும் விஜய் சேதுபதியிடம் பேசுவதும் சகிக்க முடியாத காமெடி அல்லவா? லூஸ் மோசன் மாதிரி க்ரிப்பே இல்லாமல், நிற்காமல் போய்க்கொண்டே இருப்பதற்குப் பெயரா திரைக்கதை?

தெய்வீகக் காதல்: 
இந்தப் படத்தின் தரத்தை காலி செய்தது, சித்தார்த் - லட்சுமி மேனன் இடையிலான காதல் எபிசோட் தான். ஒரு புடவை திருடியின் மனதை சித்தார்த்(ஹீரோ அல்ல!) திருடினால்? - என்று ரைமிங்காக யோசித்திருப்பார்கள் போலும். சிம்ஹா கதையைத் தெரிந்துகொள்வதற்காக லட்சுமி மேனனை காதலிப்பதாக நடிக்கிறார் சித்தார்த். சிம்ஹாவே தன் கதையைச் சொல்ல முன் வந்தவுடன், சும்மா தான் நடிச்சேன் என்று உண்மையைச் சொல்லிவிட்டு லட்சுமியிடம் இருந்து விலகுகிறார் சித்தார்த். ஹீரோயின் கடுப்பாகிறார்.

ஹீரோ என்றால் எல்லா விஷயத்திலும் நேர்மையானவனாகத் தான் இருக்க வேண்டும், ஹீரோயின் என்றால் ஹீரோவுக்காக உயிரையே கொடுக்க வேண்டும் எனும் வழக்கமான படங்களைப் போன்று அல்லாமல், ஒரு யதார்த்தமான ஜோடியையும் காதல் என்பது நடைமுறையில் எப்படி இருக்கிறது என்பதையும் முதல்பாதியில் காட்டுகிறது படம். சித்தார்த் கழட்டி விட்டதால் கடுப்பான லட்சுமி மேனன், சிம்ஹாவே ஹீரோவாக நடித்தால் என்ன என்று ஏற்றிவிடுகிறார். ‘சூப்பரப்பு..வந்தாச்சு femme fatale’ என்று ஆர்வமாகிறோம். ஆனால் அந்த பாழாய்ப் போன தெய்வீகக் காதல் விடுமா? மீண்டும் கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்துகிறார்கள்.

சிம்ஹாவுடன் கூட்டணி அமைத்து, ’அவனை கட்டிக்கொள்ளவும் தயார்..ஆனால் சித்தார்த்தை விட மாட்டேன்’ என்று நயவஞ்சமாக ஹீரோயின் கேரக்டர் இறங்கி அடித்திருந்தால், படத்தின் தரம் எங்கேயோ போய் இருக்கும். அப்போது நாமும் இது வழக்கமான படமல்ல என்று ஏற்றுக்கொண்டிருக்கலாம். அந்த மாதிரிக் கேரக்டர்கள் ஒன்றும் நமக்குப் புதிதில்லயே. சுப்ரமணியபுரம் படத்தை உலக சினிமாவாக ஆக்கியது, அந்த ஸ்வாதி கேரக்டர் தானே? Film Noir-ன் ஒரு அடிப்படை அம்சத்தில் புகுந்து விளையாட வாய்ப்புக் கிடைத்தும் தவறவிட்ட படத்தை, எப்படி ஐயா உலக சினிமா என்று கொண்டாடுவது? கடைசிவரை பாடல்காட்சிளுக்கு உதவும் ஊறுகாயாக மட்டுமே ஹீரோயினை உபயோக்கபடுத்தும் ஒரு சராசரிப் படம் எனும் தோற்றத்தை அல்லவா அந்த தெய்வீகக் காதல் கொடுத்துவிட்டது.

ட்விஸ்டோ ட்விஸ்ட்:
ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு பாணி உருவாகி வரும். அதைத் தவிர்க்க முடியாது. அந்த வகையில் கார்த்திக் இந்தப் படத்திலும் பீட்சாவிலும் முயற்சிப்பது ‘ட்விஸ்ட்’ எனும் பெயரில் படத்தின் டோனையே மாற்றும் சர்ப்ரைஸ் பாணி. பீட்சா படத்தில் என்ன நடந்தது? இண்டர்வெல் விட்டபோது, அய்யோ அம்மா என பயந்து பாத்ரூமுக்கு ஓடியவர்கள் ஏராளம். முக்கால்வாசிப் படம் வரை பயந்து நடுங்க வைத்துவிட்டு, ‘பயந்துட்டீங்களா? சும்மா லுல்லுல்லாயி’ என்று சொன்னபோது, நிஜமாகவே மிகவும் ரிலீஃபாக இருந்தது. அது சந்தோசத்தைக் கொடுத்தது. பின்னீட்டான்யா என்று சொல்ல வைத்தது. அதாவது முதல்பாதியில் பேய்க்கதை, இரண்டாம்பாதியில் த்ரில்லர்.

படத்தின் தொனி மாறினாலும், அது சுவாரஸ்யத்தையும் தரத்தையும் கூட்டியது. இந்தப் படத்திலும் அதே பாணியைப் பின்பற்றியிருக்கிறார் கார்த்திக். படத்தின் முதல்பாதி, ஒரு தரமான கேங்க்ஸ்டர் மூவியாக இருக்கிறது. இரண்டாம்பாதியில் காமெடிப் படமாக மாறுகிறது. ஒரு நல்ல விஷயத்தில் இருந்து இன்னொரு மிகநல்ல விஷயத்திற்கு மாறலாம். அது கேரக்டர்களையும் இம்ப்ரூவ் செய்யும். ஆனால் இங்கே ஒரு நல்ல படம், கிக்கிரித்தனமான படமாக ஆகியிருக்கிறது. ‘கேங்ஸ்டர் படம்ன்னு நினைச்சுட்டீங்களா?..சும்மா லுல்லுல்லாயி’ எனும்போது, நமக்கு வரும் கடுப்பு கொஞ்சநஞ்சம் அல்ல.

முதல்பாதியில் ஒரு தொனியிலும் இரண்டாம்பாதியில் வேறொரு வகைக்கும் மாறுவது தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. பார்த்திபன் நடித்த வாய்மையே வெல்லும் படமும், சசிகுமாரின் ஈசன் படமும் இந்த முறையைப் பின்பற்றிய படங்கள் தான். அவை இரண்டுமே கமர்சியலாகத் தோற்ற படங்கள். அதே பாணியில் வந்து பீட்சா வெற்றி பெற்றதற்குக் காரணம், மேலே சொன்ன ‘பெட்டர் டோன்’-க்கு படம் மாறியது தான். ஜிகர்தண்டா கமர்சியலாக வெற்றி பெற்றுவிட்டது ஏன் என்பதைக் கீழே பார்ப்போம். ஆனால் ஒரு இயக்குநராக கார்த்திக்கு இது வீழ்ச்சி தான். இது கொஞ்சம் ரிஸ்க்கான பாணி. இதைச் செய்யும்போது, படம் பெட்டராக மாறுகிறதா என்று பார்த்துக்கொள்வது நல்லது.

வெற்றி..வெற்றி: 
1980களில் சில்க் ஸ்மிதா இருந்தால் போதும், படம் வெற்றி எனும் நிலை சகலகலா வல்லவனுக்குப் பிறகு உருவானது. சில்க் ஸ்மிதாவின் இடத்தை இப்போது பிடித்திருப்பது நகைச்சுவை. ஒழுங்கான திரைக்கதை-இயக்கம் இல்லாத படங்கள்கூட நகைச்சுவை இருந்தால், வெற்றிவாகை சூடுகின்றன. வருத்தப்படாத வாலிபர் சங்கம் தான் இதை ஆரம்பித்து வைத்ததாக ஞாபகம். 
தொடர்ந்து இ.ஆ.பாலகுமாரா, ராஜாராணி, வேலையில்லாப் பட்டதாரி என பல படங்கள், சிரிக்க வைத்தே காசு பார்க்கின்றன. ‘படம்ன்னா ஜாலியா இருக்கணும் பாஸ்..இது படம்’ என வி.ஐ.பி. பற்றி ஒரு நண்பர் சொன்னார். டைம் பாஸ் ஆனால் போதும் எனும் மனநிலைக்கு ரசிகனை கொண்டுசெல்வதையே இந்தப் படங்கள் சொல்கின்றன. இது சினிமாவுக்கு நல்லதல்ல. வி.ஐ.பி ஸ்டைல் வெற்றியை ஜிகர்தண்டா அடைவது, பீட்சா இயக்குநருக்கும் நல்லதல்ல.

பிரச்சினை: 
வி.ஐ.பி. படத்தை ஒரு ஆவரேஜ் படமாகத் தான் விமர்சனங்கள்; குறிப்பாக ஆரம்ப இணைய விமர்சனங்கள் சொல்லின. ஆனால் படம் ஹிட் ஆன பின் எழுதியவர்கள், இந்தப் படத்துக்கு என்னய்யா குறை? என்று எழுதினார்கள். அவர்களிடம் யாரும் இந்தளவுக்கு விவாதிக்கவில்லை. காரணம்,அதை ஒரு தரமான படமாக யாரும் நினைக்கவில்லை. சின்னத்தம்பி, கரகாட்டக்காரன் மாதிரி ஒரு பொழுதுபோக்குப் படம் எனும் அளவில் அதை எடுத்துக்கொண்டோம். ஜிகர்தண்டாவையும் அப்படி எடுத்துக்கொள்ள முடியாததற்குக் காரணம், இயக்குநர் மீதும் இந்தப் படக்குழு மீதும் நாம் வைத்திருந்த நம்பிக்கை. பீட்சாவின் சுவையை இன்னும் நாங்கள் மறக்கவில்லை. இது ஒரு திறமையான இளைஞர் பட்டாளம் என்பதை அறிந்ததாலேயே, கடுமையான விமர்சனங்களை வைக்கிறோம். இந்தப் படத்துடன் ரிலீஸ் ஆன சரபம் ஒரு அட்டக்காப்பி என்று தெரிந்தும், அதை பெரிதாக யாரும் விவாதிக்கவில்லை. பேரரசு படமோ, பொன்ராஜ் படமோ வெளியாகும்போது, இப்படி வேலைமெனக்கெட்டு நாங்கள் விவாதிப்பதில்லை.

நாங்கள் கன்சிடர் செய்வதற்கும் ஒரு தகுதி வேண்டும், அது இந்த டீமிற்கு இருப்பதாலேயே இவ்வளவு எதிர்விமர்சனங்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் வந்தபோதும், இத்தகைய விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் செல்வாவின் விசிறிகள் வீறுகொண்டு எழுந்து ‘உங்களுக்குப் படம் பார்க்கத் தெரியலை..ஒழக சின்மா தெரியுமா உனக்கு?’ எனும் ரேஞ்சில் பதிலடி கொடுத்தார்கள். இன்றைக்கு செல்வா எனும் அற்புதக்கலைஞனை மூலையில் உட்கார வைத்திருக்கிறார்கள். டரண்டினோ, ஆரண்யகாண்டம், மணிரத்னம் என்று அள்ளிவிடுபவர்களிடம், ஜிகர்தண்டா டீம் கவனமாக இருப்பது அவசியம். 
 படத்தின் குறைகளைச் சொன்னால் ‘உனக்கு என்ன சினிமா அறிவு இருக்கிறது?’ என்று லுச்சாத்தனமாகப் பேசாதீர்கள். இதே அறிவுகெட்ட கூட்டம் தான் பீட்சாவையும், சூது கவ்வும் படத்தையும் போற்றிப் புகழ்ந்து தள்ளியது. பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் படத்தைப் பாருங்கள் என்று சொன்னது. அன்று ஈ என்று இளித்தபடி பாராட்டுகளை வாங்கிவிட்டு, இன்று வந்து ;உனக்கு அறிவில்லை’ என்று சொல்வது அயோக்கியத்தனம். அன்றே ‘நீ ஒரு முட்டாள். நீ என் படத்தைப் பற்றிப் பேசாதே’ என்று சொல்லியிருந்தால், அது நேர்மை. இணையக் கூட்டமும் மக்களில் ஒரு பகுதி தான். மக்களை முட்டாள் என்று நினைப்பதை விடவும் கெடுதல் வேறில்லை. 

இந்த விமர்சனங்களுக்குக் காரணமே, உங்கள் மேல் இருக்கும் மரியாதை தான். ‘பிசிறு தட்டுகிறது.சுதி சேரவில்லை’ என்று சொல்கிறோம். அதை பரந்த மனதுடன் ஆராயுங்கள். அது உங்களுக்கும் உங்களிடம் நல்ல படைப்பை எதிர்பார்க்கும் எங்களுக்கும் நல்லது.

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-20)

$
0
0

20.Exposition எனும் நவீன வெளிப்பாடு
புதிதாக திரைக்கதை எழுதும் அமெச்சூர் படைப்பாளிகள் பலரும் மாட்டிக்கொள்வது, இந்த Exposition எனும் ’முன்கதை சொல்லும் உத்தி’யில் தான். Exposition என்றால் என்ன என்பது பற்றி இருவேறு கருத்துகள் உண்டு. கதையின் செட்டப் போர்சனான ‘ஹீரோ யார், என்ன செய்கிறான், அவன் வாழ்க்கை முறை என்ன?’ என்று விளக்கும் ஆக்ட்-1 தான் Exposition என்று வாதிடுவோர் இருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை அது முன்கதை (Exposition) அல்ல, ஆக்ட்-1 தான்.
நாம் திடீரென்று ஹீரோவின் 25 வயதில் கதையை ஆரம்பிக்கிறோம். அதற்கு முன் அவன் வாழ்க்கையில் கதைக்குத் தேவையான சில சிறிய விஷயங்கள் நடந்திருக்கலாம். அதை பார்வையாளர்களுக்குச் சொல்ல வேண்டும். அவனது சில ஸ்பெஷல் குணங்களையும் சொல்ல வேண்டிவரலாம். அவனது குடும்ப பிண்ணனியைப் பற்றியும் சொல்ல வேண்டி வரலாம்.

இதையெல்லாம் நிகழ்காலத்தில் கதை நடக்கும்போதே சொல்ல வேண்டும், சுவாரஸ்யம் கெடாமல். உதாரணமாக இந்த ஓப்பனிங் சீனைப் பாருங்கள்:

ஹீரோ பைக்கை வீட்டின் முன் நிறுத்திவிட்டு வீட்டினுள் நுழைகிறான். ஹாலில் அவன் அம்மா அமர்ந்திருக்கிறார். அவனைப் பார்த்ததும் பேச ஆரம்பிக்கிறார்:

“ஏண்டா இப்படி படிச்சிட்டு வேலைக்குப் போகாம ஊரைச் சுத்துறே? நீ படிச்சு எங்களைக் காப்பாத்துவேன்னு எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைச்சோம். உன் மூத்த அக்காவை கோயம்புத்தூர்ல கட்டிக்கொடுத்தோம். புருசன்கிட்ட சண்டை போட்டுட்டு டைவர்ஸ் வாங்கிட்டு வந்துட்டா. உன் இளைய அக்கா, இன்னும் கல்யாணம் ஆகாம நிக்குறா. உன் மூத்த தங்கச்சி வாய் பேச முடியாத ஊமை. இளையவளுக்கு கண்ணு இப்பவே சரியாத் தெரியலை. உன் அப்பா என்னடான்னா, பகல் எல்லாம் டாஸ்மாக்கே கதின்னு கிடக்கிறார். நைட்டு மட்டும் தான் வீ்ட்டுக்கு வர்றார். அதனால நானும் இப்போ ஆறுமாசமா முழுகாம இருக்கேன். நீயாவது பொறுப்பா இருக்கக்கூடாதா?’

ஹீரோவின் பேக்ரவுண்டைச் சொல்வது தான் இந்த சீனின் நோக்கம். ஆனால் இப்படி அந்தம்மா பேசினால், எவ்வளவு நாடகத்தனமாக இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். வீட்டுநிலைமை ஹீரோவுக்கு நன்றாகவே தெரியும், நமக்குத் தான் தெரியாது. அதை மறந்துவிட்டு, ஹீரோவிடமே அம்மா இப்படி விளக்கினால் நியாயமா? (அஃப்கோர்ஸ், அந்த ஆறுமாச கர்ப்ப விஷயம் வேண்டுமானால் ஹீரோவுக்குத் தெரியாமல் இருக்கலாம்!)

இவையெல்லாம் கதையின் போக்கில் அவ்வப்போது வந்துவிழ வேண்டிய விஷயங்கள். இந்த தகவல்களைத் தருகிறோம் என்பதே உறுத்தாத வகையில், முன்கதையைச் சொல்ல வேண்டியது அவசியம். ஹீரோவின் முன்கதை மட்டும் அல்ல, ஹீரோயின் – வில்லன் என அனைத்து முக்கிய கேரக்டர்களின் முன்கதையும் நாம் சொல்ல வேண்டி வரும். அதைச் சொன்னால்தான், கதையின் போக்கு பார்வையாளர்களுக்குப் புரியும். அதே நேரத்தில் அதைச் சொல்கிறோம் என்பதும் தனித்துத் தெரியக்கூடாது. அது தான் முன்கதை சொல்லும் உத்தியின் (Exposition)-ன் ஸ்பெஷாலிட்டி.
சமீபத்தில் வந்த படங்களில் முன்கதை மோசமாக சொல்லப்பட்ட படம், இது கதிர்வேலன் காதல். சந்தானம் கேரக்டரை அறிமுகப்படுத்த இப்படி ஒரு சீன்:
ஹீரோ சோகமாக அமர்ந்திருக்கிறார். நண்பர் வந்து ‘என்ன மாப்ளே சோகமா இருக்கே?’ என்று கேட்கிறார். ‘இன்னிக்கு என் நண்பனைப் பிரிஞ்ச நாள். நாங்க எப்படி இருந்தோம் தெரியுமா?’ என்று கேட்டுவிட்டு, ஒரு ஓப்பனிங் சாங்.

அதுமுடிந்த உடன், ‘இப்போ எங்க மாப்ளே உன் ஃப்ரெண்ட்?’ என்று கேட்கிறார் நண்பர். ’ ஒரு பிரச்சினையினால பிரிஞ்சிட்டோம். ஆனா மீண்டும் சேர்வோம்; என்று சொல்கிறார் ஹீரோ.

எவ்வளவு நாடகத்தனமாக இருக்கிறது பாருங்கள். இதே போன்றே அக்காவின் முன்கதையும் சொல்லப்பட்டிருக்கும். இதே இயக்குநரின் முதல்படமான சுந்தர பாண்டியனில் நண்பர்களின் முன்கதை உறுத்தாமல் சொல்லப்பட்டிருக்கும். எனவே முன்கதை விஷயத்தில் அதிக கவனமாக இருங்கள். நல்ல க்ரியேட்டிவிட்டியுடன், போதுமான நேரம் எடுத்து இதைச் செய்யவில்லை என்றால், சினிமா நாடகமாக ஆகிவிடும்.

முந்தானை முடிச்சு படத்தில் பாக்கியராஜ் கைக்குழந்தையுடன் அறிமுகம் ஆவார். அவர் மனைவியைப் பற்றி முதலில் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். பிறகு அவர் இறந்துவிட்டார் என்ற ஒருவரி முன்கதை சொல்லப்படும். பிறகு கொஞ்ச நேரம் சென்றபின் ‘அவர்கள் நன்றாக வாழ்ந்தார்கள்’ என்று சொல்லப்படும். பிறகு ‘நான் இறந்தால் வேறு பெண்ணை மணக்கக்கூடாது’ என்று மனைவியிடம் அவர் சத்தியம் கொடுத்தது சொல்லப்படும். எல்லாமே போதுமான இடைவெளியில், கதையில் மேலும் முடிச்சைப் போடும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கும்.

அதே போன்றே முதல் மரியாதையும் சிறப்பாக முன்கதை சொல்லப்பட்ட விஷயம். சிவாஜியின் மனைவி வடிவுக்கரசி ராட்சசி, சகித்துக்கொண்டு வாழ்கிறார், ஜாலியான மனுசன் என்றாலும் ஊரில் மதிப்புடன் வாழ்பவர் என்று பல விஷயங்களும் உறுத்தாமல் காட்சிகளின் வழியாக சிறப்புடன் சொல்லப்பட்டிருக்கும்.

ஒரு நாவல் எழுதுகிறோம் என்றால் ‘ஹீரோ இந்த ஊரில் வசிக்கிறார். அவர் பின்புலம் இது’ என்று வார்த்தைகளிலேயே நேரடியாக வர்ணித்துவிடலாம். ஆனால் சினிமாவில் அதை தவிர்க்க வேண்டும். படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லியே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத சூழல் என்றால், Narration உத்தியில் வாய்ஸ் ஓவரில் தான் சொல்லியாக வேண்டும். புத்திசாலித்தனமாக வசனங்களில் மறைத்துச் சொல்வதாக நினைத்து மாட்டிக்கொள்வதை விட இந்த உத்தி நல்லது.
ஹீரோ நல்லவர் என்பதைச் சொல்ல வேண்டும் என்றால், அவர் நடக்கும்போது இன்னொருவர் ‘யாரு அது, மலைச்சாமியா? நல்ல மனுசன்யா. அடுத்தவங்க காசுக்கு ஆசைப்பட மாட்டான்’ என்று சொல்வது மோசமான முன்கதை சொல்லும் உத்தி. பாக்கியராஜ் ஒரு பேட்டியில் இதை எப்படிச் சொல்லலாம் என்று பேசினார்.

’ஒருவர் தன் பர்ஸ் கீழே விழுந்தது தெரியாமல் நடக்கிறார். ஹீரோ அதை எடுத்து அவரிடம் கொடுக்கிறார்.’ என்று சீன் வைத்தால் போதும். இதை மேலும் மெருகேற்ற, ஹீரோ ஒரு மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்க காசு இல்லாமல் நின்றுகொண்டிருக்கிறார். அப்போது அதே மாதிரி கீழே கிடந்த மணிபர்ஸை எடுத்து, தான் வைத்துக்கொள்ளாமல் திருப்பித் தருகிறார் என்றால் பெட்டராக இருக்கும்.

’மருந்து வாங்க என்ன செய்வார்?’ என்று நாம் யோசிக்கும்வேளையில், அவர் நல்லவர் எனும் முன்கதை நம் மண்டையில் ஏறிவிடும். Save the Cat!

(தொடரும்)


சாட்சி - சிறிய கதை

$
0
0
அந்தப் பெண்ணை நம்ப முடியாமல் பார்த்தபடி நின்றிருந்தேன்.

ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருந்த அவள்என்னைப் பார்த்துவிட்டு திரும்ப ஜன்னல் பக்கமே திரும்பிக்கொண்டாள்.

'ஹலோ..எச்சூஸ்மீஎன்ற தடிமனான குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். அந்த சிங்கப்பூர் ஃப்ளைட்டில் ஏறிய தமிழ்க்'குடிமகனும்’ அவளுக்குப் பின்னே நீன்ட க்யூவும். திடுக்கிட்டுஅவசர அவசரமாக அந்தப் பெண்ணின் அருகே இருந்த சீட்டில் உட்கார்ந்தேன்.

பலமுறை விமானத்தில் பயணம் செய்திருந்தாலும், 'சிஸ்டர்..இன்னும் கொஞ்சம்என்று இறங்கும்வரை சுதியேற்றும் குடிமகன்களிடம் சிக்கிக்கொள்வதே வழக்கம். அதிசயமாக ஒரு பெண். சொக்கா!

எதிரே இருந்த சின்ன டிவி ஸ்க்ரீனில் 'எங்கள் ஃப்ளைட்டில் ஏறினால்எப்படியெல்லாம் பரலோகம் போகலாம்..அதை எப்படித் தவிர்க்க முயற்சிக்கலாம்எனும் வழக்கமான வீடியோ ஓட ஆரம்பித்தது. பெண் இன்னும் ஜன்னலையே முகர்ந்து பார்த்துக்கொன்டிருந்தாள்.

விமானம் ரன் வேயில் ஓட ஆரம்பித்து வேகம் பிடிக்கையில், என் கையை யாரோ இறுகப் பிடிப்பது தெரிந்தது. அருகில் இருந்த பெண்மணி தான். கண்ணை மூடியபடி, என் கையைப் பிடித்தபடி பயத்துடன்! 

எனக்குப் பறப்பது போல் இருந்தது. அது ஃப்ளைட் டேக் ஆஃப் ஆனதால் தானா என்று தெரியவில்லை. இன்னைக்கு அதிர்ஷ்டத்திற்கு மேல் அதிர்ஷ்டமாக இருக்கிறதே என்று ஆச்சரியத்தில் மிதந்தேன்.

விமானம் நேராகப் பறக்க ஆரம்பிக்கவும்என் கை விடுதலை செய்யப்பட்டது.
"ஃபர்ஸ்ட் டைம் ஃப்ளைட்ல வர்றீங்களா?" என்று ஆரம்பித்தேன்.
"இல்லை. ரெண்டு-மூணு மாசத்துக்கு ஒரு தபா  வரும்" என்று வித்தியாசமான உச்சரிப்புடன் பதில் வந்தது.
"தமிழ் இல்லையா?"
"ம்ஹூம்..ஆந்த்ரா"


"என்ன வேலை பார்க்கிறீங்க?"
"அதைச் சொன்னால் போலீஸ் பிடிச்சிடும்"

'ஆஹா..இது ஐட்டமா?' என்று எனக்கு பக்கென்று ஆகியது. சிங்கப்பூரில் அது லீகல் என்பதால்,தொழில் முடித்துத் திரும்புகிறார் என்று புரிந்தது. என் சிங்கப்பூர் நண்பனிடம் என்னை அங்குள்ள ரெட் லைட் ஏரியாவுக்கு கூட்டிப் போகும்படி கெஞ்சியும்அவன் மறுத்துவிட்டான். தவறாக நினைத்து விடாதீர்கள்.

தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த எல்லாருக்கும் போலவேஎனக்கும் இலக்கியவாதி ஆகும் ஆசை உண்டு. பாலியல் தொழிலாளிகள் போன்ற விளிம்புநிலை மனிதரைச் சந்தித்தால்ஒரு காத்திரமான கதையை எழுதிவிடலாம் எனும் நம்பிக்கையும் உண்டு. இது தெரிந்ததால் தான் அவன் மறுத்துவிட்டான். ஏனோஅவனுக்கு இலக்கியவாதிகளைப் பிடிப்பதில்லை.

இருக்கட்டும்..இப்போது பார்த்தால்ஒரு ரெட் லைட்டே அருகே அமர்ந்திருக்கிறது.  நல்ல கதைக்கருவை தேற்றி விட வேன்டும் என்று முடிவு செய்யும்போதே குளிபான மங்கை வந்து'எஸ்..சார்என்று நின்றார். இருவருக்கும் ஜூஸ் வாங்கிக் கொண்டு இலக்கிய விசாரணையை ஆரம்பித்தேன்.

"கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க..எவ்ளோ கிடைக்கும்?"

"மாசம் பத்தாயிரம். டெய்லி எத்தனை பேர் வந்தாலும் ஏத்துக்கணும். மாசத்துல மூணு நாள் கடவுள்  கொடுத்த லீவ்"

"எவ்வளவோ வேலை இருக்கே.இதுக்கு ஏன்...?"

"இருக்கு..விதி"

'ஆஹா..வருது..வருதுஎன்றுநினைத்தபடியே "விதின்னா?"என்றேன்.

'ஊரில் விவசாயம் இல்லை. புருசனும் திடீர்னு இறந்துட்டார். தெரிஞ்ச அக்கா ஒன்னு இதுல இழுத்து விட்டுச்சு. அப்படியே போகுது"

அதே கதை. வறுமை - குடும்ப பாரம் - கே.பாலச்சந்தர்.

இதை இப்போ எழுதினால் மதிக்க மாட்டாங்களே..சரிஒரு க்ரைம் நாவலாவது...

"ஊர்ல தெரிஞ்சிடாதா?" என்றேன்.

"ம்ஹூம்..துபாய்ல மூணு மாசம். இங்கே..பஹ்ரைன்னு மாத்திக்கிட்டே இருப்பாங்க. வருசத்துக்கு ஒரு தபா தான் ஊருக்குப் போவேன். ஃபாரின்ல வீட்டு வேலைன்னு அம்மாபிள்ளைககிட்ட சொல்லி இருக்கேன்."

"ஓ..போற இடத்துல ஏதாவது பிரச்சினைன்னா சிக்கல் தானே"

"இல்லை..அவங்களுக்கு எல்லா லெவல்லயும் ஆள் இருக்கு. காப்பாத்திடுவாங்க"

இமிக்ரேசன் ஃபார்மை நிரப்பிக்கொள்ளும்படி ஏர் ஹோஸ்டஸ் கொடுத்துவிட்டுப் போனார்.

“எனக்குத் தெரியாது. எழுதிக்கொடுங்களேன்” என்றாள்.

சரி அதையாவது செய்வோம் என்று இருவருக்கும் எழுதி முடித்தேன். சற்று நேரம் அமைதியாகக் கழிந்தது. ’இலக்கியம்லாம் வேஸ்ட்டு..எழுதி எவன் சம்பாதிச்சிருக்கான்?’ என்று எனக்கு நானே ஆறுதல் சொல்ல ஆரம்பித்தேன். என்ன நினைத்தாளோ, திடீரென ஹேட்பேக்கில் இருந்து, ஒரு சிறிய மணிபர்ஸை எடுத்தாள்.

அதைப் பிரித்து ஒரு சிறிய பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை எடுத்து என்னிடம் நீட்டினாள்.

“என் வீட்டுக்காரர்”

ஒரு கிராமத்து முகம். என்ன சொல்வதென்று தெரியாமல் அவர் முகத்தைப் பார்த்தேன்.

”எப்பவும் என்கூட வச்சிருப்பேன்”

“எப்பவுமா?”

சட்டென்று கண் கலங்கி “ஆமாம்” என்று சொல்லிவிட்டு, ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டார்.

டிஸ்கி: Based on a real story. 

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-12)

$
0
0

12.வில்லன் - ஹீரோவின் பிரதி பிம்பம்

வணிக சினிமாவில் ஹீரோயினை விடவும் முக்கியமான கேரக்டர் வில்லன் தான். ஹீரோ எப்படி நேர்மறையான விஷயங்களின் தொகுப்போ, அதற்கு நேரெதிராக எதிர்மறை விஷயங்களின் தொகுப்பாக வில்லன் இருக்க வேண்டும். ஹீரோவுக்கு சமமான அல்லது ஹீரோவை விடவும் பலசாலியான மனிதனாக வில்லன் இருக்க வேண்டியது அவசியம். அப்போது தான் ஹீரோ எப்படி அந்த வில்லனை எதிர்கொண்டு ஜெயிப்பான் என்ற ஆர்வம் பார்வையாளர்களுக்கு வரும். சப்பையான, சொங்கியான ஆளாக வில்லனைக் காட்டினால், அங்கே பெரிய சுவாரஸ்யம் இருக்காது. 
’பாட்ஷா’ ஆண்டனி(ரகுவரன்), ’தேவர் மகன்’ மாயா(நாசர்), ’கேப்டன் பிரபாகரன்’ வீரபத்ரன்(மன்சூர் அலிகான்) போன்ற கேரக்டர்களை நம்மால் மறக்க முடியுமா? அவர்களிடம் என்ன ஸ்பெஷாலிட்டி என்று பார்த்தீர்கள் என்றால், அவர்கள் ஹீரோவுக்கு இணையான ஸ்ட்ராங்கான ஆட்களாக இருப்பது தான். வெறுமனே கொடூரமானவன் என்று காட்டுவதைவிட, கூடவே இன்னும் சில குணநலன்களைக் காட்டுவது படத்திற்கு மதிப்பினைக் கூட்டும். அதற்கு நல்ல உதாரணமாக அஞ்சாதே படத்தில் பிரசன்னா செய்த கேரக்டரைச் சொல்லலாம். அற்புதமான கேரக்டர் ஸ்கெட்ச் அது. அந்த கேரக்டர் இப்படித்தான் என்று நமக்கு புரிந்தபின், சும்மா திரையில் வந்தாலே ‘என்ன நடக்குமோ’ என்ற பதற்றம் நம்மிடம் வந்துவிடும்.

ஹிட்ச்காக்கிடம் ஒருமுறை ஒரு பேட்டியில் வில்லன் பற்றிக்கேட்டபோது, Better the villain, Better the Movie என்று சொன்னார். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு வில்லன் கேரக்டரை பெட்டராக, புதியதாக அதே சமயத்தில் வலுவானதாகப் படைக்கிறீர்களோ, அவ்வளவுக்கு படமும் சுவாரஸ்யமாக இருக்கும். தில் படத்தில் வந்த இன்ஸ்பெக்டர் (ஆஷிஷ் வித்யார்த்தி) கேரக்டர் மற்றும் கில்லி(ரீமேக்)யில் வந்த பிரகாஷ்ராஜ் கேரக்டரை நினைவுகூறுங்கள். ஒரு சாமானியன், அதிகார பலம்மிக்க வில்லனுடன் மோதுகிறான் என்பது தான் இரு படங்களிலும் உள்ள ஒற்றுமை. இயக்குநர் தரணி, அந்த வில்லன் கேரக்டர்களை ஹீரோவுக்கு இணையாக படைத்திருப்பார்.
ஹீரோவை மட்டும் ஸ்பெஷலான ஆளாக படைத்துவிட்டு, வில்லனை ஏதோ ஒரு ரவுடியாக, பிண்ணனியில் தெலுங்கு மசாலா இசை ஒலிக்க சிரிக்கும் வில்லனாகக் காட்டுவது இனியும் எடுபடாது. வில்லனின் கேரக்டர் ஸ்கெட்ச் தெளிவாக இருக்க வேண்டும். அவனது பலம் என்ன, எந்த மாதிரி ரியாக்ட் பண்ணுவான் என்பதுவரை ஆடியன்ஸுக்குப் புரிய வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால், வில்லன் என்பவன் ஹீரோவின் எதிர்மறை பிம்பம் தான். ஹீரோ கேரக்டருக்கு எவ்வளவு டீடெய்லாக ஒர்க் பண்ணுகிறீர்களோ, அதே அளவிற்கு வில்லனுக்கும் செய்ய வேண்டும்.

ஹீரோவையும் வில்லனையும் முடிந்தவரை எவ்வளவு சீக்கிரம் மோத வைக்கின்றீர்களோ, அவ்வளவுக்கு நல்லது. நேரடியாக மோதுவது அல்ல, இருவரின் பயணமும்/பிரச்சினையும் சந்திப்பது சீக்கிரம் நிகழ வேண்டும். சில படங்களில் இடைவேளைவரை ஏதேதோ செய்து நேரத்தை ஓட்டிவிட்டு, பிறகு வில்லனிடம் வருகிறார்கள். அது பார்வையாளர்களைத் திருப்திப்படுத்தாது. முடிந்தவரை சீக்கிரமாக இருவரின் சவால்கள் ஆரம்பிக்க வேண்டும். துப்பாக்கியை எடுத்துக்கொண்டால், பஸ்ஸில் குண்டு வெடிப்பு நிகழ்வது படம் ஆரம்பித்த இருபது நிமிடங்களுக்குள். அங்கே இருந்தே ஹீரோவுக்கும் வில்லனுக்குமான போர் ஆரம்பமாகி விடுகிறது. அந்த வில்லன் கேரக்டரை மறக்க முடியுமா!

மேலே கொடுத்த வில்லன் உதாரணங்களைக் கவனியுங்கள். ஒவ்வொரு வில்லனுமே தனித்தன்மை வாய்ந்தவர்கள். படத்திற்காக கெட்டது செய்யும் செயற்கையான வில்லன்கள் அல்ல அவர்கள். அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கைமுறை, சில நேரங்களில் தவறான லட்சியம், எதற்கும் துணியும் மனநிலை, அதிகார வர்க்கத்தின் ஆதரவு என பல தனித்தன்மையான விஷயங்கள் இருக்கின்றன. எனவே உங்கள் வில்லனுக்கும் அப்படி ஒரு வலுவான கேரக்டர் ஸ்கெட்ச்சை உருவாக்க முடியுமா என்று பாருங்கள். ஹீரோவுக்கு இருப்பதைப் போலவே வில்லனுக்கும் ஒரு லட்சியம் இருந்தால், அது ஹீரோவின் லட்சியத்துடன் மோதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், வில்லன் என்பது மனிதனாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. முதல் மரியாதை போல் சூழ்நிலையாகக்கூட இருக்கலாம். ஷங்கர் படங்கள் போன்று சமூகப் பிரச்சினையாகக்கூட இருக்கலாம். ஜெண்டில்மேன் - இந்தியனில் போலீஸ் கேரக்டர்கள் வருமேயொழிய, அவர்கள் வில்லன் கிடையாது. எனவே வில்லனை உடல்ரீதியான ஒன்றாக அமைக்காமல் மனரீதியான ஒன்றாகவும் அமைப்பது நல்ல வழிமுறை. சித்திரம் பேசுதடி படத்தில் பாவனா அப்பாவின் இச்சை தான் வில்லனாக வரும்.

உங்கள் கதையில் வில்லன் யார், எப்படி இருக்கிறான் என்று பாருங்கள். அடுத்த வாரம், மேலும் சில உதாரணங்களுடன் வில்லனை துவைத்துக் காயப்போடுவோம்!

(தொடரும்)


Viewing all 271 articles
Browse latest View live